நிகழ்வு-செய்தி

பாக்கிஸ்தான் கடற்படை அகாடமியில் மிகச் சிறந்த மத்திய அதிகாரிக்கான விருதைப் பெற்ற மத்திய அதிகாரி டிஎம்ஐவி தென்னகோன், பிரதி பாதுகாப்பு அமைச்சரிடமிருந்து விசேட பாராட்டுக்களைப் பெற்றார்.

பாகிஸ்தான் கடற்படை அகாடமியில் பயிற்சியை வெற்றிகரமாக முடித்து, மிகச்சிறந்த மத்திய அதிகாரிக்கான வாள் விருதை பெற்ற, மத்திய அதிகாரி டிஎம்ஐவி தென்னகோன், இன்று (2025 ஜனவரி 27,) கௌரவ பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பானகொட அவர்களை பாதுகாப்பு பிரதி அமைச்சர் அலுவலகத்தில் சந்தித்தார்.

27 Jan 2025

கடற்படையினர் திருகோணமலையில் சுகாதார மேம்பாட்டு நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தினர்

இலங்கை கடற்படையினர் திருகோணமலை நகர லயன்ஸ் கலகத்துடன் இணைந்து 2025 ஜனவரி 25 ஆம் திகதி திருகோணமலை மாநகர சபை மண்டபத்தில் தொற்றா நோய்களைக் கண்டறிதல் மற்றும் சுகாதார மேம்பாட்டுத் திட்டத்தை வெற்றிகரமாக நடத்தினர்.

27 Jan 2025

கடற்படை மற்றும் கடல்சார் கல்லூரியின், வருடாந்த இதழான ‘THE PORTHOLE’ வெளியீடு

திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் கல்லூரியினால் வெளியிடப்படும் வருடாந்த தொழில்முறை வெளியீடான 'The Porthole' இன் மூன்றாவது இதழ் கடற்படை மற்றும் கடல்சார் கல்லூரியின் தளபதி ரியர் அட்மிரல் ரொஹான் ஜோசப் அவர்களால் வைஸ் அட்மிரல் காஞ்சன பானகொடவிடம் இன்று (2025 ஜனவரி 27,) கடற்படை தலைமையகத்தில் வைத்து வழங்கப்பட்டது.

27 Jan 2025

கடற்படைத் தளபதி இராமஞ்ஞ மஹா நிக்காயவின் மஹாநாயக தேரரை சந்தித்து, கடற்படையின் எதிர்கால நடவடிக்கைகளுக்காக ஆசீர்வாதம் பெற்றார்

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காண்சன பானகொட, இன்று (2025 ஜனவரி 26) மீரிகம, மினிஒலுவ ஶ்ரீ வித்தியாவாச பிரவெண மஹா விஹாரஸ்தானத்தில், இலங்கை இராமஞ்ஞ மஹா நிகாயையின் மகாநாயக்கர், அக்கமஹா பண்டித அத்திபூஜ்ய மகுலேவெ ஶ்ரீ விமல நாயக்கரை வணங்கி, கடற்படையின் எதிர்கால நடவடிக்கைகளுக்காக ஆசீர்வாதம் பெற்றார்.

26 Jan 2025

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 03 இந்திய மீன்பிடி படகுகள் மன்னார் வடக்கு கடற்பரப்பில் கைது

இலங்கை கடற்படை, கடலோர பாதுகாப்பு திணைக்களத்துடன் இணைந்து 2025 ஜனவரி 25 இரவு மற்றும் இன்று காலை (2025 ஜனவரி 26) மன்னாருக்கு வடக்கே இலங்கைக்கு சொந்தமான கடற்பரப்பில் சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட (34) இந்திய மீனவர்கள், (03) இந்திய மீன்பிடி படகுகளுடன் கைது செய்யப்பட்டனர்.

26 Jan 2025

யாழ்ப்பாணத்தில் கடற்படை சிறப்பு நடமாடும் பல் மருத்துவ மனைகளை வெற்றிகரமாக நடபெற்றது

இலங்கை கடற்படையின் மற்றுமொரு சமூகப் பணியாக ஒழுங்கமைக்கப்பட்ட விசேட நடமாடும் பல் மருத்துவ மனைகள் 2025 ஜனவரி 21 முதல் 23 வரை யாழ்ப்பாணம் மாதகல் புனித அந்தோனியார் தேவாலயம், காங்கேசன்துறை நடேஸ்வ கல்லூரி மற்றும் வெத்திலகர்ணி பரமேஸ்வ கல்லூரியில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

25 Jan 2025

மேற்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் சந்திம சில்வா பொறுப்பேற்றார்

மேற்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் சந்திம சில்வா இன்று (2025 ஜனவரி 24) கட்டளைத் தலைமையகத்தில் பதவியேற்றார்.

24 Jan 2025

"க்ளீன் ஸ்ரீலங்கா" தேசிய திட்டத்தின் கீழ் அரசாங்கத்தின் நெல் களஞ்சியசாலைகளை சுத்தம் செய்தல் மற்றும் பழுதுபார்க்கும் பணிகளுக்கு கடற்படையின் ஆதரவு

“வளமான நாடு - அழகான வாழ்வு” என்ற அரசாங்கத்தின் தூரநோக்கை நனவாக்கும் க்ளீன் ஸ்ரீ லங்கா தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், உயர் பருவ நெல் அறுவடையை சேமித்து வைப்பதற்காக அனுராதபுரம் மற்றும் மன்னார் மாவட்டங்களில் அமைந்துள்ள அரச நெல் களஞ்சியசாலைகளை கடற்படையினர் சுத்தப்படுத்துதல் மற்றும் பழுதுபார்த்தல், 2025 ஜனவரி 23 அன்று ஆரம்பிக்கப்பட்டது.

24 Jan 2025

ரியர் அட்மிரல் ஹசந்த தசநாயக்க கடற்படை பொது பொறியியல் பணிப்பாளராக பொறுப்பேற்றுக் கொண்டார்

ரியர் அட்மிரல் ஹசந்த தசநாயக கடற்படையின் பொது பொறியியல் இயக்குனராக இன்று (2025 ஜனவரி 23) கடற்படை தலைமையகத்தின் பொது பொறியியல் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.

23 Jan 2025

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கடற்படைத் தளபதியை சந்தித்தார்

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் Colonel Amanda Johnston கடற்படைத் தலைமையகத்தில் உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பானகொடவை இன்று (2025 ஜனவரி 22) சந்தித்தார்.

22 Jan 2025