நிகழ்வு-செய்தி
மனிதாபிமான உதவி மற்றும் அனர்த்த நிவாரணப் பயிற்சி அமரடவானது 2025 விரைவு அதிரடி படகு படை தலைமையகத்தில் ஆரம்பமாகிறது
மனிதாபிமான உதவி மற்றும் அனர்த்த நிவாரணப் பயிற்சி அமரடவானது 2025 நவம்பர் 12 ஆம் திகதி புத்தளம், கங்கே வாடியவில் உள்ள கடற்படை விரைவு அதிரடி படகு படை தலைமையகத்தில் உள்ள அனர்த்த முகாமைத்துவ பயிற்சிப் பாடசாலையில் ஆரம்பமானது.
13 Nov 2025
75 வது கடற்படை ஆண்டு நிறைவை முன்னிட்டு, ரபேவ சிறி தேவமித்த தொடக்கப்பள்ளியை சுத்தம் செய்ய கடற்படை சமூக பராமரிப்பு பங்களிப்பை வழங்கியது
இலங்கை கடற்படையின் பெருமைமிக்க 75 வது கடற்படை ஆண்டு நிறைவை முன்னிட்டு, "க்ளீன் ஶ்ரீ லங்கா" தேசிய திட்டத்தின் கீழ், பள்ளி வளாகங்களை சுத்தம் செய்தல் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான தேசிய திட்டத்தின் கீழ், அனுராதபுரம், ரபேவ சிறி தேவமித்த தொடக்கப்பள்ளியை சுத்தம் செய்வதற்கான கடற்படையின் சமூக சேவை பங்களிப்பு 2025 நவம்பர் 08 ஆம் திகதி வழங்கப்பட்டது.
13 Nov 2025
கடற்படை சிறப்பு படகு படை அதன் 32 வது ஆண்டு நிறைவை பெருமையுடன் கொண்டாடியது
இலங்கை கடற்படையின் சிறப்பு படகு படைபிரிவின் பெருமைமிக்க 32 வது ஆண்டு விழா, திருகோணமலையில் உள்ள சிறப்பு படகு படைப்பிரிவு தலைமையகத்தில், படைப்பிரிவின் கட்டளை அதிகாரி அவர்களின் தலைமையில் 2025 நவம்பர் 06 ஆம் திகதி கொண்டாடப்படுகின்றது.
13 Nov 2025
இலங்கை மற்றும் இந்திய கடற்படைகளுக்கு இடையிலான 35வது சர்வதேச கடல்சார் எல்லைக் கூட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்தது
இலங்கை மற்றும் இந்திய கடற்படைகளுக்கு இடையிலான 35வது சர்வதேச கடல்சார் எல்லைக் கூட்டம் (International Maritime Boundary Line meeting), காங்கேசன்துறைக்கு வடக்கே இந்திய-இலங்கை கடல் எல்லையில் இந்திய கடற்படையின் INS Sukanya கப்பலில் 2025 நவம்பர் 11 அன்று வெற்றிகரமாக நடைபெற்றது.
12 Nov 2025
75வது கடற்படை ஆண்டு நிறைவை முன்னிட்டு நடைபெற்ற மாலுமிகளின் நட்புரீதியான ஒன்றுக்கூடல் கடற்படை மரபுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு நடைபெற்றது
இலங்கை கடற்படையின் பெருமைமிக்க 75 வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில் கடற்படை மரபுகள் மற்றும் சர்வ மத மரபுகளுக்கு ஏற்ப தொடர்ச்சியான நிகழ்ச்சிகளை கடற்படை ஏற்பாடு செய்துள்ளது. இந்தத் தொடரில் மாலுமிகளின் நட்புரீதியான ஒன்றுகூடல் இன்று (2025 நவம்பர் 07) வெலிசரவில் உள்ள ‘Wave N’ Lake’ கடற்படை உற்சவ மண்டபத்தில் நடைபெற்றது.
08 Nov 2025
கடற்படையால் நிறுவப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையமானது பொதுமக்களுக்காக கையளிக்கப்பட்டது
கடற்படையின் சமூக சேவை திட்டத்தின் கீழ் மாத்தளை மாவட்டத்தின் கலேவல பிரதேச செயலகப் பிரிவில் உள்ள க/ மெதபெத்த மகா வித்தியாலயத்தில் நிறுவப்பட்ட மீள் நீர் சுத்திகரிப்பு நிலையம் 2025 அக்டோபர் 31 அன்று பொதுமக்களுக்காக கையளிக்கப்பட்டது.
04 Nov 2025
கடற்படைத் தளபதி தேசிய பாதுகாப்பு கல்லூரியின் 04வது பாடநெறிக்காக வரவேற்பு விரிவுரையை நிகழ்த்தினார்
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொட, கொழும்பு தேசிய பாதுகாப்பு கல்லூரியில் நான்காவது (04) தேசிய பாதுகாப்பு பாடநெறியில் பயிலும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு ஆயுதப்படைகள் மற்றும் காவல்துறையின் சிரேஷ்ட அதிகாரிகளுக்கு ‘Role of Sri Lanka Navy in National Security’ என்ற தலைப்பில் 2025 நவம்பர் 03 ஆம் திகதி வரவேற்பு விரிவுரையை நிகழ்த்தினார். மேலும், அந்த சந்தர்ப்பத்தில், கடற்படைத் தளபதியை கௌரவிக்கும் வகையில் ‘Hall of Fame’ இல் கடற்படைத் தளபதியின் பெயரும் சேர்க்கப்பட்டது.
04 Nov 2025
இலங்கை முன்னாள் படைவீரர் சங்கத்தின் பாப்பி குழுவின் தலைவர் கடற்படை தலைமையகத்தில் கடற்படைத் தளபதிக்கு பாப்பி மலரை அணிவித்தார்
வீரமரணம் அடைந்த போர் வீரர்களை நினைவுகூரும் வகையில் நடத்தப்பட்ட பாப்பி மலர் நினைவேந்தலுடன் இணைந்து, இலங்கை முன்னாள் படைவீரர் சங்கத்தின் பாப்பி மலர் குழுவின் தலைவர் மேஜர் ஜெனரல் மஹிந்த முதலிகே (ஓய்வு), இன்று (2025 நவம்பர் 04) கடற்படை தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொடவுக்கு பாப்பி மலரை அணிவித்தார்.
04 Nov 2025
ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படைக் கப்பலான AKEBONO தனது உத்தியோகப்பூர்வ பயணத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு தீவிலிருந்து புறப்பட்டது
ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படைக் கப்பலான AKEBONO தனது உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு, இன்று (2025 அக்டோபர் 31) தீவை விட்டுப் புறப்பட்டது. கொழும்பு துறைமுகத்தில் இலங்கை கடற்படையினரால் இந்தக் கப்பலுக்கு பாரம்பரிய கடற்படை முறைப்படி பிரியாவிடை வழங்கப்பட்டது.
01 Nov 2025
மேற்குக் கடலில் கூட்டு கடற்படைப் பயிற்சிகளால் இலங்கை-ஜப்பான் கடற்படை ஒத்துழைப்பு வலுப்பெற்றது
இலங்கை மற்றும் ஜப்பானிய கடற்படை ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், தனது உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு தீவை விட்டுப் புறப்பட்ட ஜப்பானிய கடல்சார் தற்காப்புப் படைக் கப்பலான AKEBONO, இன்று (2025 அக்டோபர் 31) மேற்குக் கடலில் இலங்கை கடற்படைக் கப்பலான சயுரவுடன் கூட்டு கடற்படைப் பயிற்சியில் ஈடுபட்டது.
01 Nov 2025


