நிகழ்வு-செய்தி

இலங்கை கடற்படையின் பங்களிப்புடன் நாகதீப புராண ரஜ மகா விகாரையில் சமய நிகழ்ச்சிகள் நடைப்பெற்றன

யாழ்ப்பாணம் நயினாதீவு தீவில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க நாகதீப புராண ராஜ மகா விகாரையில் 2026 ஏப்ரல் 02 மற்றும் 03 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்ற சமய நிகழ்ச்சிகளுக்கு இலங்கை கடற்படை தனது பக்தி ஆதரவை வழங்கியது. அதன்படி, நாகதீப புராண ராஜ மகா விகாரையின் தலைமைப் பொறுப்பாளரும், வட இலங்கையின் தலைமை சங்கநாயக்கருமான வணக்கத்திற்குரிய நவதகல பதுமகிதி திஸ்ஸ தேரர் அவர்களின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றியும், கடற்படைத் தளபதியின் அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டுதலின் பேரிலும், வடக்கு கடற்படை கட்டளைத் தளபதியின் மேற்பார்வையின் கீழ், 02 ஏப்ரல் 2026 அன்று இரவு ஒரு இனிமையான பிரசங்கம் நிகழ்த்தப்பட்டதன் பின்னர், 03 ஏப்ரல் 2026 ஆம் திகதி வணக்கத்திற்குரிய சங்கத்தின் முப்பது (32) உறுப்பினர்களுக்கு தானம் வழங்கப்பட்டன.

07 Apr 2026

கடற்படையின் பங்களிப்புடன், கொழும்புத் துறைமுகத்தில் உள்ள UCT இறங்குத்துறையில், இரசாயன, உயிரியல், கதிரியக்க மற்றும் அணுசக்தி அபாயங்கள் குறித்த பயிற்சி வெற்றிகரமாக நடத்தப்பட்டது

இரசாயன, உயிரியல், கதிரியக்க மற்றும் அணுசக்தி (CBRN) அவசர அச்சுறுத்தல் ஏற்படும் பட்சத்தில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு பயிற்சி ஒத்திகையை, இலங்கை கடற்படையானது 31 மார்ச் 2026 அன்று கொழும்பு துறைமுகத்தில் உள்ள ஒற்றுமை கொள்கலன் முனைய (UCT) இறங்குதுறையில் வெற்றிகரமாக நடத்தியது.

07 Apr 2026