நிகழ்வு-செய்தி

‘EX - DOSTI – XVII’ முத்தரப்பு கடற்படைப் பயிற்சி வெற்றிகரமாக நிறைவடைந்தது

இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக, இலங்கை கடலோர காவல்படைத் துறை, இந்திய கடலோர காவல்படை மற்றும் மாலைத்தீவு தேசிய பாதுகாப்புப் படையின் பங்கேற்புடன், 2026 ஜனவரி 16 முதல் 19 வரை மாலைத்தீவில் நடைபெற்ற ‘EX – DOSTI - XVII’ முத்தரப்பு கடலோர காவல்படை கடற்படைப் பயிற்சி வெற்றிகரமாக நிறைவடைந்தது.

21 Jan 2026

நேபாளத்தின் பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் அகாடமியைச் சேர்ந்த அதிகாரிகள் குழு கடற்படை தலைமையகத்திற்கு ஆய்வு சுற்றுப்பயணம் மேற்கொண்டனர்

இலங்கையில் படிப்புச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நேபாள பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் அகாடமியின் பணியாளர் பாடநெறியில் பயிலும் மாணவர் அதிகாரிகள் மற்றும் கல்வி ஊழியர்கள் அடங்கிய பிரிகேடியர் ஜெனரல் Purna Bahadur Khatri தலைமையிலான அதிகாரிகள் குழு 2026 ஜனவரி 19 ஆம் திகதி கடற்படை தலைமையகத்திற்கு வருகை தந்தது.

20 Jan 2026

ஹம்பாந்தோட்டை மாவட்ட பொது மருத்துவமனையில் இருதய வடிகுழாய் ஆய்வக கட்டிடத்தை நிர்மாணிப்பதற்கு கடற்படையின் தொழில்நுட்ப பங்களிப்பு

கடற்படையின் மற்றொரு சமூக சேவையாக, கடற்படையின் தொழில்நுட்ப பங்களிப்பு மற்றும் அமெரிக்காவில் வசிக்கும் இலங்கை தம்பதியினரின் நிதி பங்களிப்புடன் நிர்மாணிக்கப்பட்டு வரும் ஹம்பாந்தோட்டை மாவட்ட பொது மருத்துவமனையில் இருதய வடிகுழாய் ஆய்வக கட்டிடத்தை நிர்மாணிப்பதற்கான 2026 ஜனவரி 15 ஆம் திகதி அடிக்கல் நாட்டப்பட்டது.

19 Jan 2026

இலங்கைக்கான ஆஸ்திரேலிய உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் வடக்கு கடற்படை கட்டளைத் தளபதியை சந்தித்தார்

இலங்கையில் உள்ள ஆஸ்திரேலிய உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் Colonel Amanda Johnston, வடக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் புத்திக லியனகமகேவை வடக்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில் 2026 ஜனவரி 14 அன்று உத்தியோகப்பூர்வ சந்திப்பிற்காக சந்தித்தார்.

17 Jan 2026

இலங்கை கடற்படை இந்திய கடற்படையிடமிருந்து ஒரு ரிப் படகைப் பெற்றது

இலங்கை மற்றும் இந்திய கடற்படைகளுக்கு இடையிலான கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில், இந்திய கடற்படையால் இலங்கை கடற்படைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட ரிப் படகு 2026 ஜனவரி 15 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தில் உள்ள மேற்கு கடற்படை கட்டளை தலைமையகத்தில் இலங்கை கடற்படையிடம் உத்தியோகப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டது.

