நிகழ்வு-செய்தி

“க்லீன் ஶ்ரீ லங்கா” தேசிய திட்டத்தின் நோக்கம் குறித்து கடற்படை வீரர்களுக்கு விழிப்புணர்வூட்டும் வேளைத்திட்டம்

“அழகான தீவு - புன்னகைக்கும் மக்கள்” என்ற அரசாங்கத்தின் தொலைநோக்குப் பார்வையை நனவாக்கும் வகையில், இலங்கையை சமூக, சூழல் மற்றும் நெறிமுறை ரீதியாக மாற்றியமைக்கும் "க்லீன் ஶ்ரீ லங்கா " தேசிய செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஜனாதிபதி செயலணியின் முக்கிய பங்காளியாக இலங்கை கடற்படை செயற்பட்டு வருகின்றடன்துடன்,இது தொடர்பாக கடற்படை வீரர்களுக்கு விழிப்புணர்வூட்டும் வேளைத்திட்டம் 2025 மார்ச் 17 அன்று வடக்கு கடற்படை கட்டளையில் ஆரம்பிக்கப்பட்டது.

19 Mar 2025

மஹவை உஸ்கல கெமுனு மகா வித்தியாலத்தை"மகிழ்ச்சி நிறைந்த பாடசாலையாக" மாற்றுவதற்கு கடற்படை சமூக பணியின் பங்களிப்பு

"க்ளீன் ஶ்ரீ லங்கா" என்ற தேசிய திட்டத்திற்கு இணங்க, "மகிழ்ச்சி நிறைந்த பாடசாலை" என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்ட, சமூக மதிப்புகள் உட்பட சுற்றுச்சூழலுக்கு ஏற்ற கல்விச் சூழலை வளர்ப்பதற்கான தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், கடற்படையின் சமூக பராமரிப்பு பங்களிப்புடன் மஹவை உஸ்கல கெமுனு மகா வித்தியால வளாகத்தை சுத்தம் செய்தல் மற்றும் புனரமைக்கும் பணிகள் 2025 மார்ச் 15 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டது.

19 Mar 2025

கடற்படை படகு உற்பத்தி முற்றத்தில் தயாரிக்கப்பட்ட 60 படகுகள் மற்றும் காயக் படகுகள் விளையாட்டுக் கழகங்களுக்கு வழங்கப்பட்டது

சர்வதேச படகுகள் மற்றும் காயக் படகுகள் கூட்டமைப்பில் (International Canoe Federation - IFC) அனுசரணை வழங்கப்பட்ட இலங்கை தேசிய படகுகள் மற்றும் காயக் படகுகள் சங்கத்தால் (National Association for Canoeing and Kayaking in Sri Lanka – NACKSL) ஆரம்பத்தில், வெலிசறை கடற்படை படகுகள் கட்டும் தளத்தில் (NBBY) தீவின் புகழ்பெற்ற விளையாட்டுக் கழகங்களுக்கு தயாரிக்கப்பட்ட அறுபது (60) படகுகள் மற்றும் காயக் படகுகளை ஒப்படைத்தல், 2025 மார்ச் 17 அன்று வெலிசறை கடற்படை படகுத் தளத்தில்,கடற்படை தளபதியின் தலைமையில் நடைபெற்றது.

18 Mar 2025

அம்பாறை,பொத்துவில் சிங்கள மகா வித்தியாலயத்தை"மகிழ்ச்சி நிறைந்த பாடசாலையாக" மாற்றுவதற்கு கடற்படை சமூக பணியின் பங்களிப்பு

"க்ளீன் ஶ்ரீ லங்கா" என்ற தேசிய திட்டத்திற்கு இணங்க, "மகிழ்ச்சி நிறைந்த பாடசாலை" என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்ட, சமூக மதிப்புகள் உட்பட சுற்றுச்சூழலுக்கு ஏற்ற கல்விச் சூழலை வளர்ப்பதற்கான தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், கடற்படையின் சமூக பராமரிப்பு பங்களிப்புடன் அம்பாறை,பொத்துவில் சிங்கள மகா வித்தியாலய வளாகத்தை சுத்தம் செய்தல் மற்றும் புனரமைக்கும் பணிகள் 2025 மார்ச் 14 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டது.

