திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியால் ஐந்தாவது முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட ‘Commandant’s Cup Sailing Regatta - 2025’ பாய்மரப் போட்டி,திருகோணமலை செண்டி பே இல் 2025 ஆகஸ்ட் 20, முதல் நான்கு (04) நாட்கள் வெற்றிகரமாக நடைபெற்றது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் கோப்பைகள் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொட அவர்களின் தலைமையில் 2025 ஆகஸ்ட் 23, அன்று வழங்கப்பட்டன.