இலங்கையில் நச்சு மருந்துகள் மற்றும் ஆபத்தான மருந்துகளின் பயன்பாட்டைத் தடுப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் தேசிய மூலோபாயத் திட்டங்கள் குறித்து விவாதிக்கும் சிறப்புக் கூட்டம் 2025 செப்டம்பர் 03 அன்று கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பனகொடவின் தலைமையில் நடைபெற்றதுடன், அவர் நச்சு மருந்துகள் மற்றும் ஆபத்தான மருந்துகளின் பயன்பாட்டைத் தடுப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் ஜனாதிபதி இப்பணிக்குழுவின் தலைவராக பணியாற்றுகிறார்.