நிகழ்வு-செய்தி

இலங்கை நிரந்தர மற்றும் தன்னார்வ கடற்படையின் 257வது ஆட்சேர்ப்பைச் சேர்ந்த 419 பயிற்சி மாலுமிகள் வெளியேறிச் செல்கின்றனர்.

இலங்கை நிரந்தர மற்றும் தன்னார்வ கடற்படையின் 257வது ஆட்சேர்ப்பைச் சேர்ந்த இருநூற்று அறுபத்தாறு (266) நிரந்தர பயிற்சி மாலுமிகள் மற்றும் நூற்று ஐம்பத்து மூன்று (153) தன்னார்வ பயிற்சி மாலுமிகள் அடங்கிய நானூற்று பத்தொன்பது (419) மாலுமிகள், தங்கள் அடிப்படைப் பயிற்சியை வெற்றிகரமாக முடித்து, 2025 ஏப்ரல் 29 அன்று புனேவையில் உள்ள இலங்கை கடற்படை கப்பல் ஷிக்‌ஷா நிறுவனத்தின் பிரதான பயிற்சி மைதானத்தில் இருந்து வெளியேறிச் சென்றனர். இலங்கை கடற்படை கப்பல் ஷிக்‌ஷா நிறுவனத்தின் தளபதி மற்றும் கட்டளை அதிகாரி கெப்டன் லக்ஷ்மன் அமரசிங்கவின் அழைப்பின் பேரில், கடற்படையின் பிரதிப் பிரதானியும் கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதியுமான ரியர் அட்மிரல் சிந்தக குமாரசிங்க வெளியேறிச் செல்லும் அணிவகுப்பில் பிரதம விருந்தினராகப் பங்கேற்றார்.

01 May 2025