நிகழ்வு-செய்தி

கோவிட் -19 வைரஸ் தொற்று குணமடைந்த 59 கடற்படை வீரர்கள் வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர்- குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 121 ஆக அதிகரிப்பு

கோவிட் -19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவந்த மேலும் 59 கடற்படை வீரர்கள் 2020 மே 13 ஆம் திகதி நடத்திய பி.சி.ஆர் பரிசோதனையின் பின் குறித்த வைரஸ் உடலில் இல்லை என்பதை உறுதிப்படுத்தப்பட்டதுடன் வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர்.

14 May 2020

சர்வதேச சிங்க சங்கம் மற்றும் சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்பு மூலம் பல சுகாதார உபகரணங்கள் கடற்படைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டன

நாட்டிற்குள் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த இலங்கை கடற்படை மேற்கொள்கின்ற நடவடிக்கைகளுக்கு தெவையான பல முகமூடிகள் மற்றும் சுகாதார உபகரணங்கள் சர்வதேச சிங்க சங்கம் மற்றும் சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்பு மூலம் இன்று (2020 மே 13) கடற்படையிடம் வழங்கப்பட்டன.

13 May 2020

வெற்றிகரமான தனிமைப்படுத்தல் செயல்முறைக்குப் பிறகு கடற்படை வீரர்களின் 223 குடும்ப உறுப்பினர்கள் தங்களது வீடுகளுக்கு செல்லல்

தங்களது தனிமைப்படுத்தப்பட்ட செயல்முறை வெற்றிகரமாக முடித்து, 58 குடும்பங்களைச் சேர்ந்த கடற்படை வீரர்களின் 223 குடும்ப உறுப்பினர்கள் 2020 மே 12 மற்றும் 13 ஆம் திகதிகளில் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களை விட்டு வெளியேறினர்.

13 May 2020

கோவிட் -19 வைரஸ் தொற்றுக்கு இலக்கான 10 கடற்படை வீரர்கள் பூரண குணத்துடன் வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர்

கோவிட் -19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவந்த மேலும் 10 கடற்படை வீரர்கள் மீது நடத்திய பி.சி.ஆர் பரிசோதனையின் பின் குறித்த வைரஸ் அவர்களின் உடலில் இல்லை என்பதை உறுதிப்படுத்தப்பட்டதுடன் 2020 மே 12 ஆம் திகதி வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர்.

13 May 2020

கடற்படையினரால் பல வெடிபொருட்கள் கண்டு பிடிக்கப்பட்டன

2020 மே 12 ஆம் திகதி சலாய் பகுதியில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது பல வெடிபொருட்கள் கடற்படையினரால் கண்டு பிடிக்கப்பட்டன.

13 May 2020

நீரில் மூழ்கிய நபரின் சடலத்தை கடற்படையினரால் மீட்பு

மொனராகலை, முத்துகண்டிய நீர்த்தேக்கத்தில் மூழ்கி காணாமல் போன ஒருவரின் சடலத்தை 2020 மே 12 அன்று கடற்படையால் கண்டுபிடிக்கப்பட்டது.

13 May 2020

சட்டவிரோத கஞ்சா தோட்டமொன்று கடற்படை உதவியுடன் சுற்றிவலைப்பு

கடற்படை மற்றும் அம்பலன்தோட்டை பொலிஸ் சிறப்பு பணிக்குழு ஒருங்கிணைந்து 2020 மே 12 ஆம் திகதி தனமல்வில பகுதியில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது ரகசியமாக பயிரிடப்பட்ட கஞ்சா தோட்டமொன்று சுற்றிவலைக்கப்பட்டதுடன் அங்கிருந்த ஒரு சந்தேகநபரும் (01) கைது செய்யப்பட்டார்.

13 May 2020

கோவிட் -19 வைரஸ் தொற்றுக்கு இலக்கான 19 கடற்படை வீரர்கள் பூரண குணத்துடன் வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர்

கோவிட் -19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவந்த மேலும் 19 கடற்படை வீரர்கள் 2020 மே 11 ஆம் திகதி நடத்திய பி.சி.ஆர் பரிசோதனையின் பின் குறித்த வைரஸ் உடலில் இல்லை என்பதை உறுதிப்படுத்தப்பட்டதுடன் வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர்.

12 May 2020

ரிச்மண்ட் கல்லூரி 2004 ஆம் ஆண்டு குழுவினர் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும் கடற்படை நடவடிக்கைகளுக்காக பல சுகாதார உபகரணங்கள் நன்கொடையாக வழங்கினர்

கடற்படை தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் பணியாற்றும் கடற்படை வீரர்களின் பாதுகாப்புக்கு தேவையான பல சுகாதார உபகரணங்கள் ரிச்மண்ட் கல்லூரி 2004 ஆம் ஆண்டு குழுவினரால் இன்று (2020 மே 12) தென்கிழக்கு கடற்படை கட்டளை தலைமையகத்தில் வைத்து கடற்படையிடம் நன்கொடையாக வழங்கப்பட்டன.

12 May 2020

சட்டவிரோத உள்ளூர் மதுபானங்களை தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களுடன் ஒரு சந்தேக நபர் கடற்படை உதவியுடன் கைது

இலங்கை கடற்படை மற்றும் பொலிஸ் சிறப்பு பணிக்குழு ஒருங்கிணைந்து 2020 ஏப்ரல் 11 ஆம் திகதி மாதரை பகுதியில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது சட்டவிரோத உள்ளூர் மதுபானங்கள் தயாரிக்கப் பயன்படுத்திய பல உபகரணங்களுடன் ஒரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

12 May 2020