சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு மீட்டெடுக்க மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரணம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளை வழங்க கடற்படையால் செயல்படுத்தப்பட்ட சிறப்பு திட்டத்தின் கீழ், இன்று (2025 டிசம்பர் 06) புத்தளம், அனுராதபுரம், கண்டி, நுவரெலியா, திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய பேரிடர் நிவாரணம் மற்றும் மனிதாபிமான உதவி நடவடிக்கைகளுக்கு கடற்படையினர் பங்களித்தனர்.