நிகழ்வு-செய்தி

“க்ளீன் ஶ்ரீ லங்கா” தேசிய திட்டத்தின் கீழ் காலியில் உள்ள கராப்பிட்டிய மருத்துவமனை வளாகத்தை சுத்தம் செய்யும் பணிகளுக்கு கடற்படை பங்களிப்பு

“க்ளீன் ஶ்ரீ லங்கா” தேசிய திட்டத்திற்கு இணங்க, கடற்படையினரால் காலியில் உள்ள கராபிட்டிய மருத்துவமனையில் 2026 மார்ச் 02 ஆம் திகதி ஒரு துப்புரவு திட்டம் மேற்கொள்ளப்பட்டது.

06 Mar 2026

மாலைதீவு கடலோர காவல்படை கப்பலான 'HURAVEE' தீவை வந்தடைந்தது

மாலைதீவு கடலோர காவல்படை கப்பலான 'HURAVEE' 2026 மார்ச் 02 ஆம் திகதி தீவுக்கு பொருட்கள் மற்றும் சேவைகளை மேற்கொள்வதற்காக வந்தடைந்ததுடன் , மேலும் இலங்கை கடற்படையினர் கொழும்பு துறைமுகத்தில் கடற்படை மரபுகளுக்கு இணங்க குறித்த கப்பலை வரவேற்றனர்.

03 Mar 2026

இந்திய கடற்படையால் ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச கடற்படை மதிப்பாய்வு மற்றும் MILAN - 26 பலதரப்பு கடற்படைப் பயிற்சிக்குப் பிறகு 'சாகர' மற்றும் 'நந்திமித்திர' ஆகியவை இலங்கையை வந்தடைந்தன

இந்தியாவின் விசாகப்பட்டினம் துறைமுகத்திற்கு அருகிலுள்ள கிழக்கு இந்தியப் பெருங்கடல் கடற்கரையை மையமாக கொண்டு 2026 பிப்ரவரி 18 முதல் 26 வரை நடைபெற்ற MILAN - 26 பலதரப்பு கடற்படைப் பயிற்சி மற்றும் சர்வதேச போர்க்கப்பல்சள் கண்காணிப்பில் இலங்கை கடற்படையைப் பிரதிநிதித்துவப்படுத்திய இலங்கை கடற்படைக் கப்பல்களான சாகர மற்றும் நந்திமித்திர ஆகிய கப்பல்கள், பயிற்சி வெற்றிகரமாக முடிவடைந்த பின்னர், 2026 பிப்ரவரி 27 ஆம் திகதி இலங்கையை வந்தடைந்ததுடன் இலங்கை கடற்படையினர் குறித்த இரண்டு கப்பல்களையும் கடற்படை மரபுப்படி கொழும்பு துறைமுகத்தில் வரவேற்றனர்.

03 Mar 2026

கச்சத்தீவு புனித அந்தோனியாரின் வருடாந்திர திருவிழா வெற்றிகரமாக நிறைவடைந்த நிலையில், கடற்படையின் பங்களிப்பு பாராட்டப்பட்டது

கச்சத்தீவு வரலாற்று சிறப்புமிக்க புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழா, பெரும் எண்ணிக்கையிலான இலங்கை மற்றும் இந்திய பக்தர்களின் பங்கேற்புடன் 2026 பெப்ரவரி மாதம் 27 மற்றும் 28 ஆகிய இரு தினங்களில் கோலாகலமாக நடைபெற்றது.

03 Mar 2026

இந்திய கடற்படைக் கப்பலான ‘INS TARANGINI’ உத்தியோகபூர்வ விஜயத்திற்காக தீவை வந்தடைந்தது

இந்திய கடற்படைக் கப்பலான ‘INS TARANGINI’ 2026 பிப்ரவரி 27 உத்தியோகபூர்வ விஜயத்திற்காக தீவை வந்தடைந்ததுடன், மேலும் இலங்கை கடற்படை குறித்த கப்பலை கடற்படை மரபுகளுக்கு இணங்க திருகோணமலை துறைமுகத்தில் வரவேற்றனர்.

