நிகழ்வு-செய்தி
இந்தியாவில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கடற்படைத் தளபதியை உத்தியோகப்பூர்வ சந்திப்புக்காக சந்தித்தார்

இந்தியாவின் புது தில்லியில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்தில் இலங்கைக்கான பாதுகாப்பு ஆலோசகராகவும் பணியாற்றும் கர்னல் Avihay Zafrany, இன்று (2025 மே 20) கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொடவை உத்தியோகப்பூர்வ சந்திப்பிற்காக சந்தித்தார்.
20 May 2025
பாதுகாப்பு பிரதி அமைச்சர் ராகம 'ரணவிரு செவன'விற்கு விஜயம் செய்தார்

மே 19 ஆம் திகதி நடைபெறும் தேசிய போர் வீரர்கள் தின நிகழ்வுகளுடன் இணைந்து, கௌரவ. பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர (ஓய்வு) அவர்கள், படைகளின் தளபதிகளுடன் சேர்ந்து, ராகமவில் உள்ள 'ரணவிரு செவன 'வில் தங்கி சிகிச்சை பெற்று வரும் போர்வீரர்களின் நலன் தொடர்பில் 2025 மே 19 அன்று ஆய்வு சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார்.
20 May 2025
பத்தரமுல்லையில் உள்ள போர் வீரர்கள் நினைவு தூபி முன்னிலையில் ஜனாதிபதி தலைமையில் தேசிய போர் வீரர்கள் நினைவு நிகழ்வு

2025 ஆம் ஆண்டுக்கான தேசிய போர்வீரர் நினைவு நிகழ்வு, இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியும் ஆயுதப்படைகளின் சேனாதிபதியுமான அதிமேதகு அனுர குமார திசாநாயக்க அவர்களின் தலைமையிலும் பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் போர்வீரர் சேவை ஆணையத்தின் ஒருங்கிணைப்பின் கீழ், பத்தரமுல்ல போர்வீரர் நினைவு தூபி முன்னிலையில் 2025 மே 19 ஆம் திகதி பெருமையுடன் நடைபெற்றது.
20 May 2025
சர்வதேச இராணுவ விளையாட்டு அமைப்பின் 80வது பொதுச் சபை கூட்டம் மற்றும் மாநாடு கொழும்பில் தொடங்கியது

இலங்கை பாதுகாப்பு சேவைகள் விளையாட்டு சபையின் ஏற்பாட்டில், சர்வதேச இராணுவ விளையாட்டு அமைப்பின் 80வது பொதுச் சபை மற்றும் மாநாடு இன்று (2025 மே 19) கொழும்பில் உள்ள கிராண்ட் மைட்லேண்ட் ஹோட்டலில் கௌரவ பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர (ஓய்வு) அவர்களின் தலைமையில் ஆரம்பித்ததுடன் அங்கு வரவேற்ப்பு உரையானது கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொட அவர்களால் நிகழ்த்தப்பட்டது.
20 May 2025
இலங்கை கடற்படையினர் 100 மீட்டர் ஆழத்திற்கு சுழியோடியதன் மூலம் கடற்படையின் சுழியோடி செயல்பாடுகளை விரிவுபடுத்தியுள்ளது

இலங்கை கடற்படையின் சுழியோடி திறன்களை விரிவுபடுத்தும் வகையில், திருகோணமலை கடற்படை தளத்தில் உள்ள எலிபன்ட் தீவுக்கு அருகிலுள்ள ஆழ்கடலில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொடவின் மேற்பார்வையின் கீழ் 09 பேரை கொண்ட கடற்படை சுழியோடி குழுவானது 2025 மே 18 100 மீட்டர் ஆழத்திற்கு சுழியோடி வெற்றிகரமாக திரும்பினர்.
19 May 2025
திருகோணமலை திஸ்ஸ கல்லூரியில் இலங்கை கடற்படை சமூக சுகாதார நிகழ்வொன்றை நடத்தியது

இலங்கை கடற்படையினர், திருகோணமலை சுகாதார மருத்துவ அதிகாரிகளுடன் இணைந்து, தனிப்பட்ட சுகாதாரம், சுகாதாரம், நோய் தடுப்பு மற்றும் அடிப்படை அவசர சிகிச்சை ஆகிய துறைகளில் பாடசாலை மாணவர்களின் அறிவு மற்றும் தயார்நிலையை மேம்படுத்துவது குறித்த சமூக சுகாதார விழிப்புணர்வு திட்டத்தை 2025 மே 14 மற்றும் 15 ஆகிய திகதிகளில் திருகோணமலை திஸ்ஸ கல்லூரியில் வெற்றிகரமாக நடத்தினர்.
18 May 2025
கடற்படையின் சமூகப் பணித் திட்டத்தின் கீழ் அனுராதபுரம் மாவட்டத்தில் நிறுவப்பட்ட 06 மீள் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் பொதுமக்களுக்காக கையளிக்கப்பட்டன

அனுராதபுரம் மாவட்டத்தின் இபலோகம பிரதேச செயலகப் பிரிவில் உள்ள சங்கட்டேவ, தம்பெலஸ்ஸாகம, கோனபதிராவ, ததுசென்புர மற்றும் புளியங்குளம் ஆகிய கிராமங்களில் கடற்படையின் தொழில்நுட்ப மற்றும் கைவினைக் கலை உதவியுடனும் ஜனாதிபதி செயலகத்தின் நிதி உதவியுடனும் நிறுவப்பட்ட மீள் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் 2025 மே 16 ஆம் திகதி பொதுமக்களுக்காக கையளிக்கப்பட்டன.
18 May 2025
ரியர் அட்மிரல் சனத் பிடிகல கடற்படை சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்

ரியர் அட்மிரல் சனத் பிடிகல இலங்கை கடற்படையில் 35 வருட கால சேவையை நிறைவு செய்து இன்று (2025 மே 17) கடற்படை சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்.
17 May 2025
உலக தலசீமியா தினத்தை முன்னிட்டு கடற்படையினால் 400 தலசீமியா உட்செலுத்துதல் அமைப்புகள் சுகாதார அமைச்சகத்திடம் கையளிக்கப்பட்டன

மே 8 ஆம் திகதி உலக தலசீமியா தினத்தை முன்னிட்டு, கடற்படையின் சமூகப் பணித் திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட 400 தலசீமியா உட்செலுத்துதல் அமைப்புகள், 2025 மே 16 கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதியின் தலைமையில், நோயாளிகளுக்கு இலவசமாக விநியோகிப்பதற்காக சுகாதார அமைச்சகத்திற்கு கையளிக்கப்பட்டன.
17 May 2025
சமய மரபுளுக்கு முன்னுரிமை கொடுத்து கடற்படையினர் வெசாக் பண்டிகையை கொண்டாடினர்

2025 மே 12 ஆம் திகதி வெசாக் பண்டிகையை முன்னிட்டு, கடற்படை பௌத்த சங்கத்தின் தலைமையில், இலங்கை கடற்படை, ஒவ்வொரு கடற்படை கட்டளையிலும் சமய நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளனர். நுவரெலியா நகரை மையமாகக் கொண்டு நடைபெறும் அரச வெசாக் விழா, கொழும்பு பௌத்தாலோக வெசாக் வலயம் மற்றும் புத்த ரஷ்மி வெசாக் வலயம் ஆகியவற்றிற்கு கடற்படையினர் பங்குபற்றினர்.
16 May 2025