நிகழ்வு-செய்தி

சீரற்ற் வானிலையின் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மீட்டெடுக்க கடற்படையின் தொடர்ச்சியான ஆதரவு

சீரற்ற் வானிலையின் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மீட்டெடுக்க கடற்படையால் செயல்படுத்தப்பட்ட சிறப்பு திட்டத்தின் கீழ், புத்தளம், வனாத்தவில்லு பிரதேச செயலகத்துடன் இணைந்து புக்குளம் மீன்பிடி கிராம மக்களுக்கு நிவாரணம் 2025 டிசம்பர் 09 அன்று வழங்கப்பட்டதுடன், நயாறு குளம் வழியாக அப்பகுதி மக்களுக்கு போக்குவரத்து வசதிகளை வழங்குவதன் கீழ், கடற்படை நானூற்று ஐம்பது (450) பேரையும் முப்பத்து மூன்று (33) மோட்டார் சைக்கிள்களையும் பாதுகாப்பாக 2025 டிசம்பர் 09 அன்று கொண்டு சென்றது.

10 Dec 2025

பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியின் 19 வது பாடநெறியில் கடற்படைத் தளபதி விருந்தினர் சொற்பொழிவு ஆற்றினார்

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொட மற்றும் சபுகஸ்கந்த பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியின் பத்தொன்பதாவது (19) பணியாளர் பாடநெறிக்கு அழைக்கப்பட்ட சொற்பொழிவு 2025 டிசம்பர் 08 ஆம் திகதி கல்லூரி கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

10 Dec 2025

இலங்கை கடற்படை தனது 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு அக்குரேகொட பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் இருந்து கடற்படை தலைமையகத்தில் அதிகாரப்பூர்வமாக பணிகளைத் தொடங்குகிறது

இலங்கை கடற்படையின் பெருமைமிக்க 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, அக்குரேகொடவில் உள்ள பாதுகாப்பு தலைமையக வளாகத்தின் (Block No 3) 3 ஆம் தொகுதியில் உள்ள கடற்படை தலைமையகத்தில், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொடவின் அழைப்பின் பேரில், கௌரவ பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) அவர்களின் தலைமையில், அட்மிரல் ஒப் தி ப்ளீட் வசந்த கரன்னாகொட உள்ளிட்ட முன்னாள் கடற்படைத் தளபதிகள், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகோந்தா (ஓய்வு), இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரோட்ரிகோ, விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் வாசு பந்து எதிரிசிங்க மற்றும் இலங்கை பொலிஸ் மா அதிபர் வழக்கறிஞர் பிரியந்த வீரசூரிய ஆகியோரின் முன்னிலையில், கடமைகளை உத்தியோகபூர்வமாகத் தொடங்கும் விழா இன்று (2025 டிசம்பர் 09) அக்குரேகொடவில் உள்ள கடற்படைத் தலைமையகத்தில் மரியாதைக்குரியவர்களின் பங்கேற்புடன் மிகவும் பெருமையுடன் நடைபெற்றது.

09 Dec 2025

75 வது கடற்படை தினத்தை முன்னிட்டு தலதா மாளிகையில் மத நிகழ்வானது இடம்பெற்றது

இலங்கை கடற்படையின் பெருமைமிகு 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு கடற்படைக்கு ஆசிர்வாதம் பெறுவதற்காக பல்வேறு சர்வ மத நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன. இந்த மத நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக, கண்டியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகைக்கான கிலன்பச புத்த பூஜை 2025 டிசம்பர் 08 அன்று நடைபெற்றது, மேலும் தலதா தாதுக்கான அன்னதானம் இன்று (2025 டிசம்பர் 09) நடைபெற்றது.

09 Dec 2025

மனிதாபிமான உதவிகளுடன் நான்கு இந்திய கடற்படைக் கப்பல்கள் தீவை வந்தடைந்தன

தீவை பாதித்த சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவிகளுடன் இந்திய கடற்படையின் போர்க்கப்பலான INS GHARIAL மற்றும் மூன்று (03) தரையிறங்கும் கப்பல்கள் 2025 டிசம்பர் 07 மற்றும் 08 ஆகிய திகதிகளில் தீவை வந்தடைந்தன, மேலும் இலங்கை கடற்படை திருகோணமலை துறைமுகத்திலும் கொழும்பு துறைமுகத்திலும் பாரம்பரிய கடற்படை முறைப்படி கப்பல்களை வரவேற்றது.

