நிகழ்வு-செய்தி

2024 ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நோக்குநிலை பாடநெறிக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு வெலிசரயில் இடம்பெற்றது

இலங்கை கடற்படையின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தித் துறைக்கான மாலுமிகளுக்கு பயிற்சி மற்றும் ஊக்கம் அளிக்கும் நோக்கில், ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நோக்குநிலை பாடநெறி 2024 ஒக்டோபர் மாதம் 21 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை இடம்பெற்றதுடன், அதன் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு வெலிசரவில் உள்ள இலங்கை கடற்படை கப்பல் தக்ஷிலா நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பிரிவின் மாநாட்டு மண்டபத்தில் 2024 ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி நடைபெற்றது.

01 Nov 2024

கொமடோர் ஹர்ஷ டி சில்வா தென்கிழக்கு கடற்படை கட்டளையின் பதில் கட்டளைத் தளபதியாக பொறுப்பேற்றார்

தென்கிழக்கு கடற்படை கட்டளையின் பதில் தளபதியாக கொமடோர் ஹர்ஷ டி சில்வா இன்று (2024 ஒக்டோபர் 30) தென்கிழக்கு கடற்படை கட்டளை தலைமையகத்தில், அவர் குறித்த கடற்படை கட்டளையின் பதில் தளபதியாக கடமைகளை பொறுப்பேற்றார்.

30 Oct 2024

ரியர் அட்மிரல் புத்திக லியனகமகே கடற்படை நடவடிக்கைகளுக்கான பணிப்பாளர் நாயகம் செயல்பாடுகளாக கடமைகளைப் பொறுப்பேற்றார்

பணிப்பாளர் நாயகம் பயிற்சியாக கடமையாற்றும், ரியர் அட்மிரல் புத்திக லியனகமமே, கடற்படை பணிப்பாளர் நாயகம் செயல்பாடுகளாக இன்று (2024 ஒக்டோபர் 30) கடற்படை தலைமையகத்தின் பணிப்பாளர் நாயகம் செயல்பாடுகள் அலுவலகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றார்.

30 Oct 2024

கடற்படைத் தளபதி கடற்படை கப்பல்துறை வளாகத்திற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டார்

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா 2024 ஒக்டோபர் 26 மற்றும் 27 ஆம் திகதிகளில் கடற்படை கப்பல்துறை வளாகத்திற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு, கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ அவர்களுடன் கட்டளையின் செயற்பாடுகள், அபிவிருத்தி மற்றும் நலன்புரி திட்டங்களை அவதானித்ததுடன், கடற்படை கப்பல்துறை அதிகாரிகள், பயிற்சி அதிகாரிகள் மற்றும் மாலுமிகளுக்கு கடற்படையின் பணிகள் குறித்து விளக்கமளித்தார்.

28 Oct 2024

வட மத்திய கடற்படை கட்டளையின் மாலுமிகளுக்கான நலன்புரி வசதிகள் விரிவுபடுத்தப்பட்டது

வடமத்திய கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல்களான கஜபா மற்றும் புஸ்ஸதேவ ஆகிய நிறுவனங்களின் நலன்புரி வசதிகளை விரிவுபடுத்தும் வகையில், புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இளநிலை கடற்படை மாலுமிகளுக்கான விடுதிகள் வட மத்திய கடற்படைக் கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் ஜகத் குமார தலைமையில் 2024 ஒக்டோபர் மாதம் 18 மற்றும் 19 அன்று திறந்து வைக்கப்பட்டது.

26 Oct 2024

வடக்கு கடற்படை கட்டளையின் மாலுமிகளுக்கான நலன்புரி வசதிகள் விரிவுபடுத்தப்பட்டது

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் அறிவுறுத்தலின் பேரில்,வடக்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் வேலுசுமண நிறுவனத்தின் இளநிலை கடற்படை மாலுமிகளுக்கான நலன்புரி வசதிகளை விரிவுபடுத்தும் நோக்கில், பள்ளிகுடா கரையோர கண்காணிப்பு மையத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இளநிலை கடற்படை மாலுமிகளுக்கான விடுதிகள் வடக்கு கடற்படைக் கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் ரோஹித அபேசிங்கவின் தலைமையில் 2024 ஒக்டோபர் மாதம் 23 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது.

