நிகழ்வு-செய்தி

சர்வதேச போர்க்கப்பல் கண்காணிப்பில் கடற்படைத் தளபதி பங்கேற்றார்

இந்திய கடற்படையால் ஏற்பாடு செய்யப்பட்ட பலதரப்பு கடற்படைப் பயிற்சியான MILAN - 26 மற்றும் சர்வதேச கடற்படை கப்பல்கள் கண்காணிப்பு -2026 ஆகியன பிப்ரவரி 18 முதல் 26 வரை இந்தியாவின் விசாகப்பட்டினம் துறைமுகம் மற்றும் வங்காள விரிகுடாவின் கிழக்கு இந்திய கடற்கரையை மையமாகக் கொண்டு நடைபெறும். 2026 பிப்ரவரி 18, அன்று கிழக்கு இந்தியப் பெருங்கடலில் நடைபெற்ற இந்த பலதரப்பு கடற்படைப் பயிற்சியின் ஒரு முக்கிய அங்கமான சர்வதேச கடற்படை கப்பல்கள் கண்காணிப்பில் இலங்கை கடற்படையைப் பிரதிநிதித்துவப்படுத்தி, இலங்கை கடற்படைக் கப்பல்களான சாகர மற்றும் நந்திமித்திர ஆகியவை பங்கேற்றன. இந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் Dinesh K Tripathi யின் அழைப்பின் பேரில் இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொட பங்கேற்றதுடன், பிராந்திய மற்றும் உலகளாவிய நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் போர்க்கப்பல்களை இந்திய கௌரவ ஜனாதிபதி கண்காணித்தார்.

22 Feb 2026