நிகழ்வு-செய்தி
இலங்கை மற்றும் ஐக்கிய இராச்சிய இருதரப்பின் ஏற்பாடுகளுடன் நீர்வரைவியல் ஒத்துழைப்பை வலுப்படுத்துகின்றனர்.

இலங்கையின் நீர்வரைவியல் திறன்களை மேம்படுத்துவதற்கான ஒரு முக்கிய நடவடிக்கையை மேற்கொண்டு, இலங்கை தேசிய நீரியல் அலுவலகத்திற்கும் (SLNHO) ஐக்கிய இராச்சிய நீர்வரைவியல் அலுவலகத்திற்கும் (UKHO) இடையிலான இருதரப்பு ஒப்பந்த்திற்கு கையொப்பமிடல், இன்று (2025 பெப்ரவரி 14) கொழும்பில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்றது.
14 Feb 2025
ஐக்கிய இராச்சியத்தின் நீர்வரைவியல் அலுவலகத்தின் தலைவர், உத்தியோகப்பூர்வ சந்திப்பிற்காக கடற்படை தளபதியை சந்தித்தார்

ஐக்கிய இராச்சியத்தின் நீர்வரைவியல் அலுவலகத்தின் தலைவர், ரியர் அட்மிரல் Angus Essenhigh, இன்று (2025 பெப்ரவரி 14) அட்மிரல் கான்சன பானகொடவை கடற்படைத் தலைமையகத்தில் உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக சந்தித்தார்.
14 Feb 2025
புதுப்பிக்கப்பட்ட 84S வகை அரை தானியங்கி துப்பாக்கிகள் (34) முப்பத்து நான்கினை கடற்படையினரால், துப்பாக்கி சுடுதல் விளையாட்டு கழகங்களிற்கு வழங்கப்பட்டது

துப்பாக்கிச் சுடுதல் விளையாட்டுகளை ஊக்குவிக்கும் வகையில், 34 பணிநீக்கம் செய்யப்பட்ட 84S அரை தானியங்கி துப்பாக்கிகள் பாதுகாப்புத் தரங்களுக்கு ஏற்ப இலங்கை கடற்படையால் பழுதுபார்க்கப்பட்டு, 2025 பெப்ரவரி 08 அன்று பனலுவ துப்பாக்கிச் சுடும் மைதானத்தில் துப்பாக்கிச் சுடும் விளையாட்டுக் கழகங்களிடையே விநியோகிக்கப்பட்டன.
14 Feb 2025
இலங்கை தன்னார்வ கடற்படையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் எச்என்எஸ் பெரேரா பதவியேற்றார்

இலங்கை தன்னார்வ கடற்படையின் புதிய தளபதியாக நியமிக்கப்பட்ட ரியர் அட்மிரல் எச்.என்.எஸ். பெரேரா இன்று (2025 பெப்ரவரி 13) வெலிசர, தன்னார்வ கடற்படை தலைமையகத்தில், இலங்கை தன்னார்வ கடற்படையின் புதிய தளபதியாக பொறுப்பேற்றார்.
13 Feb 2025
256 ஆம் ஆட்சேர்ப்பின் அடிப்படை பயிற்சியை பூர்த்தி செய்த 367 கடற்படையினரின் வெளியேறல் அணிவகுப்பு

இலங்கை நிரந்தர மற்றும் தன்னார்வ கடற்படையின் 256 ஆம் ஆட்சேர்ப்புக்கு சொந்தமான நிரந்தர கடற்படையின் இருநூற்று பத்தொன்பது (219) பயிற்சி மாலுமிகள் மற்றும் தன்னார்வ கடற்படையின் நூற்று நாற்பத்து எட்டு (148) பயிற்சி மாலுமிகள் உட்பட மொத்தம் முந்நூற்று அறுபத்தேழு (367) பயிற்சி மாலுமிகள் அவர்களின் அடிப்படை பயிற்சியை பூர்த்தி செய்து 2025 பெப்ரவரி 11 ஆம் திகதி இலங்கை கடற்படை கப்பல் நிபுன நிருவனத்தில் நடந்த அணிவகுப்பு வைபவத்தின் போது வெளியேறிச் சென்றனர்.
12 Feb 2025
கடற்படைத் தளபதி உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக கௌரவ நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சரை சந்தித்தார்

