நிகழ்வு-செய்தி
கடற்படை நடவடிக்கைகளுக்காகத் தகவல் தொடர்புத் திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது
இலங்கை கடற்படை அதிகாரிகளின் தகவல் தொடர்புத் திறன்களை ஒரு புதிய நிலைக்கு உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டு, வெளி வள நபர்களின் பங்கேற்புடன் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு சிறப்புப் பயிற்சிப் பாடநெறி, தெற்கு கடற்படை கட்டளையகத்தின் தளபதி, ரியர் அட்மிரல் தம்மிக விஜேவர்தன அவர்களின் அனுசரணையில் 2026 மே 02 அன்று ஒரு சிறப்புப் பயிற்சிப் பட்டறை வெற்றிகரமாக நடைபெற்றது.
07 May 2026
சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட பீடி இலைகளுடன் புத்தளத்தில் இரண்டு சந்தேக நபர்கள் கைது
2026 மே 05 ஆம் திகதி புத்தளத்தின் பெரியபாடு பகுதியில் இலங்கை கடற்படை நடத்திய ஒரு சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டு அங்கிருந்து கொண்டுச் செல்வதற்காக தயார் செய்யப்பட்டிருந்த சுமார் அறுநூற்று பதினெட்டு (618) கிலோகிராம் பீடி இலைகளை ஏற்றிச் சென்ற ஒரு (01) கெப் வண்டியுடன் இரண்டு (02) சந்தேக நபர்களையும் கடற்படையினர் கைப்பற்றினர்.
06 May 2026
தீவிற்கு வந்தடைந்த ‘INS SINDHUKESARI’ நீர்மூழ்கிக் கப்பல், தனது செயல்பாட்டுத் தேவைகளை நிறைவேற்றிய பின்னர் தீவிலிருந்து புறப்படுகிறது.
இந்திய கடற்படையின் ‘INS SINDHUKESARI’ நீர்மூழ்கிக் கப்பல், செயல்பாட்டுத் தேவைகளை நிறைவேற்றுவதற்காக 2026 மே 04 ஆம் திகதி தீவிற்கு வந்தடைந்ததுடன். அக்கப்பல் இன்று (2026 மே 06 ஆம் திகதி) தீவிலிருந்து புறப்பட்டுச் சென்றது. இலங்கை கடற்படையினர், கடற்படை மரபுகளின்படி கொழும்பு துறைமுகத்தில் ‘INS SINDHUKESARI’ நீர்மூழ்கிக் கப்பலுக்கு பிரியாவிடை அளித்தனர்.
06 May 2026
சமச்சீரற்ற போர் பயிற்சி வகுப்பு 2026 - திருகோணமலை, சிறப்புப் படகுப் படைப்பிரிவுத் தலைமையகத்தில் ஆரம்பமானது
சமச்சீரற்ற போர்முறைப் பயிற்சி-2026 (ASYMMETRIC WARFARE COURSE-2026) 2026 மே 4 ஆம் திகதி திருகோணமலையில் உள்ள சிறப்புப் படகுப் படைப்பிரிவுத் தலைமையகத்தில் ஆரம்பமானது. சிறப்புப் படகுப் படைப்பிரிவுத் தலைமையகத்தின் கட்டளை அதிகாரியான கமாண்டர் லக்மல் வீரக்கொடி அவர்களின் பங்கேற்புடன் நடைபெற்றது.
05 May 2026
இலங்கை கடற்படைக் கப்பலான எலார, தனது செயல்பாட்டு மற்றும் தகவல் தொடர்பு வசதிகளை விரிவுபடுத்தி வருகிறது
இலங்கை கடற்படைக் கப்பல் எலரவின் செயல்பாட்டு மற்றும் தகவல் தொடர்புப் பணிகளுக்கு வசதியளிக்கும் வகையில், செயல்பாட்டு அறை, பிரதான சமிக்ஞை அலுவலகம், தொலைபேசி மற்றும் தரவுப் பரிமாற்ற மையம் ஆகியவற்றை உள்ளடக்கி கட்டப்பட்ட புதிய கட்டிடம், 2026 மே 02 அன்று கடற்படைத் தளபதி, வைஸ் அட்மிரல் கான்சன பானகொட தலைமையில், வடக்கு கடற்படைக் கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் புத்திக லியனகமகேவின் பங்கேற்புடன், 2026 மே 02 அன்று திறந்து வைக்கப்பட்டது.
