நிகழ்வு-செய்தி
திருகோணமலை கடற்படை கப்பல்துறயை பார்வையிட மற்றும் சுற்றுலாவிற்காக visitdockyard.navy.lk என்ற இணையத்தளம் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது

திருகோணமலை கடற்படை கப்பல்துறைக்கு விஜயம் செய்வதற்கு விண்ணப்பிக்கும் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களின் வசதிக்காக கடற்படையால் உருவாக்கப்பட்ட visitdockyard.navy.lk என்ற புதிய இணையத்தளத்தின் உத்தியோகபூர்வ அறிமுகம் 2025 ஆம் ஆண்டு ஜனவரி 08 ஆம் திகதி பிரதி கடற்படைத் தளபதி மற்றும் கிழக்கு கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ தலைமையில், பிரதான நுழைவாயிலில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
09 Jan 2025
இந்தோனேசிய கடற்படைக் கப்பல் ‘KRI DIPONEGORO - 365’ தனது உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு இலங்கையை விட்டுச் சென்றது

2025 பெப்ரவரி 04 அன்று விநியோக மற்றும் சேவைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இலங்கைக்கு விஜயம் செய்த இந்தோனேசிய கடற்படையின் ‘KRI DIPONEGORO - 365’ போர்க்கப்பலானது, அதன் விநியோகம் மற்றும் சேவை தேவைகளை பூர்த்தி செய்ததன் பின்னர் இன்று (2025 பெப்ரவரி 05) தீவை விட்டு வெளியேறுகிறது. மேலும் இலங்கை கடற்படையினர் கொழும்பு துறைமுகத்தில் கடற்படையின் பாரம்பரிய முறையில் கப்பலுக்கு பிரியாவிடை அளித்தனர்.
05 Jan 2025
அரச இலங்கை கடற்படையில் கடமையாற்றி மறைந்த அருளானந்தம் மரியம்பிள்ளை அவர்களின் பூதவுடல் யாழ்ப்பாணம் கைட்ஸ் தீவில் பூரண கடற்படை மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது

அரச இலங்கை கடற்படையில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற சிரேஷ்ட மாலுமியான அருளானந்தம் மரியம்பிள்ளை 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி காலமானார், மேலும் 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 02 ஆம் திகதி யாழ்ப்பாணம் கைட்ஸ் தீவில் கடற்படையின் மரியாதையுடன் அவரது இறுதிக் கிரியைகளை மேற்கொள்ள கடற்படையினர் ஏற்பாடு செய்திருந்தனர்.
03 Jan 2025
கடற்படை தளபதி பிரதி பாதுகாப்பு அமைச்சரை சந்தித்தார்

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பானகொட அவர்கள் இன்று (2025 ஜனவரி 02) பாதுகாப்பு பிரதி அமைச்சரின் அலுவலகத்தில், கௌரவ பிரதி பாதுகாப்பு அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) அவர்களைச் சந்தித்தார்.
02 Jan 2025
இலங்கை கடற்படை "க்ளீன் ஶ்ரீ லங்கா" குடிமக்கள் உறுதிமொழி வழங்கி 2025 ஆண்டின் கடமைகளை ஆரம்பித்தது

இன்று காலை (2025 ஜனவரி 01), கடற்படைத் தலைமையகம் மற்றும் அனைத்து கடற்படை நிறுவனங்களிலும் கப்பல்களிலும் தேசியக் கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் பாடிதை தொடர்ந்து, இலங்கை கடற்படை "க்ளீன் ஶ்ரீ லங்கா" தேசிய நிகழ்ச்சியில் குடிமக்கள் உறுதிமொழியை நேரலையில் வழங்கினர். அதன் பின்னர் புதிய ஆண்டில், வேலைகள் ஆரம்பிக்கப்பட்டது.
01 Jan 2025
காலி முகத்திடளில் தேசிய கொடியை ஏற்றுதல் மற்றும் ஜனாதிபதி மாளிகையின் விசேட சம்பிரதாய மரியாதை தொடர்பான கடமைகளை கடற்படையினர் பொறுப்பேற்றனர்