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொட அவர்கள், நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் கௌரவ சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார அவர்களை உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக 2025 பெப்ரவரி 11 அன்று நீதியமைச்சில் சந்தித்தார்.
11 Feb 2025
ருவண்டா பாதுகாப்பு சேவை ஆணை மற்றும் நிர்வாக கல்லூரியின் அதிகாரிகள் குழு ஒரு ஆய்வு சுற்றுப்பயணத்திற்காக கடற்படை தலைமையகத்திற்கு வருகை தந்தனர்.

2025 பெப்ரவரி 9 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை இலங்கையில் ஆய்வு விஜயத்திற்காக ருவண்டா பாதுகாப்பு சேவை ஆணை மற்றும் நிர்வாக கல்லூரியின், நிர்வாக பாடநெறியைப் படிக்கும் பதினைந்து (15) மாணவர் உத்தியோகத்தர்கள் மற்றும் நான்கு (04) கல்விப் பணியாளர்களை உள்ளடக்கிய கர்னல் LAUSANNE NSENGIMANA INGABIRE தலைமையிலான அதிகாரிகள் குழு இன்று (2025 பெப்ரவரி 11) ஆம் திகதி கடற்படை தலைமையகத்திற்கு விஜயம் செய்தனர், அங்கு கர்னல் LAUSANNE NSENGIMANA INGABIRE மற்றும் பிற சிரேஷ்ட அதிகாரிகள் கடற்படை தளபதியை சந்தித்தனர்.
11 Feb 2025
பிரதி பாதுகாப்பு அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) கடற்படை தலைமையகத்தில் கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்

பிரதி பாதுகாப்பு அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) 2025 பெப்ரவரி 10 ஆம் திகதி கடற்படைத் தலைமையகத்தில் முதல் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டதுடன், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொட அவர்களால் கடற்படையின் பாரம்பரிய முறைப்படி கடற்படை தலைமையகத்திற்கு வரவேற்கும் நிகழ்வு இடம் பெற்றது.
10 Feb 2025
கொடி அதிகாரி கடற்படை ஏவுகணை கட்டளையின் அதிகாரியாக ரியர் அட்மிரல் இந்திக டி சில்வா பொறுப்பேற்றார்

கடற்படை கொடி அதிகாரி கடற்படை ஏவுகணை கட்டளையின் அதிகாரியாக, ரியர் அட்மிரல் இந்திக டி சில்வா இன்று (2025 பெப்ரவரி 10) திருகோணமலை கடற்படை தளத்தில், கொடி அதிகாரி கடற்படை ஏவுகணை கட்டளை அலுவலகத்தில் கடமைகளை பொறுப்பேற்றார்.
10 Feb 2025
க்லீன் ஶ்ரீ லங்கா தேசிய திட்டத்தின் கீழ் கடற்கரையை சுத்தப்படுத்தும் திட்டங்களுக்கு கடற்படையின் பூரண பங்களிப்பு

க்லீன் ஶ்ரீ லங்கா தேசியத் திட்டத்தின் கீழ் தீவைச் சுற்றியுள்ள கரையோரங்களைச் சுத்தப்படுத்துவதற்காக அரசாங்கம் நடைமுறைப்படுத்திய "சுத்தமான கடற்கரை - ஒரு கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலம்" திட்டத்துடன் இணைந்து இன்று (2025 பெப்ரவரி 09) மேற்கு மற்றும் தென் பிராந்தியங்களில் ஆரம்பிக்கப்பட்ட கடற்கரைச் சுத்திகரிப்புத் திட்டங்களுக்கு கடற்படை முழுமையாகப் தனது பங்களிப்பை வழங்கியது.
09 Feb 2025