நிகழ்வு-செய்தி

வரலாற்று சிறப்புமிக்க தீகவாபி மஹா சே கர்பாவின் நினைவுச்சின்னங்கள் மற்றும் பொக்கிஷங்களை அடக்கம் செய்யும் நிகழ்வுடன், கடற்படையின் தொழில்நுட்ப மற்றும் தொழிலாளர் பங்களிப்புடன் கட்டப்பட்ட சந்தாகார மண்டபம் திறப்பு

வரலாற்றுச் சிறப்புமிக்க தீகவாபி தூபி மன்னனின் கருவறையில் புனித தாது மற்றும் பொக்கிஷங்களைச் சேர்ப்பது; இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் தலைவரும் ஆயுதப்படைகளின் தலைமைத் தளபதியுமான திரு.ரணில் விக்கிரமசிங்க அவர்களின் தலைமையில், பாதுகாப்புச் செயலாளர் நாயகம் கமல் குணரத்ன (ஓய்வு), பாதுகாப்புப் படைகளின் பிரதானி மற்றும் முப்படைகளின் தளபதிகள் (2024 14 ஜூலை) இன்று, பங்கேற்றினர், இதன்படி கடற்படையினரின் தொழில்நுட்ப, மற்றும் தொழிலாளர்களின் பங்களிப்புடன் நிர்மாணிக்கப்பட்ட 'பரிசுத்த தரணாகம குசலதம்ம நாஹிம் ஞாபகார்த்த மண்டபம்' திறந்துவைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா கலந்து கொண்டார்.

15 Jul 2024

சீஷெல்ஸ் குடியரசின் பாதுகாப்புப் படைகளின் பிரதானி பிரிகேடியர் மைக்கல் ரொசெட் (Brigadier Michael Rosette) இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்

சீஷெல்ஸ் குடியரசின் பாதுகாப்புப் படைகளின் பிரதானி பிரிகேடியர் மைக்கல் ரொசெட் (Brigadier Michael Rosette) அவர்கள் எட்டு (08) நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று (2024 ஜூலை 14) காலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் ஊடாக இலங்கைக்கு வந்தடைந்ததுடன், கடற்படை கட்டளை அதிகாரி (வெலிசர), கொமடோர் பிரசாத் ஜயசிங்க, அவரை அன்புடன் வரவேற்றார்.

14 Jul 2024

ரியர் அட்மிரல் சமன் பெரேரா கடற்படை சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்

35 வருடங்களுக்கும் மேலாக சிறப்பான சேவை மற்றும் இலங்கை கடற்படைக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியதன் பின்னர், ரியர் அட்மிரல் சமன் பெரேரா தனது புகழ்பெற்ற கடற்படை சேவையிலிருந்து இன்று (2024 ஜூலை 13)ஓய்வு பெற்றார்.

13 Jul 2024

மேற்கு கடற்படை கட்டளையின் பதில் தளபதியாக ரியர் அட்மிரல் சிந்தக குமாரசிங்க பதவியேற்றார்

மேற்கு கடற்படை கட்டளையின் பதில் தளபதியாக ரியர் அட்மிரல் சிந்தக குமாரசிங்க இன்று (2024 ஜூலை 12,) கட்டளைத் தலைமையகத்தில் பதவியேற்றார்.

12 Jul 2024

துருக்கி குடியரசின் கடற்படைக்கு சொந்தமான 'TCG KINALIADA' என்ற கப்பல் தனது உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு தீவை விட்டு வெளியேறியது

உத்தியோகபூர்வ விஜயத்திற்காக 2024 ஜூலை மாதம் 9 ஆம் திகதி இலங்கைக்கு வந்த துருக்கிக் கடற்படைக்கு சொந்தமான 'TCG KINALIADA' என்ற கப்பல், இலங்கை கடற்படைக் கப்பலான கஜபாஹுவுடன் இணைந்து மேற்கொண்ட கூட்டு கடற்படைப் பயிற்சியின் பின்னர் குறித்த கப்பல் உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்ததுடன், இலங்கை கடற்படையினர் கொழும்பு துறைமுகத்தில் கடற்படையின் பாரம்பரிய முறைப்படி கப்பலுக்கு பிரியாவிடை செய்தனர்.

12 Jul 2024

கடற்படையின் இரத்த தான திட்டம்

இலங்கை கடற்படையின் மற்றுமொரு சமூக செயலாக ஏற்பாடு செய்யப்பட்ட இரத்த தான நிகழ்ச்சி இன்று (2024 ஜூலை 12,) வடமேற்கு கடற்படை கட்டளை வைத்தியசாலை வளாகத்தில் இடம்பெற்றது.

12 Jul 2024

அரச வைத்தியசாலைகளில் இருந்து சுகாதார சேவைகளைப் பெறுவதில் 'விருசர' சலுகை அட்டை வைத்திருப்பவர்களுக்கு முன்னுரிமை

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரின் முயற்சியின் பலனாக, நாட்டுக்காக தமது இன்னுயிர்களை தியாகம் செய்த போர்வீரர்களுக்கு அரச வைத்தியசாலைகள் மற்றும் வைத்திய நிலையங்களில் சுகாதார சேவைகளை பெற்றுக்கொள்ளும் போது முன்னுரிமை சேவையை வழங்குவதற்கு சுகாதார அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.

11 Jul 2024

மாலைதீவின் புதிய உயர்ஸ்தானிகர் இலங்கை கடற்படைத் தளபதியை சந்தித்தார்

இலங்கைக்கான மாலைதீவின் புதிய உயர்ஸ்தானிகர் கௌரவ மசூத் இமாட் இன்று (2024 ஜூலை 10,) கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதியான வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவைச் சந்தித்தார்.

10 Jul 2024

உலக சாதனை படைத்த முன்னணி பொறியியலாளர் தொழில்நுட்பவியலாளர் ஆர்.பி.சமன் குமார சிறிவர்தனவின் சேவை பாராட்டுக்குரியது

இலங்கை கடற்படையின் பிரதம பொறியியலாளர் ஆர்.பி சமன் குமார சிறிவர்தன என்பவர் 586.1 கி.மீ தூரத்திற்குல் , புனேவையிலிருந்து கொழும்பு சுதந்திர சதுக்கம் வரை வந்து மீண்டும் புனேவை நோக்கி சென்று, 2024 ஜனவரி 19 ஆம் திகதி நிறுவப்பட்ட புதிய உலக சாதனை தொடர்பான சான்றிதழ் மற்றும் வெற்றிக் கிண்ணத்தை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவினால், இன்று (2024 ஜூலை 09,) கடற்படைத் தலைமையகத்தில் வழங்கப்பட்டதுடன், கடற்படையினரின் சேவையைப் பாராட்டி கடற்படைத் தளபதி அவருக்கு பாராட்டுக் கடிதம் ஒன்றை வழங்கினார்.

09 Jul 2024

துருக்கிக் கடற்படைக்கு சொந்தமான 'TCG KINALIADA' என்ற கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது

துருக்கிக் கடற்படைக்கு சொந்தமான 'TCG KINALIADA' என்ற கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று (2024 ஜூலை 9) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததுடன், கடற்படை மரபுப்படி குறித்த கப்பலை இலங்கை கடற்படையினர் வரவேற்றனர்.

09 Jul 2024