நிகழ்வு-செய்தி
இலங்கை நிரந்தர மற்றும் தன்னார்வ கடற்படையின் 262வது ஆட்சேர்ப்பைச் சேர்ந்த 363 பயிற்சி மாலுமிகள் வெளியேறிச் சென்றனர்
இலங்கை நிரந்தர மற்றும் தன்னார்வ கடற்படையின் 262 ஆம் ஆட்சேர்ப்பைச் சேர்ந்த நிரந்தர கடற்படையின் முந்நூற்று ஐந்து (305) பயிற்சி மாலுமிகள் மற்றும் தன்னார்வ கடற்படையின் ஐம்பத்தெட்டு (58) பயிற்சி மாலுமிகள் உட்பட மொத்தம் முந்நூற்று அறுபத்து மூன்று (363) பயிற்சி மாலுமிகள் அவர்களின் அடிப்படை பயிற்சியை பூர்த்தி செய்து 2026 பெப்ரவரி 13 ஆம் திகதி காலி, பூஸ்ஸ இலங்கை கடற்படை கப்பல் நிபுன நிறுவனத்தின் பிரதான பயிற்சி மைதானத்தில் இருந்து வெளியேறிச் சென்றனர்.
14 Feb 2026
ரோயல் ஓமன் கடற்படைக் கப்பல் ‘SADH’ விநியோக மற்றும் சேவை தேவைகளை முடித்த பிறகு தீவிலிருந்து புறப்பட்டது
விநியோக மற்றும் சேவை தேவைகளை மேற்கொள்வதற்காக 2026 பிப்ரவரி 10 ஆம் திகதி தீவை வந்தடைந்த ரோயல் ஓமான் கடற்படையின் போர்க்கப்பலான ‘SADH’, 2026 பிப்ரவரி 12 ஆம் திகதி தீவை விட்டுப் புறப்பட்டதுடன், மேலும் கொழும்பு துறைமுகத்தில் கடற்படை மரபுப்படி இலங்கை கடற்படையினர் குறித்த கப்பலுக்கு பிரியாவிடை அழித்தனர்.
13 Feb 2026
மிலான் மற்றும் சர்வதேச கடற்படை கண்காணிப்பு 2026 பலதரப்பு கடற்படைப் பயிற்சிகளில் பங்கேற்க இலங்கை கடற்படைக் கப்பல்களான சாகர மற்றும் நந்திமித்ர தீவிலிருந்து புறப்பட்டது
இந்திய கடற்படையால் ஏற்பாடு செய்யப்பட்ட பலதரப்பு கடற்படைப் பயிற்சியான 13வது மிலன் மற்றும் சர்வதேச போர்க்கப்பல் மதிப்பாய்வு-2026,பெப்ரவரி 17 முதல் 25 வரை, இந்தியாவின் விசாகப்பட்டினம் துறைமுகம் மற்றும் வங்காள விரிகுடாவின் கிழக்கு இந்திய கடற்கரையை மையமாகக் கொண்டு நடைபெறுவதுடன், இலங்கை கடற்படையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இரண்டு இலங்கை கடற்படைக் கப்பல்களான சாகர மற்றும் நந்திமித்ர, இந்தப் பயிற்சியில் பங்கேற்க 2026 பெப்ரவரி 11, அன்று கொழும்பு துறைமுகத்திலிருந்து தீவை விட்டுப் புறப்பட்டன.
12 Feb 2026
வணிகக் கப்பல் பாதுகாப்பு குழுக்களுக்கு தேவையான வசதிகளை வழங்கும் நடவடிக்கைகள் மூலம் இலங்கை கடற்படை 4 மாதங்களில் 598,250.00 அமெரிக்க டாலர் அந்நிய செலாவணியை ஈட்டியுள்ளது
இலங்கை கடற்படை, வெளிநாட்டு தனியார் கடல்சார் பாதுகாப்பு நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டதன் மூலம், வணிகக் கப்பல் பாதுகாப்பு குழுக்களுக்கு (Onboard Security Team - OBST) வசதிகளை வழங்கும் சுயாதீன செயல்பாட்டை 2025 அக்டோபர் 03 அன்று தொடங்கியதுடன், கடந்த நான்கு (04) மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட 323 நடவடிக்கைகள் மூலம், நேரடியாக 598,250.00 அமெரிக்க டாலர்களை ஈட்டி, அந்த அந்நியச் செலாவணி வருமானத்தை தேசிய நலனுக்காக வழங்க முடிந்தது. இது தொடர்பான ஊடக சந்திப்பு 2026 பிப்ரவரி 11 அன்று கடற்படை நடவடிக்கைகள் இயக்குநர் ஜெனரலின் தலைமையில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது.