18 Mar 2025

கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலயத்தின் வருடாந்த பெருவிழா கடற்படையின் பங்களிப்புடன் சிறப்பாக நிறைவடைந்தது

கடற்படையினரின் பங்களிப்புடன் கச்சத்தீவில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க அந்தோணியார் தேவாலயத்தின் வருடாந்த பெருவிழா 2025 மார்ச் 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் பெருமளவான இலங்கை மற்றும் இந்திய பக்தர்களின் பங்கேற்புடன் வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்தியாவின் சிவகங்கை மறைமாவட்டத்தின் ஆயர் கௌரவ லூர்து ஆனந்தன் அவர்கள் (Rt. Revd. Dr. Lourdu Ananthan. Bishop of Sivagangai diocese, India) யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் ஆயர் கௌரவ பீ.ஜே. ஜெபரத்னம் அவர்கள் (Very Revd. Fr. P. J. Jebaratnam, Vicar General, Jaffna Diocese) இந்தியாவின் ராமேஸ்வரத்தில் உள்ள பாரிஷ் கௌரவ ஆயர் அசோக் அவர்கள் (Revd. Fr. Ashok, Parish Priest, Rameswaram, India) மற்றும் நெடுந்தீவு திருச்சபை ஆயர் அருட்தந்தை பி.பத்திநாதன் அவர்கள் (Revd. Fr. P. Pathinathan. Parish Priest, Delft) ஆகியோரின் வழிகாட்டலில், யாழ் ஆயர் அருட்தந்தை ஜஸ்டின் பர்நாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை மற்றும் யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் திரு. மருதலிங்கம் பிறதீபனின் (Maruthalingam Piiratheepan) ஆகியோரின் ஏற்பாட்டிலும், இலங்கை கடற்படையின் முழுமையான உழைப்பு, தொழில்நுட்பம் மற்றும் வள பங்களிப்புடன், வெற்றிகரமாக நடைபெற்றது.

17 Mar 2025

ரியர் அட்மிரல் பிரசாந்த அந்தணி கடற்படை சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்

ரியர் அட்மிரல் பிரசாந்த அந்தணி இலங்கை கடற்படையில் 34 வருடத்திற்கும் அதிகமான சேவை காலத்தை நிறைவு செய்து இன்று (2025 மார்ச் 17) இன்று கடற்படை சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்.

17 Mar 2025

பிரான்சிய கடற்படைக் கப்பல் ‘PROVENCE’ உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றிற்காக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது

பிரான்சிய கடற்படைக்கு சொந்தமான ‘PROVENCE’ என்ற கப்பல் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றிற்காக இன்று (2025 மார்ச் 16) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததுடன், கடற்படை மரபுப்படி கப்பலை இலங்கை கடற்படையினர் வரவேற்றனர்.

16 Mar 2025

கடற்படைத் தளபதி வடக்கு கடற்படை கட்டளைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டார்.

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொட, 2025 மார்ச் 14 அன்று வடக்கு கடற்படை கட்டளைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டபோது, வடக்கு கடற்படை கட்டளையுடன் இணைக்கப்பட்ட அதிகாரிகள், மாலுமிகளை சந்தித்து உரையாற்றினார். கடற்படையின் நடவடிக்கைகள், பயிற்சி நடவடிக்கைகள் மற்றும் மேம்பாட்டு மற்றும் நலன்புரி திட்டங்களை திறம்பட நடத்துவதற்கான அறிவுரைகளை வழங்கினார். மேலும், இவ் கட்டளையுடன் இணைக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் மாலுமிகளுக்கு கடற்படையின் பொறுப்புகள் குறித்து விளக்கினார்.

15 Mar 2025

கண்டி, தர்மவிக்ரம மகளீர் பாடசாலையை "மகிழ்ச்சி நிறைந்த பாடசாலையாக" மாற்றுவதற்கு கடற்படை சமூக பணியின் பங்களிப்பு

"க்ளீன் ஶ்ரீ லங்கா" என்ற தேசிய திட்டத்திற்கு இணங்க, "மகிழ்ச்சி நிறைந்த பாடசாலை" என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்ட, சமூக மதிப்புகள் உட்பட சுற்றுச்சூழலுக்கு ஏற்ற கல்விச் சூழலை வளர்ப்பதற்கான தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், கடற்படையின் சமூக பராமரிப்பு பங்களிப்புடன் கண்டி, தர்மவிக்ரம மகளீர் பாடசாலை வளாகத்தை சுத்தம் செய்தல் மற்றும் புனரமைக்கும் பணிகள் 2025 மார்ச் 11 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டது.

14 Mar 2025

முல்லைத்தீவு எஷெடுகஸ்வெவ மகா வித்தியாலயத்தை "மகிழ்ச்சி நிறைந்த பாடசாலையாக" மாற்றுவதற்கு கடற்படை சமூக பணியின் பங்களிப்பு

"க்ளீன் ஶ்ரீ லங்கா" என்ற தேசிய திட்டத்திற்கு இணங்க, "மகிழ்ச்சி நிறைந்த பாடசாலை" என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்ட, சமூக மதிப்புகள் உட்பட சுற்றுச்சூழலுக்கு ஏற்ற கல்விச் சூழலை வளர்ப்பதற்கான தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், கடற்படையின் சமூக பராமரிப்பு பங்களிப்புடன் முல்லைத்தீவு எஷெடுகஸ்வெவ மகா வித்தியாலய வளாகத்தை சுத்தம் செய்தல் மற்றும் புனரமைக்கும் பணிகள் 2025 மார்ச் 13 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டது.

14 Mar 2025