நிகழ்வு-செய்தி

திருகோணமலை திஸ்ஸ கல்லூரியில் இலங்கை கடற்படை சமூக சுகாதார நிகழ்வொன்றை நடத்தியது

இலங்கை கடற்படையினர், திருகோணமலை சுகாதார மருத்துவ அதிகாரிகளுடன் இணைந்து, தனிப்பட்ட சுகாதாரம், சுகாதாரம், நோய் தடுப்பு மற்றும் அடிப்படை அவசர சிகிச்சை ஆகிய துறைகளில் பாடசாலை மாணவர்களின் அறிவு மற்றும் தயார்நிலையை மேம்படுத்துவது குறித்த சமூக சுகாதார விழிப்புணர்வு திட்டத்தை 2025 மே 14 மற்றும் 15 ஆகிய திகதிகளில் திருகோணமலை திஸ்ஸ கல்லூரியில் வெற்றிகரமாக நடத்தினர்.

18 May 2025

கடற்படையின் சமூகப் பணித் திட்டத்தின் கீழ் அனுராதபுரம் மாவட்டத்தில் நிறுவப்பட்ட 06 மீள் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் பொதுமக்களுக்காக கையளிக்கப்பட்டன

அனுராதபுரம் மாவட்டத்தின் இபலோகம பிரதேச செயலகப் பிரிவில் உள்ள சங்கட்டேவ, தம்பெலஸ்ஸாகம, கோனபதிராவ, ததுசென்புர மற்றும் புளியங்குளம் ஆகிய கிராமங்களில் கடற்படையின் தொழில்நுட்ப மற்றும் கைவினைக் கலை உதவியுடனும் ஜனாதிபதி செயலகத்தின் நிதி உதவியுடனும் நிறுவப்பட்ட மீள் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் 2025 மே 16 ஆம் திகதி பொதுமக்களுக்காக கையளிக்கப்பட்டன.

18 May 2025