நிகழ்வு-செய்தி

தித்வா புயலால் சிவனொளிபாதமலைக்குச் செல்லும் சாலையை சீர்செய்ய கடற்படை உதவியது

'தித்வா' புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மீட்டெடுக்கும் பொருட்டு, தீவு முழுவதும் உள்ள பாலங்கள், பாதைகள், வீடுகள், குடிநீர் கிணறுகள் மற்றும் பொது இடங்களை சுத்தம் செய்து பழுதுபார்க்கும் சிறப்பு திட்டத்தை கடற்படை செயல்படுத்தியுள்ளதுடன், இந்த திட்டத்தின் கீழ், 2025 டிசம்பர் 31 அன்று சிவனொளிபாதமலைக்கு செல்லும் வழியில் மகாகிரிதம்ப பகுதியில் சேதமடைந்த படிகளை சரிசெய்ய முப்படைகளின் பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட்ட மறுசீரமைப்பு பணிகளுக்கு கடற்படை உதவிகளை வழங்கியது.

05 Jan 2026

கடற்படை மற்றும் கடலோர காவல்படை வீரர்களின் ஒரு நாள் சம்பளம் ‘Rebuilding Sri Lanka’ நிதிக்கு நன்கொடையாக வழங்கப்பட்டது

இலங்கையின் சமீபத்திய வரலாற்றில் மிக மோசமான இயற்கை பேரழிவுகளில் ஒன்றான 'தித்வா' புயலால் ஏற்பட்ட பெரும் சேதத்தைத் தொடர்ந்து நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதை நோக்கமாகக் கொண்ட 'Rebuilding Sri Lanka' நிதிக்கு, இலங்கை கடற்படை மற்றும் கடலோர காவல்படைத் திணைக்களத்தில் பணியாற்றும் அனைத்து கடற்படை வீரர்களின் 2025 டிசம்பர் மாத ஒரு நாள் சம்பளத்தை கடற்படை 2025 டிசம்பர் 31 ஆம் திகதி வரவில் வைப்பிலிட்டது.

05 Jan 2026