25 Oct 2024

கடற்படைத் தளபதி கெளரவ பிரதமர் அவர்களின் முதல் உத்தியோகபூர்வ சந்திப்புக்காக விஜயம் செய்தார்

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா அவர்கள் (2024 ஒக்டோபர் 24) இன்று இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் கௌரவப் பிரதமர் திருமதி. கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களின் முதலாவது உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக பிரதமரின் அலுவலகத்திற்கு விஜயம் செய்தார்.

24 Oct 2024

தொண்டர் கடற்படைத் தலைமையக வளாகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள கடற்படை அருங்காட்சியகம் கடற்படைத் தளபதி தலைமையில் திறந்து வைக்கப்பட்டது

வெலிசறை, இலங்கை தொண்டர் கடற்படைத் தலைமையக வளாகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கடற்படை அருங்காட்சியகம் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா தலைமையில், தொண்டர் கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் லஷாந்த் என் ஹேவாவிதாரண மற்றும் தாய்நாட்டிற்காக வீரமரணம் அடைந்த கமாண்டர் (தொண்டர்) செட்ரிக் மார்டின்ஸ்டயின் போர் வீரரின் மனைவி, திருமதி. தில்ருக்ஷி மார்ட்டின்ஸ்டயினின் பங்கேற்புடன் நடைபெற்றது.

24 Oct 2024

இலங்கை தொண்டர் கடற்படையின் 2024 வருடாந்த பயிற்சி முகாமின் பிரிவு ஆய்வுசெய்தல் கடற்படைத் தளபதியின் தலைமையில்

இலங்கை தொண்டர் கடற்படையின் 2024 வருடாந்த பயிற்சி முகாமின் பிரிவு சோதனை செய்தல் மற்றும் மரியாதை அணிவகுப்பு 2024 ஒக்டோபர் 24 ஆம் திகதி வெலிசர இலங்கை தொண்டர் கடற்படைத் தலைமையகத்தில் வெற்றிகரமாக நடைபெற்றதுடன் தொண்டர் கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் லஷாந்த் என் ஹேவாவிதாரண மற்றும் தொண்டர் கடற்படையின் கட்டளை அதிகாரி கொமடோர் சுசாந்த தர்மசிறியின் அழைப்பின் பேரில், இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா கலந்து கொண்டார்.

24 Oct 2024

தேசிய பாதுகாப்புப் பாடநெறியின் அதிகாரிகளுக்காக கடற்படைத் தளபதியினால் இரவு விருந்து வழங்கப்பட்டது

இலங்கை தேசிய பாதுகாப்பு அகாடமியின் தேசிய பாதுகாப்பு பாடநெறியை பயிலும் அதிகாரிகளுக்கு பாரம்பரியமாக கடற்படை தளபதியினால் வழங்கப்படும் இரவு விருந்து, குறித்த நிறுவனத்தின் மூன்றாவது (03) பாடநெறியைச் சேர்ந்த அதிகாரிகளுக்கு வழங்கும் நிகழ்வு 2024 ஒக்டோபர் 23 ஆம் திகதி கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா அவர்களின் தலைமையில் மேற்கு கடற்படை கட்டளை அதிகாரியின் இல்லத்தில் நடைபெற்றது. உலகின் தேசிய பாதுகாப்பு அகாடமிகளில் நடத்தப்படும் இராணுவ பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக (Military tradition) இலங்கையில் தேசிய பாதுகாப்பு பாடநெறியில் கல்வி கற்கும் அதிகாரிகள் மற்றும் கல்வி ஊழியர்களுக்கு கடற்படை தளபதியினால் இவ்வாரு இரவு விருந்து வழங்கப்பட்டன. அதன்படி, இந்நிகழ்வில் கலந்துகொண்ட இலங்கை தேசிய பாதுகாப்பு அகாடமியின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் செனரத் யாப்பா மற்றும் அவருடைய மனைவி உட்பட பாடநெறியைச் சேர்ந்த உள்ளூர் மற்றும் வெளிநாட்டு முப்படைகள் மற்றும் காவல்துறையின் சிரேஷ்ட அதிகாரிகள், நிறுவனத்தின் கல்விப் பணியாளர்கள் மற்றும் அவர்களின் மனைவிகளை கடற்படைத் தளபதி மற்றும் கடற்படை சேவா வனிதா பிரிவின் கௌரவத் தலைவி திருமதி மாலா லமாஹேவாவினால் மேற்கு கடற்படை கட்டளை அதிகாரி இல்லத்திற்கு மிகவும் அன்பாக வரவேற்கப்பட்ட பின்னர், பாரம்பரியமாக வழங்கப்படும் இரவு விருந்து வழங்கப்பட்டது.

24 Oct 2024