நிகழ்வு-செய்தி
கின்னஸ் உலக சாதனை படைப்பதற்காக, ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் பிரின்ஸ்லி லியனகே தனது ஓட்டத்தைத் தொடங்கினார்
ரியர் அட்மிரல் பிரின்ஸ்லி லியனகே (ஓய்வு), (Manual Treadmill) இல் 48 மணி நேரம் தொடர்ச்சியாக ஓடி கின்னஸ் உலக சாதனை (01) ஒன்றை படைப்பதற்காக, உலக சாதனை படைக்க சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மேற்பார்வையின் கீழ், இன்று (2026 மார்ச் 20) காலை 1000 மணிக்கு கொழும்பு கடற்படைத் தளத்தில் தனது ஓட்டத்தைத் தொடங்கினார். இந்நிகழ்வில் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் கௌரவ சுனில் குமார கமகே மற்றும் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொ ட ஆகியோர் கலந்துகொண்டனர்.
20 Mar 2026
இலங்கை பாதுகாப்பு தூதுக்குழு ஜப்பானில் உயர்மட்ட சந்திப்புகளில் மேட்கொண்டது
இலங்கை பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) தலைமையிலான உயர்மட்ட பாதுகாப்பு தூதுக்குழு, 2ஆம் ஜப்பான்–இலங்கை பாதுகாப்பு கலந்துரையாடலில் பங்கேற்பதற்காக ஜப்பானுக்கு இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தைத் மேட்கொண்டது. இந்த முக்கிய நிகழ்வு, குறிப்பாக பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் கடல்சார் பாதுகாப்பு துறைகளில் இரு நாடுகளுக்கிடையேயான நீண்டநாள் நட்பு மற்றும் மூலோபாய ஒத்துழைப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
20 Mar 2026
GAJABAHU கப்பலில் இலங்கை கடற்படையின் பணிக்குழுப் பிரதானி ரியர் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோவை சிறப்புத் தூதுவர் கோர் சந்தித்தார்
எமது நீண்டகால கடல்சார் பங்காண்மையின் வலிமையினை அடையாளப்படுத்தும் வகையில் தற்போது இலங்கை கடற்படையில் சேவையிலீடுபட்டுள்ள முன்னாள் அமெரிக்க கடலோர காவற்படைக் கப்பலான SLNS GAJABAHU கப்பலில் இலங்கை கடற்படையின் பணிக்குழுப் பிரதானி ரியர் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோவை சிறப்புத் தூதுவர் கோர் சந்தித்தார். இலங்கையை வந்தடைவதற்காக பசிபிக் சமுத்திரத்தினூடாக தற்போது பயணித்துக்கொண்டிருக்கும் நான்காவது முன்னாள் அமெரிக்க கடலோர காவற்படைக் கப்பலான ex-DECISIVE எமது கடல்சார் பாதுகாப்புப் பங்காண்மை மற்றும் பிராந்திய ஒத்துழைப்பு ஆகியவற்றை மேலும் விரிவுபடுத்தும்.
20 Mar 2026