27 Feb 2026

கடற்படையால் நிறுவப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையம் பொதுமக்களுக்கு கையளிக்கப்பட்டது

கடற்படையின் சமூகப் பணித் திட்டத்தின் கீழ், குருநாகலை மாவட்டத்தின் வாரியபொல பிரதேச செயலகப் பிரிவின் பயவ கிராமத்திலும், அனுராதபுரம் மாவட்டத்தின் கஹடகஸ்திகிலிய பிரதேச செயலகப் பிரிவின் கோனுமெருவெவ கிராமத்திலும் நிறுவப்பட்ட இரண்டு (02) நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் 2026 பிப்ரவரி 24 மற்றும் 25 ஆகிய திகதிகளில் திறந்து வைக்கப்பட்டது.

27 Feb 2026

இலங்கை கடற்படையில் புதிதாக சேர்க்கப்பட்ட ஆழ்கடல் கண்காணிப்புக் கப்பலான ‘P628’, அமெரிக்காவின் ‘பால்டிமோர்’ இலிருந்து கொழும்பை நோக்கி புறப்பட்டது

இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில், 2025 டிசம்பரில் அமெரிக்க கடலோர காவல்படை திணைக்களத்தினால் இலங்கை கடற்படைக்கு உத்தியோகப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்ட ஆழ்கடல் கண்காணிப்புக் கப்பலான P 628, இலங்கை கடற்படையின் செயல்பாட்டுத் தேவைகளுக்கு ஏற்ப நவீனமயமாக்கப்பட்ட பின்னர், 2026 பிப்ரவரி 20, அன்று அமெரிக்காவின் மேரிலாந்தின் பால்டிமோரில் உள்ள அமெரிக்க கடலோர காவல்படை கப்பல் கட்டும் தளத்திலிருந்து கொழும்புக்கு தனது பயணத்தைத் தொடங்கியது.

23 Feb 2026

சர்வதேச போர்க்கப்பல் கண்காணிப்பில் கடற்படைத் தளபதி பங்கேற்றார்

இந்திய கடற்படையால் ஏற்பாடு செய்யப்பட்ட பலதரப்பு கடற்படைப் பயிற்சியான MILAN - 26 மற்றும் சர்வதேச கடற்படை கப்பல்கள் கண்காணிப்பு -2026 ஆகியன பிப்ரவரி 18 முதல் 26 வரை இந்தியாவின் விசாகப்பட்டினம் துறைமுகம் மற்றும் வங்காள விரிகுடாவின் கிழக்கு இந்திய கடற்கரையை மையமாகக் கொண்டு நடைபெறும். 2026 பிப்ரவரி 18, அன்று கிழக்கு இந்தியப் பெருங்கடலில் நடைபெற்ற இந்த பலதரப்பு கடற்படைப் பயிற்சியின் ஒரு முக்கிய அங்கமான சர்வதேச கடற்படை கப்பல்கள் கண்காணிப்பில் இலங்கை கடற்படையைப் பிரதிநிதித்துவப்படுத்தி, இலங்கை கடற்படைக் கப்பல்களான சாகர மற்றும் நந்திமித்திர ஆகியவை பங்கேற்றன. இந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் Dinesh K Tripathi யின் அழைப்பின் பேரில் இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொட பங்கேற்றதுடன், பிராந்திய மற்றும் உலகளாவிய நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் போர்க்கப்பல்களை இந்திய கௌரவ ஜனாதிபதி கண்காணித்தார்.

22 Feb 2026

அமெரிக்க பசிபிக் கடற்படையின் தளபதி, கடற்படைத் தளபதியை உத்தியோகபூர்வ சந்திப்புக்காக சந்தித்தார்

இலங்கைக்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்திய்காக 2026 பிப்ரவரி 19 ஆம் திகதி இலங்கை வந்தடைந்த அமெரிக்க பசிபிக் கடற்படையின் தளபதி அட்மிரல் Stephen T. Koehler, இன்று (2026 பிப்ரவரி 20) கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொடவை உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக சந்தித்தார்.

21 Feb 2026

"சமனொல சிறி - பசுமை யாத்திரை” தேசிய திட்டத்திற்கு கடற்படையின் சமூக சேவை பங்களிப்பு

“க்லீன் ஶ்ரீ லங்கா” செயலகம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்துடன் இணைந்து செயல்படுத்தப்பட்ட "சமனொல சிறி - பசுமை யாத்திரை” தேசிய திட்டத்தின் கீழ், நல்லதன்னியாவிலிருந்து சிவனொளிபாத மலை வரையிலான சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் குப்பைகளை அகற்றும் திட்டத்திற்கு ஆதரவை வழங்க கடற்படை 2026 பிப்ரவரி 19 அன்று நடவடிக்கை எடுத்தது.

21 Feb 2026