நிகழ்வு-செய்தி

தெற்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் சந்திம சில்வா கடமைகளைப் பொறுப்பேற்றார்

தெற்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் சந்திம சில்வா கடமைகளைப் பொறுப்பேற்றார்

08 Jul 2024

இலங்கை கடற்படை கப்பல் ருஹுண நிறுவனத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ஆறு மாடிக் கட்டிடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது

இலங்கை கடற்படை கப்பல் ருஹுண நிறுவனத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ஆறு மாடிக் கட்டிடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது

07 Jul 2024

கதிர்காமத்திற்கு பாத யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களுக்கு கடற்படையின் ஆதரவு

யாழ்ப்பாணத்திலிருந்து செல்ல கதிர்காமம் ஆலயத்திற்கு வருடாந்த பாத யாத்திரையில் பங்குகொள்ளும் பக்தர்களுக்கு, குமண தேசிய வனப் பூங்காவின் நுழைவாயிலில் இருந்து கும்புக்கன் ஓயா வரையிலான பாதையில் தேவையான வசதிகளை 2024 ஜூன் 30 ஆம் திகதி முதல் கடற்படையினரால் வழங்கப்பட்டதுடன், குறித்த நடவடிக்கைகளையும் அவதானிக்கும் வகையில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா, 2024 ஜூலை 03 ஆம் திகதி, கதிர்காமத்திற்கான பாத யாத்திரையில் பங்கேற்றார்.

06 Jul 2024

கடற்படை நாய்கள் பிரிவுக்காக போதைப்பொருள் அடையாளம் காணல் சிறப்பு பயிற்சி மையமொன்று நடத்தப்பட்டது.

தேசிய அபாயகரமான போதைப்பொருள் கட்டுப்பாட்டுச் சபை (NDDCB) மற்றும் பொலிஸ் உத்தியோகபூர்வ நாய்கள் பயிற்சி திணைக்களத்தின் வளங்களின் பங்களிப்புடன் இலங்கை கடற்படையின் நாய்கள் பிரிவு மற்றும் விசேட படகுகள் படையணியின் நாய்கள் பிரிவு ஆகியவற்றுக்கான விசேட போதைப்பொருள் கண்டறிதல் பயிற்சி அமர்வொன்று 2024 ஜூலை 01 முதல் 05 வரை கொழும்பு துறைமுகத்தில் உள்ள மேற்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில் கடற்படையினரால் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

05 Jul 2024

மரந்தமடு சுவாமி திருவுருவச் சிலையின் பிரதிஷ்டை நூற்றாண்டு ஆராதனைக்கு கடற்படையின் ஆதரவு

மன்னார் மரதமடு தேவாலயத்தில் நடைபெற்ற மரதமடு சுவாமி திருவுருவச் சிலையின் பிரதிஷ்டை நூற்றாண்டு விழா, பேராயர் மேதகு கர்தினால் ரஞ்சித் அவர்கள் தலைமையில் கொழும்பில், இன்று (2024 ஜூலை 02,) நடைபெற்றது. மேலும் சேவையை வெற்றிகரமாக நடத்துவதற்கு தேவையான உள்கட்டமைப்பை நிறுவுவதற்கு கடற்படை உதவியது.

02 Jul 2024

கடற்படை நடவடிக்கைகளில் சிறந்த செயல்திறனை வெளிப்படுத்திய கடற்படை அதிகாரிகளுக்கு பிரிட்டிஷ் கடற்படை நிறுவனத்திடமிருந்து சான்றிதழ்கள் மற்றும் விருதுகள் வழங்கப்பட்டன

பிரித்தானிய கடற்படை நிறுவனத்தின் (The Nautical Institute) இலங்கைக் கிளையினால் இலங்கை கடற்படையின் கடற்படைக் கல்விப் பாடநெறிகள் மற்றும் வணிகக் கடல்சார் கற்கைநெறிகளில் சிறந்த செயல்திறனை வெளிப்படுத்திய அதிகாரிகளுக்கு விருது மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இலங்கை கடற்படைத் தளபதியான வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் தலைமையில், 2024 ஜூன் 29 ஆம் திகதி வெலிசர 'வேவ் என்' லேக்' நிகழ்வு மண்டபத்தில் நடைபெற்றது.