12 Feb 2026
ஓமான் கடற்படையின் போர்க்கப்பலான ‘SADH’ கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது
ரோயல் ஓமான் கடற்படையின் போர்க்கப்பலான ‘SADH’ இன்று (2026 பிப்ரவரி 10) விநியோக மற்றும் சேவை விஜயத்திற்காக தீவை வந்தடைந்ததுடன், மேலும் இலங்கை கடற்படை கொழும்பு துறைமுகத்தில் கடற்படையினர் மரபுகளுக்கு ஏற்ப கப்பலை வரவேற்றது.
10 Feb 2026
78 வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு கடற்படை இரத்த தான திட்டங்களை நடத்தியது
78 வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு, கடற்படை பல இரத்த தான திட்டங்களை ஏற்பாடு செய்தது. இதன்படி, திருகோணமலை புல்மோட்டை மருத்துவமனை மற்றும் மட்டக்களப்பு போதனா மருத்துவமனை ஆகியவற்றில் இரத்த தான நிகழ்வுகள் 2026 பிப்ரவரி 02 மற்றும் 05 ஆகிய திகதிகளில் வெற்றிகரமாக நடைபெற்றது.
09 Feb 2026
மீன்பிடி சமூகத்தினருக்கான அடிப்படை வாழ்க்கை ஆதரவு பயிற்சி திட்டத்தை கடற்படை நடத்தியது
இலங்கை கடற்படையால் மீனவ சமூகத்தினருக்காக ஏற்பாடு செய்யப்பட்ட அடிப்படை முதலுதவி மற்றும் உயிர்காப்பு (Basic Life Support - BLS) பயிற்சி திட்டம் 2026 பிப்ரவரி 02, அன்று திருகோணமலையில் உள்ள கோட்பே மீன்வளத் துறைமுகத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது.
08 Feb 2026
இந்திய கடற்படை போர்க்கப்பலான ‘INS GHARIAL’ தனது உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக முடித்து தீவிலிருந்து புறப்பட்டது
நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக 2026 பிப்ரவரி 04 அன்று இலங்கைக்கு வந்த இந்திய கடற்படைக் கப்பலான 'INS GHARIAL', தனது உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு 2026 பிப்ரவரி 06 அன்று இலங்கையிலிருந்து புறப்பட்டது. கொழும்பு துறைமுகத்தில் அந்தக் கப்பலுக்கு கடற்படை சம்பிரதாயபூர்வமான பிரியாவிடையை வழங்கியது.
08 Feb 2026
78 வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு வட மாகாணத்தில் கடற்கரைகள் மற்றும் பொது இடங்களை சுத்தம் செய்வதில் கடற்படையின் பங்களிப்பு
78 வது தேசிய சுதந்திர தினத்தைக் கொண்டாடும் விதமாக வட மாகாணத்தில் கடற்கரை மற்றும் பொது இடங்களை சுத்தம் செய்யும் திட்டங்களுக்கு கடற்படையின் சமூக சேவை பங்களிப்பானது 2026 பிப்ரவரி 04 அன்று மேற்கொள்ளப்பட்டது.
07 Feb 2026
கச்சத்தீவு வருடாந்த திருவிழாவைக் கொண்டாடுவதற்காக கடற்படையானது உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி வருகின்றது
யாழ்ப்பாணம் தீபகற்பத்தில் உள்ள கச்சத்தீவு தீவில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க புனித அந்தோணியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழாவை 2026 பெப்ரவரி 27 மற்றும் 28 ஆகிய திகதிகளில் நடத்த யாழ்ப்பாண மாவட்ட செயலகம் ஏற்பாடுகளை செய்துள்ளதுடன், மேலும் குறித்த நிகழ்விற்கு தேவையான உள்கட்டமைப்பை நிறுவுவதற்கு இலங்கை கடற்படை தொழில்நுட்பம், வளம் மற்றும் மனிதவள ஆதரவை வழங்கி வருகிறது.
06 Feb 2026


