நிகழ்வு-செய்தி
இலங்கைக்கான பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் கடற்படைத் தளபதியை உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக சந்தித்தார்

இலங்கைக்கான பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் திரு. Andalib Elias அவர்கள் இன்று (2024 நவம்பர் 12) கடற்படைத் தலைமையகத்தில் உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவை சந்தித்தார்.
12 Nov 2024
இந்திய கடலோர காவல்படையின் பணிப்பாளர் நாயகம் உத்தியோகபூர்வ சந்திப்புக்காக கடற்படைத் தளபதியை சந்தித்தார்

இந்திய கடலோரக் காவல்படையின் பணிப்பாளர் நாயகம் பரமேஷ் சிவமணி (DG Paramesh Sivamani, PTM, TM) இன்று (2024 நவம்பர் 11) கடற்படைத் தலைமையகத்தில் உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவை சந்தித்தார்.
11 Nov 2024
அகில இலங்கை வரைபடங்கள் மற்றும் நேரடி காணொளிப் போட்டித்தொடரில் பரிசுகளுக்காக கொழும்பு திட்டம் மற்றும் டயலொக் ஆசியாடா நிருவனம் அனுசரணை வழங்குகிறது

போதைப்பொருள் இல்லாத ஒளிமயமான எதிர்காலத்திற்காக குழந்தைகள் மற்றும் இளம் தலைமுறை வலுவூட்டல் என்ற உன்னதமான கருப்பொருளை மனதில் கொண்டு, நச்சு போதைப்பொருள் மற்றும் ஆபத்தான மருந்துகள் பயன்பாட்டைத் தடுப்பதற்காக நிறுவப்பட்ட பணிக்குழுவின் தலைமையில் பாடசாலைக் குழந்தைகள் மற்றும் இளைஞர் சமுதாயத்தினருக்காக வரைபடங்கள் மற்றும் நேரடி காணொளிப் போட்டித்தொடரொன்று 2024 நவம்பர் மாத்த்தில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. குறித்த போட்டித்தொடரில் வெற்றி பெறும் நபர்களுக்கு வழங்கப்படும் பரிசுகளுக்கு அனுசரணை வழங்கும் கொழும்பு திட்டம் மற்றும் டயலொக் ஆசியாடா நிருவனம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் 2024 நவம்பர் 11 ஆம் திகதி நச்சு போதைப்பொருள் மற்றும் ஆபத்தான மருந்துகள் பயன்பாட்டைத் தடுப்பதற்காக நிறுவப்பட்ட பணிக்குழுவின் தலைவரான வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவை கடற்படை தலைமையகத்தில் சந்தித்து அடையாள ரீதியாக பரிசுகளை கையளித்தனர்.
11 Nov 2024
ஊனமுற்றுள்ள ஓய்வு பெற்ற கடற்படை வீரரொருவருக்கு சக்கர நாற்காலியொன்று வழங்கப்பட்டது

யுத்தத்தின் போது ஊனமுற்றுள்ள ஓய்வு பெற்ற கடற்படை வீரர் ஐ.டி.என் திலக்குமாரவுக்கு சக்கர நாற்காலியொன்று வழங்கும் நிகழ்வு 2024 நவம்பர் 10 ஆம் திகதி கண்டி வத்தேகமவில் உள்ள குறித்த மாலுமியின் இல்லத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் தலைமையில் மற்றும் சேவா வனிதா பிரிவின் கௌரவத் தலைவி திருமதி மாலா லமாஹேவாவின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றது.
11 Nov 2024
கடற்படை மூலம் மீனவர்களுக்காக போதைப்பொருள் தடுப்பு மற்றும் அடிப்படை உயிர் உதவி பயிற்சி நிகழ்ச்சியொன்று நடத்தப்பட்டது

இலங்கை கடற்படை, சுகாதார அமைச்சகம் மற்றும் மீன்பிடி அமைச்சகத்துடன் இணைந்து மீனவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு மற்றும் அடிப்படை உயிர் உதவி (Basic Life Support - BLS) பயிற்சி நிகழ்ச்சிகள் 2024 ஜூலை 14 ஆம் திகதி முதல் 2024 நவம்பர் 8 ஆம் திகதி வரை திருகோணமலை கோட்பே மீன்பிடி துறைமுகத்தில் வெற்றிகரமாக நடத்தியது.
11 Nov 2024
இந்திய கடற்படையின் ‘INS Vela’ நீர்மூழ்கிக் கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது

இந்திய கடற்படைக்கு சொந்தமான ‘INS Vela’ என்ற நீர்மூழ்கிக் கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று (2024 நவம்பர் 10) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது, வருகை தந்த கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கு அமைவாக வரவேற்றனர்.
10 Nov 2024
கடற்படையின் 74வது ஆண்டு நிறைவை முன்னிட்டு கடற்படையினரின் நட்புறவு சந்திப்பு பிரமாண்டமான முறையில் நடைபெற்றது

இலங்கை கடற்படையின் பெருமைமிக்க 74 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், கடற்படையினர் சமய மற்றும் கடற்படை மரபுகளுக்கு முன்னுரிமை அளித்து தொடர் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளனர், மேலும் அந்த நிகழ்ச்சித் தொடரில் கடற்படையினரின் நட்புறவு சந்திப்பு இன்று (2024 நவம்பர் 09,) வெலிசர கடற்படை வளாகத்தில் அமைந்துள்ள Wave N’ Lake கடற்படை அரங்கில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா தலைமையில் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது.
09 Nov 2024
ரியர் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ கடற்படையின் புதிய பதில் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டார்

இலங்கை கடற்படையின் புதிய பதில் தலைமை அதிகாரியாக 2024 நவம்பர் 09 ஆம் திகதி முதல், ரியர் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ நியமிக்கப்பட்டதுடன், அதற்கான நியமனக் கடிதத்தை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவினால் கடற்படை தலைமையகத்தில் வைத்து ரியர் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோவிடம் உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டதுடன் கடற்படைத் தளபதி அவர்கள் தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.
09 Nov 2024
ரியர் அட்மிரல் ரோஹித அபேசிங்க கடற்படை சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்

இலங்கை கடற்படையில் 34 வருட சேவையை நிறைவு செய்து ரியர் அட்மிரல் ரோஹித அபேசிங்க இன்று (2024 நவம்பர் 09) கடற்படை சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்.
09 Nov 2024
இலங்கை கடலோர காவல்படையின் புதிய பணிப்பாளர் நாயகம் உத்தியோகபூர்வ சந்திப்புக்காக கடற்படைத் தளபதியை சந்தித்தார்

இலங்கை கடலோரக் காவல்படையின் புதிய பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்ட, ரியர் அட்மிரல் ராஜப்பிரிய சேரசிங்க இன்று (2024 நவம்பர் 05) கடற்படைத் தலைமையகத்தில் உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவை சந்தித்தார்.
09 Nov 2024