09 Dec 2025

இலங்கை கடற்படை தனது 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு 2086 கடற்படை வீரர்களுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டது

பெருமைமிக்க வரலாற்றைக் கொண்ட இலங்கை கடற்படையின் 75 வது ஆண்டு விழா, சமூக, சுற்றுச்சூழல் மற்றும் நெறிமுறை முயற்சிகள் உள்ளடக்கப்பட்டு, கடற்படை மரபுகள் மற்றும் மத நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு 2025 டிசம்பர் 09 அன்று பெருமையுடன் கொண்டாடப்பட்டது. இதில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொடவின் பரிந்துரையின் பேரில், கடற்படையால் 17 அதிகாரிகள் அடுத்த தரத்திற்கும் 2069 சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட மாலுமிகள் அடுத்த தரத்திற்கும் பதவி உயர்வு பெற்றனர்.

09 Dec 2025

இலங்கை கடற்படையின் 75வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையிலும், சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆசிப் பெறுவதற்காகவும், வெலிசறை கடற்படை வளாகத்தில் சமய நிகழ்வானது இடம்பெற்றது

இலங்கை கடற்படையின் 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டும் தீவை பாதித்த சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆசிப் பெறுவதற்காகவும் கடற்படைக்கு ஆசீர்வாதம் பெறவதற்காகவும் 2025 டிசம்பர் 09 அன்று வெலிசறை கடற்படை வளாகத்தில், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொட அவர்களின் தலைமையில், கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி அனுஷா பானகொட அவர்களின் பங்கேற்புடன், இரவு முழுவதும் பிரித் ஓதுதல் மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

07 Dec 2025

இலங்கை நிரந்தர மற்றும் தன்னார்வ கடற்படையின் 261 வது ஆட்சேர்ப்பைச் சேர்ந்த 432 பயிற்சி மாலுமிகள் வெளியேறிச் செல்கின்றனர்

இலங்கை நிரந்தர மற்றும் தன்னார்வ கடற்படையின் 261 வது ஆட்சேர்ப்பைச் சேர்ந்த முந்நூற்று எழுபத்தாறு (376) நிரந்தர பயிற்சி மாலுமிகள் மற்றும் ஐம்பத்தாறு (56) தன்னார்வ பயிற்சி மாலுமிகள் அடங்கிய நானூற்று முப்பத்திரண்டு (432) மாலுமிகள், தங்கள் அடிப்படைப் பயிற்சியை வெற்றிகரமாக முடித்து, 2025 டிசம்பர் 06 ஆம் திகதி அன்று புனேவையில் உள்ள இலங்கை கடற்படை கப்பல் ஷிக்‌ஷா நிறுவனத்தின் பிரதான பயிற்சி மைதானத்தில் இருந்து வெளியேறிச் சென்றனர். இலங்கை கடற்படை கப்பல் ஷிக்‌ஷா நிறுவனத்தின் தளபதி மற்றும் கட்டளை அதிகாரி கெப்டன் சாகர உதயங்கவின் அழைப்பின் பேரில், கடற்படை காலாட்படை தளபதி, ரியர் அட்மிரல் நிஷாந்த ரணவீர, வெளியேறிச் செல்லும் அணிவகுப்பில் பிரதம விருந்தினராகப் பங்கேற்றார்.

06 Dec 2025

சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு மீட்டெடுக்க கடற்படையின் தொடர்ச்சியான ஆதரவு

சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு மீட்டெடுக்க மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரணம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளை வழங்க கடற்படையால் செயல்படுத்தப்பட்ட சிறப்பு திட்டத்தின் கீழ், இன்று (2025 டிசம்பர் 06) புத்தளம், அனுராதபுரம், கண்டி, நுவரெலியா, திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய பேரிடர் நிவாரணம் மற்றும் மனிதாபிமான உதவி நடவடிக்கைகளுக்கு கடற்படையினர் பங்களித்தனர்.

06 Dec 2025

சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மீட்டெடுக்க கடற்படையின் தொடர்ச்சியான ஆதரவு

சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவி மற்றும் அனர்த்த நிவாரணம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளை வழங்குவதற்கும் இயல்பு வாழ்க்கையை மீட்டெடுப்பதற்கும், கடற்படையால் முழு தீவுக்கும் செயல்படுத்தப்படும் சிறப்பு திட்டத்தின் கீழ், புத்தளம், அனுராதபுரம், கண்டி, நுவரெலியா, திருகோணமலை, பதுளை மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய அனர்த்த நிவாரணம் மற்றும் மனிதாபிமான உதவி நடவடிக்கைகளில் கடற்படை இன்று (2025 டிசம்பர் 05,) பங்களித்தது.

05 Dec 2025