01 Jul 2024

இரண்டாம் உலகப் போரின் போது கிழக்குக் கடலில் மூழ்கிய ‘HMS Hermes’ என்ற விமானம் தாங்கி கப்பலில் கடற்படை ஒரு ஆய்வு சுழியோடி பயிற்சியொன்றை நடத்தியது

இரண்டாம் உலகப் போரின் போது, ஜப்பான் விமான தாக்குதல் காரணத்தினால் மட்டக்களப்புக்கு அப்பால் கிழக்கு கடலில் மூழ்கிய அரச கடற்படையின் விமானம் தாங்கி போர்க்கப்பலான ‘HMS Hermes’கப்பலில் மற்றும் அதனுடன் தொடர்புடைய கடல் பகுதியில் சிறப்பு ஆய்வு சுழியோடி பயிற்சியொன்று கடற்படை சுழியோடி பிரிவால் 2024 ஜூன் 30 ஆம் திகதி வெற்றிகரமாக நடத்தப்பட்டதுடன் இந் நிகழ்வில் கழந்துகொண்ட கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா மற்றும் கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் பியல் டி சில்வா (ஓய்வு) ஆகியோர் ‘HMS Hermes’ கப்பலின் கட்டளை அதிகாரி மற்றும் பணியாளர்களை நினைவு கூறும் வகையில் பொப்பி மலர்க்கொத்துகளை வைத்தனர்.

01 Jul 2024

கதிர்காமம் பாத யாத்திரையில் பங்குகொள்ளும் பக்தர்களுக்கு கடற்படையினரால் வசதிகள் வழங்கப்பட்டன

யாழ்ப்பாணத்தில் இருந்து செல்ல கதிர்காமத்திற்கு வருடாந்தம் மேற்கொள்ளப்படும் பாத யாத்திரையில் பங்குபற்றும் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை வழங்கும் நடவடிக்கைகள் இலங்கை கடற்படையால் இன்று (ஜூன் 30, 2024) தொடங்கியது. குமண தேசிய பூங்காவின் நுழைவாயிலிலிருந்து கும்புக்கன் ஓய வரையிலான பாதையில் பயணிகளின் தேவைகளை வசதிகள் கடற்படையினர் குறிப்பாக கவனித்து வருகின்றனர். இந்த வசதிகள் ஜூலை 11 வரை தொடரும்.

30 Jun 2024

இலங்கை கடற்படை நீரியல் சேவை உலக நீரியல் தினத்தை கொண்டாடுகிறது

ஜூன் 21ஆம் திகதி ஈடுபட்டுள்ள உலக நீரியல் தினத்துடன் இணைந்து, இலங்கை கடற்படை நீரியல் சேவையால் ஏற்பாடு செய்யப்பட்ட உலக நீரியல் தின கொண்டாட்டம் நிகழ்வு இன்று (2024 ஜூன் 28,) கடற்படை நீரியல் பிரதானி ரியர் அட்மிரல் கோசல வர்ணகுலசூரிய மற்றும் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா ஆகியோரின் அழைப்பின் பேரில். பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித பண்டார தென்னகோன் தலைமையில் வெலிசர Wave n’ Lake நிகழ்வு மண்டபத்தில் நடைபெற்றது.

28 Jun 2024

இந்திய மீன்பிடிப் படகொன்றை கைது செய்யும் நடவடிக்கையின் போது உயிரிழந்தகடற்படை வீரர் பீ.டீ.பீ ரத்நாயக்கவின் இறுதிக் கிரியைகள் இலங்கை கடற்படையின் பூரண மரியாதையுடன் நடைபெற்றது

2024 ஜூன் 25 ஆம் திகதி யாழ்ப்பாணம், காங்கேசன்துறைக்கு அப்பால் இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீன்பிடிப் படகொன்றை கைது செய்யும் நடவடிக்கையின் போது உயிரிழந்த கடற்டை வீரர் பீ.டீ.பீ ரத்நாயக்கவின் இறுதிச் சடங்கு 2024 ஜூன் 27 ஆம் திகதி இலங்கை கடற்படையின் பூரண மரியாதையுடன் இப்பாகமுவ ஹிபவ்வ பொது மயானத்தில் நடைபெற்றதுடன், குறித்த நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடமாகாண கடற்றொழிலாளர் சங்கங்களை பிரதிநிதித்துவப்படுத்தி பெருமளவான மக்கள் கலந்துகொண்டனர்.

28 Jun 2024