05 May 2026
கடற்படைத் தளபதி வடக்கு கடற்படை கட்டளைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டார்
கடற்படைத் தளபதி, வைஸ் அட்மிரல் கான்சன பானகொட, 2026 மே 01 முதல் 03 வரை வடக்கு கடற்படைக் கட்டளையகத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்தார். அங்கு அவர், கட்டளையகத்தின் செயல்பாட்டு, நிர்வாக, அபிவிருத்தி மற்றும் நலத்திட்டங்களைப் பார்வையிட்டதோடு, கடற்படையின் செயல்பாட்டு நோக்கங்கள் குறித்து கட்டளையகத்தின் அதிகாரிகள் மற்றும் கடற்படையினருக்கு விளக்கமளித்தார்.
05 May 2026
இந்திய-இலங்கை கடற்படைகளின் கூட்டு சுழியோடி பயிற்சி ‘IN-SLN DIVEX 2026’ வெற்றிகரமாக நிறைவடைந்தது
இந்திய கடற்படையின் ஒரு நீர்மூழ்கி ஆதரவுக் கப்பலான ‘INS NIREEKSHAK’ 2026 ஏப்ரல் 21 அன்று தீவிற்கு வந்தடைந்தது, மேலும் இலங்கை கடற்படை சுழியோடிகளும் கப்பலைச் சேர்ந்த மாலுமிகளும், 2026 ஏப்ரல் 21 முதல் 28 வரை கொழும்பு கடற்பகுதியில் சுழியோடி பயிற்சியை வெற்றிகரமாக நடத்தினர்.
04 May 2026
இந்திய கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பலான ‘INS SINDHUKESARI’ செயல்பாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக கொழும்பு துறைமுகத்திற்கு வந்தடைந்தது
இந்திய கடற்படையின் ‘INS SINDHUKESARI’ நீர்மூழ்கிக் கப்பல், செயல்பாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக 2026 மே 03 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்திற்கு வந்தடைந்தது. இதனைத் தொடர்ந்து, இலங்கை கடற்படையானது கடற்படை மரபுகளின்படி அந்த நீர்மூழ்கிக் கப்பலை வரவேற்றது.
04 May 2026
இலங்கைக்கான புதிய பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் கடற்படைத் தளபதியை உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக சந்தித்தார்
இலங்கைக்கான பாகிஸ்தான் இஸ்லாமியக் குடியரசின் புதிய உயர்ஸ்தானிகரான, ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் Nayyar Naseer, இன்று (2026 ஏப்ரல் 29) கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி, வைஸ் அட்மிரல் கான்சன பானகொடவை உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக சந்தித்தார்.
29 Apr 2026
பயிற்சித் திட்டத்திற்காக தீவுக்கு வந்தடைந்த இந்திய கடற்படை கப்பலான ‘INS NIREEKSHAK’ தீவிலிருந்து புறப்படுகிறது
இந்திய கடற்படையின் ‘INS NIREEKSHAK’ என்ற கப்பல், பயிற்சித் திட்டத்திற்காக 2026 ஏப்ரல் 21 அன்று தீவிற்கு வந்தடைந்து, பயிற்சியை நிறைவுசெய்த பின்னர் 2026 ஏப்ரல் 28 அன்று தீவிலிருந்து புறப்பட்டது. இலங்கை கடற்படையினர், கடற்படை மரபுகளுக்கு இணங்க, கொழும்பு துறைமுகத்தில் ‘INS NIREEKSHAK’ கப்பலுக்கு பிரியாவிடை அளித்தனர்.
29 Apr 2026


