நிகழ்வு-செய்தி
ஜனாதிபதி மற்றும் கடற்படையின் உயர் அதிகாரிகளுக்கு இடையில் சந்திப்பு

நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை தொடர்பில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (26) ஜனாதிபதி அலுவலகத்தில் சந்திப்பொன்று நடைபெற்றது.
26 Feb 2025
பண்டாரவளை புனித தோமஸ் கல்லூரி மற்றும் பண்டாரவளை மத்திய மகா வித்தியாலயத்தில் கடற்படை தளபதிக்கு வாழ்த்து தெரிவித்தனர்

பண்டாரவளை புனித தோமஸ் கல்லூரி மற்றும் பண்டாரவளை மத்திய மகா வித்தியாலயத்தின் புகழ்பெற்ற பழைய மாணவரான வைஸ் அட்மிரல் கான்சன பானகொட, இலங்கை கடற்படையின் 26வது கடற்படைத் தளபதியாக வைஸ் அட்மிரல் கான்சன பானகொட நியமிக்கப்பட்டார். கடற்படை சேவா வனிதா பிரிவின் கௌரவத் தலைவி திருமதி அனுஷா பானகொட அவர்களும் அந்தக் கல்லூரிகளின் பழைய மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வுகளில் கலந்து கொண்டனர்.
26 Feb 2025
மதவாச்சி அங்குணொச்சி கல்லூரி கடற்படை தொழில்நுட்ப மற்றும் தொழிலாளர் பங்களிப்புடன் சுத்தம் செய்யப்பட்டது

“சுத்தமான இலங்கை” தேசிய திட்டத்திற்கு இணங்க, பாடசாலை வளாகங்களை சுத்தம் செய்தல், உட்கட்டமைப்பை மேம்படுத்துதல் மற்றும் புதுப்பித்தல் ஆகிய தேசிய திட்டத்திற்கு இணங்க, அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள மதவாச்சி அங்குணொச்சி வித்தியாலயத்தில் கடற்படை சமூக தன்னார்வலர்களின் பங்களிப்புடன் சுத்தம் செய்யும் பணிகள் 2025 பெப்ரவரி 24ஆம் திகதி அன்று மேற்கொள்ளப்பட்டன.
25 Feb 2025
"சுத்தமான கடற்கரை - ஒரு கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலம்" என்ற கடற்படையின் சமூக பராமரிப்பு வேலைத் திட்டம்

“க்லீன் ஶ்ரீ லங்கா" தேசிய திட்டத்துடன் இணைந்து "சுத்தமான கடற்கரை - ஒரு கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலம்" என்ற தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் வடக்கு, கிழக்கு, மேல் மற்றும் வட மத்திய ஆகிய கடற்படை கட்டளைகளினால் கடற்கரையை சுத்தப்படுத்தும் வேலைத்திட்டத்தின் மூலம் 2025 பெப்ரவரி 22 மற்றும் 23 ஆகிய திகதிகளும் கடற்படையின் சமூக பராமரிப்பு வேலைத் திட்டமொன்றை வழங்க கடற்படை ஏற்பாடு செய்தது.
24 Feb 2025
கடற்படையின் தொழில்நுட்ப மற்றும் கலைத்துவ பங்களிப்புடன் கொடவேஹேர திகன்னேவ பகுதியில் நிறுவப்பட்டுள்ள நீர் சுத்திகரிப்பு நிலையம் மக்களிடம் கையளிக்கப்பட்டது

கடற்படையின் சமூகப் பணித் திட்டத்தின் கீழ், கடற்படை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திப் பிரிவின் தொழில்நுட்ப மற்றும் கலைத்துவ பங்களிப்புடன், குருநாகல் மாவட்டத்தின் கொட்டவெஹெர பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட ஹுதலியாவ, திகன்னேவ கிராமத்தில் நிறுவப்பட்ட 1082 வது நுண்ணுயிர் எதிர்ப்பு நீர் சுத்திகரிப்பு நிலையம் 2025 பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி மக்களிடம் கையளிக்கப்பட்டது.
23 Feb 2025
கடற்படையின் தொழில்நுட்ப மற்றும் தொழிலாளர் பங்களிப்புடன் வாஹல்கட D2 கல்லூரி புனரமைக்கப்பட்டது

