நிகழ்வு-செய்தி

கடற்படையின் 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடத்தப்படும் சர்வதேச போர் கப்பல்கள் கண்காணிப்பு - 2025 குறித்த ஊடக சந்திப்பானது அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது

இலங்கை கடற்படையின் பெருமைமிக்க 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, கடற்படை மரபுகளுக்கு முன்னுரிமை அளித்து, சமூக, நெறிமுறை மற்றும் சுற்றுச்சூழல் முன்முயற்சிகளை உள்ளடக்கிய தொடர் நிகழ்ச்சிகளை நடத்த கடற்படை தயாராக உள்ளதுடன், இதன் கீழ், “Sailing Strong Together” என்ற கருப்பொருள் நடைபெறும். சர்வதேச போர்க்கப்பல்கள் கண்காணிப்பு - 2025 குறித்த ஊடக சந்திப்பு இன்று 2025 நவம்பர் 24 ஆம் திகதி அரசாங்க தகவல் திணைக்கள வளாகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொட அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

25 Nov 2025

வீரமரணம் அடைந்த போர்வீரர்களின் நினைவேந்தலின் அடையாளமாக கடற்படைச் சங்கத்தின் உறுப்பினர்கள் கடற்படைத் தளபதிக்கு பொப்பி மலரொன்று அணிவித்தனர்

போர் வீரர்களை நினைவுகூரும் வகையில் ஆரம்பிக்கப்பட்ட பொப்பி மலர் பிரச்சாரத்தையொட்டி, இலங்கை கடற்படை சங்கத்தின் தலைவர், ரியர் அட்மிரல் மணில் மெண்டிஸ் (ஓய்வு) 2025 நவம்பர் 19 அன்று கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொடவுக்கு பொப்பி மலரொன்று அணிவித்தார்.

25 Nov 2025

இந்திய கடற்படை போர்க்கப்பலான 'INS SUKANYA' தனது உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக முடித்து தீவிலிருந்து புறப்பட்டது

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமாக 2025 நவம்பர் 18 ஆம் திகதி இலங்கைக்கு வந்த இந்திய கடற்படைக் கப்பலான 'INS SUKANYA', தனது உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு இன்று 2025 நவம்பர் 21 ஆம் திகதி தீவை விட்டு புறப்பட்டது. கொழும்பு துறைமுகத்தில் அந்தக் கப்பலுக்கு கடற்படையினர் சம்பிரதாயபூர்வமாக பிரியாவிடை அளித்தனர்.

21 Nov 2025

விநியோகம் மற்றும் சேவை தேவைகளை பூர்த்தி செய்வதற்காக தீவுக்கு வந்த 'PNS SAIF' என்ற போர்க்கப்பல் தீவை விட்டு புறப்பட்டது

2025 நவம்பர் 18 ஆம் திகதி விநியோகம் மற்றும் சேவை தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இலங்கைக்கு வந்த பாகிஸ்தான் கடற்படை போர்க்கப்பலான ‘PNS SAIF’, இன்று காலை (2025 நவம்பர் 19) தீவை விட்டு புறப்பட்டதுடன். கொழும்பு துறைமுகத்தில் இலங்கை கடற்படையினர் கப்பலுக்கு பாரம்பரிய முறைப்படி பிரியாவிடை அளித்தனர்.

19 Nov 2025

இந்திய கடற்படையின் போர் கப்பலான ‘INS SUKANYA’ உத்தியோகப்பூர்வ விஜயத்திற்காக தீவை வந்தடைந்தது

இந்திய கடற்படையின் போர் கப்பலான ‘INS SUKANYA’ 2025 நவம்பர் 18 ஆம் திகதி காலை உத்தியோகபூர்வ விஜயத்திற்காக தீவை வந்தடைந்ததுடன், கடற்படை மரபுகளின்படி இலங்கை கடற்படையினர் அக் கப்பலை கொழும்பு துறைமுகத்தில் வரவேற்றனர்.

