நிகழ்வு-செய்தி
மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்குக் கொண்டுவருவதற்காக மனிதாபிமான உதவி மற்றும் அனர்த்த நிவாரணம் வழங்குவதில் கடற்படையின் தொடர்ச்சியான ஆதரவு
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவி மற்றும் அனர்த்த நிவாரணம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளை வழங்குவதற்காக முழு தீவையும் உள்ளடக்கும் வகையில் ஒரு சிறப்பு திட்டத்தை கடற்படை செயல்படுத்தி வருகின்றது. இதன் கீழ், கடற்படை இன்று (2025 டிசம்பர் 03) மனிதாபிமான உதவி மற்றும் அனர்த்த நிவாரண நடவடிக்கைகளில் பங்களித்தது. இதில் சிலாபம், அத்தனகொட வித்தியாலயம், ஹங்வெல்ல பஹத்கம ரோமன் கத்தோலிக்க வித்தியாலயம்,கடுவளை அபிநவராமய மற்றும் கடுவெல பேருந்து நிலையம் ஆகியவைற்றை சுத்தம் செய்தல்; கண்டி மற்றும் தலத்துஓயா பிரதேச செயலகங்களுக்கு உலர் உணவுப் பொருட்களை பொதி செய்வதில் உதவுதல் மற்றும் நாத்தண்டிய பகுதியில் குடிநீர் கிணறுகளை சுத்தம் செய்தல் ஆகியவை அடங்கும்.
03 Dec 2025
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையங்களின் நீருக்கடியில் பராமரிப்புக்காக கடற்படை சுழியோடியின் உதவி
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவி மற்றும் அனர்த்த நிவாரணம் வழங்குவதற்காக கடற்படை முழு தீவு முழுவதும் ஒரு சிறப்பு திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. இதன் கீழ், ஊவா மாகாண நீர் வழங்கல் வாரியத்தின் கீழ் உள்ள மஹியங்கனை நீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் மத்திய மாகாண நீர் வழங்கல் வாரியத்தின் கீழ் உள்ள பேராதெனிய கட்டம்பே நீர் சுத்திகரிப்பு நிலையம் ஆகியவற்றில் வெள்ளத்தால் சேதமடைந்து செயலிழந்த நீர் பம்புகளை பழுதுபார்ப்பதற்கும் பராமரிப்பதற்கும் கடற்படை சுழியோடி உதவியை வழங்கியது.
03 Dec 2025
சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்க பாகிஸ்தான் கடற்படையின் போர்க்கப்பல் PNS SAIF தீவுக்கு வருகிறது
தீவை பாதித்த சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 2025 நவம்பர் 28 ஆம் திகதி பாகிஸ்தான் கடற்படை போர்க்கப்பலான PNS SAIF இலிருந்து ஒரு தொகுதி மனிதாபிமான உதவிகள் வழங்கப்பட்டதுடன், இது சமீபத்தில் சர்வதேச கடற்படை ரோந்துக்காக தீவுக்கு வந்தது.
03 Dec 2025
சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்க இந்திய போர்க்கப்பல்கள் தீவுக்கு வந்தன
2025 நவம்பர் 28 ஆம் திகதி சர்வதேச கடற்படை ரோந்துக்காக சமீபத்தில் தீவை வந்தடைந்த இந்திய கடற்படையின் INS VIKRANT மற்றும் INS UDAYGIRI போர்க்கப்பல்கள், தீவை பாதித்த சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்கின.
03 Dec 2025