காலி முகத்திடளில் தேசியக் கொடி ஏற்றுதல் மற்றும் கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் விசேட சம்பிரதாய மரியாதை தொடர்பான கடமைகள் 2024 டிசம்பர் 31 ஆம் திகதி மற்றும் இன்று (01 ஜனவரி 2025) ஆகிய இரு தினங்களில் இலங்கை இராணுவத்திடம் இருந்து கடற்படையினரிற்கு காலி முகத்திடல் மற்றும் கொழும்பில் உள்ள கடற்படை தலைமையகத்தில் ஒப்படைக்கப்பட்டது. .
01 Jan 2025
கடற்படையின் சமூகப் பணித் திட்டத்தின் மூலம் பொலன்னறுவை மாவட்டத்தில் நிறுவப்பட்டுள்ள 02 நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மக்களிடம் கையளிக்கப்பட்டது

சுகாதார அமைச்சின் முயற்சியால், அவுட்ரேவ் ப்ராஜெக்ட்ஸ் கியாரண்டி லிமிடெட் நிறுவனத்தின் நிதி ஒதுக்கீட்டில், கடற்படை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவின், சமூகப் பணி செயல்திட்டத்தில் தயாரிக்கப்பட்ட 1074 மற்றும் 1075 வது இரண்டு (02), (RO) Plants நீர் சுத்திகரிப்பு இயந்திரங்களை நிறுவும் சிறப்புத் திட்டத்தின் கீழ் பொலன்னறுவை மாவட்டத்தின் இரண்டு (02) இடங்களான அலஹெர பிரதேச செயலாளர் பிரிவில், யாய 06, மேல் பகுதி, பெதுமெல கிராமத்திலும், கல்முல்ல, மல்வவாய, பகமூனையிலும் 2024 டிசம்பர் 31 அன்று நிறுவப்பட்டு மக்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
31 Dec 2024
புதிய கடற்படைத் தளபதி பாதுகாப்பு அமைச்சின் செயலாளரை சந்தித்தார்

இலங்கை கடற்படையின் 26வது கடற்படைத் தளபதியாக நியமிக்கப்பட்ட வைஸ் அட்மிரல் காஞ்சன பானகொட இன்று (2024 டிசம்பர் 31) பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொண்டாவை (ஓய்வு பெற்ற) பாதுகாப்பு அமைச்சில் சந்தித்தார்.
31 Dec 2024
அட்மிரல் பிரியந்த பெரேரா கடற்படை சேவையிலிருந்து ஓய்வு பெறுகிறார்

இலங்கை கடற்படையின் 25 ஆவது கடற்படைத் தளபதியாக கடமையாற்றிய அட்மிரல் பிரியந்த பெரேரா, தனது 37 வருட சேவையை நிறைவு செய்து இன்றுடன் (2024 31 டிசம்பர்) ஓய்வு பெற்றார்.
31 Dec 2024
இலங்கை கடற்படையின் 26வது கடற்படைத் தளபதியாக வைஸ் அட்மிரல் காஞ்சன பானகொட

இலங்கை கடற்படையின் 26வது கடற்படைத் தளபதியாக ரியர் அட்மிரல் காஞ்சன பானகொடவை இன்று (2024 டிசம்பர் 31) இராணுவத் தளபதியும், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் தலைவருமான திரு. அனுரகுமார திசாநாயக அவர்கள் நியமித்த்தன் பின்னர், அவர் வைஸ் அட்மிரல் பதவிக்கு உயர்த்தப்பட்டார். அதன்படி, இன்று (2024 டிசம்பர் 31) முற்பகல், கடற்படைத் தலைமையகத்தின் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் பிரியந்த பெரேரா அவர்கள் கடற்படைத் தளபதியின் வாளை கடற்படைத் தளபதிக்கு வழங்கி, கடற்படைத் தலைமையகத்தில் புதிய கடற்படைத் தளபதியிடம் கடமைகளை ஒப்படைத்த்துடன், கடற்படைத் தலைமையகத்தில் கடற்படையின் பாரம்பரிய முறைப்படி நடைப்பெற்ற விசேட நிகழ்வின் மூலம் புதிய கடற்படைத் தளபதிக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
31 Dec 2024