17 Jan 2026

இலங்கை மற்றும் இந்திய கடற்படைகளுக்கு இடையிலான 13வது பணியாளர் பேச்சுவார்த்தை கொழும்பில் வெற்றிகரமாக நிறைவடைந்தது

இலங்கை கடற்படைக்கும் இந்திய கடற்படைக்கும் இடையிலான பதின்மூன்றாவது (13வது) பணியாளர்கள் பேச்சுவார்த்தை (13th Navy to Navy Staff Talks – Indin Navy and Sri Lanka Navy) இது 2026 ஜனவரி 14 ஆம் திகதி கொழும்பில் உள்ள பிரதீபாகர் உணவகத்தில் வெற்றிகரமாக நடைபெற்றதுடன், அதே நேரத்தில், இந்திய கடற்படைத் தலைமைத் தளபதி, srinivas maddula (Assistant Chief of Naval Staff – Foreign Cooperation) ஜனவரி 13 அன்று கடற்படைத் தலைமையகத்தில் ஒரு உத்தியோகப்பூர்வ சந்திப்பிற்காக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொடவை சந்தித்தார்.

16 Jan 2026

கடற்படையால் நிறுவப்பட்ட 1147 வது மீள் நீர் சுத்திகரிப்பு நிலையம் இப்போது பதுளை, ரிதீமாலியத்தையில் பொதுமக்களுக்காக கையளிக்கப்பட்டது

கடற்படையின் சமூக சேவை திட்டத்தின் கீழ், பதுளை மாவட்டத்தின் ரிதீமாலியத்தை பிரதேச செயலகப் பிரிவில் உள்ள கோலேயாய சமூக மண்டப வளாகத்தில் நிறுவப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையம் 2026 ஜனவரி 13 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது.

16 Jan 2026

DOSTI XVII – 2026 கடற்படைப் பயிற்சியில் பங்கேற்க தீவிலிருந்து சுரனிமில கப்பல் புறப்பட்டது

இலங்கை கடற்படையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கை கடற்படைக் கப்பல் சுரனிமில, மாலைதீவு தேசிய பாதுகாப்புப் படையால் 17வது முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட DOSTI XVII – 2026 கடற்படைப் பயிற்சியில் பங்கேற்க இன்று (2026 ஜனவரி 14) கொழும்பு துறைமுகத்திலிருந்து மாலைத்தீவின் தலைநகரான மாலேவுக்குப் புறப்பட்டது.

16 Jan 2026

அனர்த்த மீட்பு சவால்களுக்கு மத்தியில் கடற்படையின் ‘Ratama Ekata’ நடவடிக்கைகளைப் பாதுகாப்பு பிரதி அமைச்சர் பாராட்டினார்

பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) நேற்று (ஜனவரி 13) அக்குரேகொடையில் அமைந்துள்ள இலங்கை கடற்படை தலைமையகத்தின் கடற்படை செயல்பாட்டு அறைக்கு ஆய்வு விஜயம் மேற்கொண்டார். இதன் போது, “Ratama Ekata” திட்டத்தின் தேசிய முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தியதுடன், சமீபத்திய தேசிய அவசரகால இயற்கை அனர்த்த மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் முழுமையாக ஈடுபட்டு இருந்த போதிலும், அந்தத் திட்டத்தை தொடர்ந்து மற்றும் திறம்பட செயல்படுத்தியமைக்காக இலங்கை கடற்படையைப் பாராட்டினார்.

15 Jan 2026

அம்பன் கங்கை வழியாக பொதுமக்களுக்கு போக்குவரத்து வசதிகளை வழங்கும் கடற்படையின் செயல்பாட்டை கடற்படைத் தளபதி கண்காணித்தார்

சீரற்ற வானிலை காரணமாக இடிந்து விழுந்த பாலத்தை சீர்ச்செய்யும் வரை, பாடசாலை மாணவர்கள் உட்பட அப்பகுதி மக்களுக்கு அம்பன் கங்கை வழியாக போக்குவரத்து வசதிகளை வழங்குவதற்காக, 2025 டிசம்பர் 24, அன்று கடற்படையால் ஒரு சிறப்பு படகு சேவை தொடங்கப்பட்டதுடன், இந்த நடவடிக்கையை கடற்படைத் தளபதி 2026 ஜனவரி 10 அன்று கண்காணித்து, இவ் செயல்பாட்டை மிகவும் திறம்பட மேற்கொள்ள தேவையான அறிவுறுத்தல்களை வழங்கினார்.

12 Jan 2026