நிகழ்வு-செய்தி
“சயுரத சூரிய மாங்கல்யம் - 2025” சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு விழா சிதுரல கப்பலில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது
 
           இலங்கை கடற்படையினர், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் வணிக சேவை மற்றும் ஹரித தொலைக்காட்சி ஆகியவற்றால் ஏற்பாடு செய்யப்பட்ட “சயுரத சூரிய மாங்கல்யம் - 2025” சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு விழா 2025 ஏப்ரல் 14 ஆம் திகதி அன்று இலங்கை கடற்படை கப்பலான சிந்துரலவில் பாரம்பரிய ஹெல பழக்கவழக்கங்கள் மற்றும் கலாச்சார கூறுகளுடன் நடைபெற்றது.
15 Apr 2025
கடற்படையால் முக்கியமான உடல்நலம் மற்றும் அவசரகால மேலாண்மை குறித்து மீனவ சமூகத்தை மேம்படுத்துவதற்கான நிகழ்ச்சி திட்டம்
 
           "க்ளீன் ஶ்ரீ லங்கா" தேசிய திட்டத்தின் கீழ் சமூகத்தின் சமூக வலுவூட்டலுக்கு பங்களிக்கும் வகையில், இலங்கை கடற்படையினரின் மூலம், கடலில் முக்கியமான சுகாதாரம் மற்றும் அவசரகால மேலாண்மை குறித்து மீனவ சமூகத்திற்கு கல்வி கற்பிப்பதற்கும் அதிகாரம் அளிப்பதற்கும் ஒரு பயிற்சித் திட்டத்தை 2025 ஏப்ரல் 11 ஆம் திகதி அன்று வாழைச்சேனை மீன்வளத் துறைமுக வளாகத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது.
15 Apr 2025
கடற்படை தாதியர் கல்லூரியில் 2024 தாதியர் பயிற்சியை முடித்த 34 தாதியர் மாணவர்கள் சேவைக்கு அர்ப்பணிப்பு உறுதிமொழி வழங்கினர்
 
           ஜெனரல் சர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் கூட்டு சுகாதார அறிவியல் பீடத்துடன் இணைக்கப்பட்ட இலங்கை கடற்படை கப்பல் தக்ஷிலா நிறுவனத்தில் நிறுவப்பட்ட கடற்படை தாதியர் கல்லூரியின் 2024 ஆம் ஆண்டு ஆட்சேர்ப்பில் சேர்ந்த 34 இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை தாதியர் மாணவர்களின் பதவியேற்பு விழா 2025 ஏப்ரல் 09 ஆம் திகதி கடற்படைத் தலைமையகத்தில் உள்ள அட்மிரல் சோமதிலக திசாநாயக் கேட்போர் கூடத்தில் கடற்படைத் தளபதியின் தலைமை அதகாரி ரியர் அத்மிரல் டேமியன் பெர்னான்டோ அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
15 Apr 2025
பேராசிரியர் மருத்துவர் கொமடோர் (பல் மருத்துவம்) ஐ.டபிள்யூ.ஏ.பி.டி பலிபான ஶ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பல் மருத்துவ பீடத்தின் பீடாதிபதியாக நியமிக்கப்பட்டார்
 
           ஶ ஜயவர்தனபுரப் பல்கலைக்கழக பல் மருத்துவ பீடத்தின் பீடாதிபதியாக, மறுசீரமைப்பு பல் மருத்துவப் பேராசிரியர் மற்றும் கடற்படை பல் சேவையின் வெளிப்புற ஆலோசகராகவும், பணியாற்றி வரும் மருத்துவர் கொமடோர் (பல்) ஐ.டபிள்யூ.ஏ.பி.டி பலிபான 2025 ஏப்ரல் 08 ஆம் திகதி தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.
15 Apr 2025