19 Nov 2025

உயிர்நீத்த ஆயுதப்படை வீரர்களை நினைவுகூரும் நிகழ்விற்கு கடற்படையின் பங்களிப்பு

முதலாம் உலகப் போருக்குப் பிறகு தாய்நாட்டின் பாதுகாப்பிற்காக தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த ஆயுதப் படைகளின் உறுப்பினர்களின் உன்னத அர்ப்பணிப்பை நினைவுகூர்ந்து கௌரவிக்கும் நினைவு தினம், 2025 நவம்பர் 16 ஆம் திகதி கொழும்பு விஹார மகாதேவி பூங்காவில் உள்ள போர்வீரர்கள் நினைவுச்சின்னத்தில் கௌரவ பிரதமர் ஹரிணி அமரசூரிய அவர்களின் தலைமையில் நடைபெற்றதுடன், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொட இந்த நிகழ்வில் கலந்து கொண்டார். மேலும் கடற்படை தலைமையகம் மற்றும் அனைத்து கடற்படை கட்டளைகளிலும் இவ் நினைவேந்தல் நிகழ்வினை கடற்படையினர் ஏற்பாடு செய்தனர்.

18 Nov 2025

உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு இலங்கை கடற்படை சிறப்பு நீரிழிவு மருத்துவ சிகிச்சையை நடத்தியது

2025 ஆம் ஆண்டு உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு, கொழும்பு கடற்படை பொது மருத்துவமனை வளாகத்தில் கடற்படை 2025 நவம்பர் 14 ஆம் திகதி சிறப்பு நீரிழிவு மருத்துவ சிகிச்சையை ஏற்பாடு செய்தது.

17 Nov 2025

4வது துரித தாக்குதல் படகு படையில் இணைந்து தாய்நாட்டிற்காக தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த வீரமிக்க கடற்படை வீரர்களுக்கு அஞ்சலி

இலங்கை கடற்படையின் பெருமைமிக்க 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, இலங்கை கடற்படையின் 4வது துரித தாக்குதல் படகு படையில் சேவையில் இருந்தபோது தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த வீரமிக்க கடற்படை வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வானது 2025 நவம்பர் 14 ஆம் திகதி திருகோணமலை கடற்படை கப்பல்துறை தலைமையகத்தில் அமைந்துள்ள போர்வீரர்கள் நினைவுச்சின்னத்தில் நடைபெற்றது. இதில் வீரமிக்க போர்வீரர்களின் பெற்றோர் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

17 Nov 2025

கடற்படை விரைவு அதிரடி படகுகள் படை தலைமையகத்தில் மனிதாபிமான உதவி மற்றும் அனர்த்த நிவாரணப் பயிற்சி அமர்வு - 2025 ஆனது வெற்றிகரமாக நிறைவடைந்தது

புத்தளம், கங்கேவாடியவில் உள்ள கடற்படை விரைவு அதிரடி படகுகள் படை தலைமையகத்தில் உள்ள அனர்த்த முகாமைத்துவ பயிற்சிப் பாடசாலையில் நடைபெற்ற மூன்று (03) நாள் மனிதாபிமான உதவி மற்றும் அனர்த்த நிவாரணப் பயிற்சி அமர்வானது, கூட்டு நடைமுறைப் பயிற்சிகளைத் தொடர்ந்து 2025 நவம்பர் 14 ஆம் திகதி அன்று வெற்றிகரமாக நிறைவடைந்தது.

15 Nov 2025

கடல்சார் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை எதிர்த்துப் போராடுவதற்கும் ஒரு வலுவான கூட்டுத் திட்டத்திற்காக கடற்படை, அரசு நிறுவனங்கள் மற்றும் வடமேற்கு மாகாண மீனவ சமூகம் இணைந்து செயல்படுகின்றது

கடல் சூழலில் நிலையான மீன்வளம் மற்றும் பல்லுயிர் பாதுகாப்பிற்கான கூட்டு அணுகுமுறைக்காக; வடமேற்கு கடற்படை கட்டளைத் தளபதியின் தலைமையில், புத்தளம், இலங்கை கடற்படை கப்பல் தம்பபன்னியில், 2025 நவம்பர் 11 ஆம் திகதி வடமேற்கு மாகாணத்தின் பிரதேச செயலகங்கள், மீன்வள மற்றும் நீர்வளத் துறை, இலங்கை பொலிஸ் துறை, சுங்கத் துறை, வனவிலங்கு பாதுகாப்புத் துறை, கடலோரப் பாதுகாப்பு மற்றும் கடலோர வள மேலாண்மைத் துறை, மத்திய சுற்றுச்சூழல் ஆணையம், வனப் பாதுகாப்புத் துறை மற்றும் வடமேற்கு மாகாண மீனவர் சங்கத்தின் பிரதிநிதிகளின் பங்கேற்புடன், குறிப்பிட்ட பொருள் சார்ந்த யோசனைகள், திட்டங்கள் குறித்த அமர்வு நடைபெற்றது.

15 Nov 2025