“க்லீன் ஶ்ரீ லங்கா" தேசிய திட்டத்துடன் இணைந்து பாடசாலை வளாகங்களை சுத்தப்படுத்துதல், உள்கட்டமைப்பை மேம்படுத்துதல் மற்றும் பழுதுபார்த்தல் ஆகிய தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், அனுராதபுர மாவட்டத்தில் உள்ள வாஹல்கட D2 கல்லூரியை சுத்தம் செய்தல் மற்றும் பழுதுபார்த்தல் கடற்படையின் சமூக நல பங்களிப்புடன் இன்று (2025 பெப்ரவரி 22) இடம்பெற்றது.
22 Feb 2025
கடற்படையின் தொழில்நுட்ப மற்றும் கலைத்துவ பங்களிப்புடன் பண்டுவஸ்நுவர ஹல்மில்லவெவ பகுதியில் நிறுவப்பட்டுள்ள நீர் சுத்திகரிப்பு நிலையம் மக்களிடம் கையளிக்கப்பட்டது
கடற்படையின் சமூகப் பணித் திட்டத்தின் கீழ், கடற்படை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திப் பிரிவின் தொழில்நுட்ப மற்றும் கலைத்துவ பங்களிப்புடன், குருநாகல் மாவட்டத்தில் பண்டுவஸ்நுவர மேற்கு பிராந்திய மத்திய பேரம்பொல ஹல்மில்லவெவ கிராமத்தில் நிறுவப்பட்ட 1081வது நுண்ணுயிர் எதிர்ப்பு நீர் சுத்திகரிப்பு நிலையம் 2025 பெப்ரவரி மாதம் 21 ஆம் திகதி மக்களிடம் கையளிக்கப்பட்டது.
22 Feb 2025
தொடக்க தகவமைப்பு பாடநெறியை வெற்றிகரமாக முடித்த 12 அதிகாரிகளின் வெளியேறல் அணிவகுப்பு கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியில் நடைபெற்றது

தொடக்க தகவமைப்பு பாடநெறி (மருத்துவம்) 03/2024, வெற்றிகரமாக முடித்த பன்னிரண்டு (12) அதிகாரிகளின் வெளியேறல் அணிவகுப்பு இன்று (2025 பெப்ரவரி 22) கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியின் கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் ரொஹான் ஜோசப் தலைமையில் திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியின் பிரதான பயிற்சி மைதானத்தில் இடம்பெற்றது.
22 Feb 2025
கடற்படைக்கு நேரடி ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட 16 அதிகாரிகளுக்கு நியமனக் கடிதம் வழங்குதல்

இலங்கை கடற்படைக்கு 2024/03 நேரடி ஆட்சேர்ப்பு அணுகலின் கீழ் நேரடி ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட பதினாறு (16) அதிகாரிகளுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு இன்று (2025 பெப்ரவரி 21) கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி தலைமையில் இடம்பெற்றது.
21 Feb 2025
“க்லீன் ஶ்ரீ லங்கா" தேசிய திட்டத்தின் கீழ் பாடசாலைகளின் உட்கட்டமைப்பு அபிவிருத்திக்கு கடற்படை பங்களிப்பு வழங்கியது

“க்லீன் ஶ்ரீ லங்கா" தேசிய செயற்றிட்டத்துடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட 1000 பாடசாலைகளின் உட்கட்டமைப்பு அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் முதற்கட்டமாக தெரிவு செய்யப்பட்ட 200 பாடசாலைகளின் உட்கட்டமைப்பு அபிவிருத்தியின் கீழ் கொழும்பு மாவட்டத்தில் உள்ள மோதர ஆனந்த மத்திய மகா வித்தியாலயம் உட்கட்டமைப்பு அபிவிருத்தியின் திறப்பு விழா இன்று (2025 பெப்ரவரி 20) கல்லூரி வளாகத்தில் இடம்பெற்றதுடன், இந்நிகழ்வில் கடற்படைத் தளபதி கலந்து கொண்டார்.
20 Feb 2025