நிகழ்வு-செய்தி

யாழ்ப்பாணம், பாலைதீவு புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த பெருவிழாவை வெற்றிகரமாக நடத்துவதற்கு கடற்படையினர் ஆதரவளித்தனர்

யாழ்ப்பாணம் பாலைத்தீவு புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த பெருவிழா 2025 மார்ச் மாதம் 21 மற்றும் 22 ஆகிய இரு தினங்களில் மிக விமர்சையாக நடாத்தப்பட்டதுடன், இவ்விழாவை வெற்றிகரமாக நடத்துவதற்குத் தேவையான உட்கட்டமைப்புகளை நிறுவுவதற்கான பணிகள் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்டது.

24 Mar 2025

கூட்டு கடல்சார் படைகளின் 150 வது பணிக்குழுவின் கட்டளை அதிகாரி உத்தியோகப்பூர்வ சந்திப்பிற்காக கடற்படை தளபதியை சந்தித்தார்

கூட்டு கடல்சார் படைகளின் 150 வது பணிக்குழுவின் கட்டளை அதிகாரி, கொமடோ ரோஜர் வோட் (commodore Rodger ward) மற்றும் படையின் அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்று 2025 மார்ச் 22 முதல் 26 வரை இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளதுடன், இதற்கு இணையாக, இந்தக் குழு இன்று (2025 மார்ச் 24) கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொடவை உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக சந்தித்தது.

24 Mar 2025

ஐக்கிய நாடுகளின் போதைப்பொருள் மற்றும் குற்றங்கள் தொடர்பான அலுவலகத்தின் உலகளாவிய கடல்சார் குற்றத் தடுப்புத் திட்டத்தின் கீழ் கடற்படையால் நடத்தப்படும் பாடநெறிக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு திருகோணமலையில் நடைப்பெற்றது

போதைப்பொருள் மற்றும் குற்றங்கள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் அலுவலகத்தின் உலகளாவிய கடல்சார் குற்றத்தடுப்பு நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் இலங்கை கடற்படையால் ஏற்பாடு செய்யப்பட்ட கப்பல்களிற்குள் நுழைதல், தேடல் மற்றும் கைப்பற்றும் உத்திகள் தொடர்பான பிராந்திய ஆலோசனை பாடநெறி மற்றும் பிராந்திய கடல்சார் சட்ட அமலாக்க ஆலோசனைப் பாடநெறி ஆகியவை திருகோணமலை சிறப்புப் படகுகள் படைப்பிரிவில் சிறப்பாக நடைபெற்றதுடன். சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வினை 2025 மார்ச் 20 அன்று திருகோணமலை Sober Island Resort இல் நடத்த கடற்படையால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

24 Mar 2025

36வது கனிஷ்ட கடற்படை பணியாளர் பாடநெறியின் சான்றிதழ் வழங்கும் விழா திருகோணமலையில் நடைப்பெற்றது

திருகோணமலை கடல் மற்றும் கடல்சார் கலைக்கழத்தில் நடைபெற்ற 36 ஆவது கனிஷ்ட கடற்படைப் பணியாளர் பாடநெறி வெற்றிகரமாக நிறைவு பெற்றதுடன் அதன் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொட தலைமையில் மற்றும் கடற்படையின் பிரதிப் பிரதானி மற்றும் கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் சிந்தக குமாரசிங்க ஆகியோரின் பங்குபற்றுதலுடன் 2025 மார்ச் 22 அன்று கடல் மற்றும் கடல்சார் கலைக்கழக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

24 Mar 2025

சிறப்பு படகுகள் படைப் பயிற்சியை வெற்றிகரமாக முடித்த கடற்படை வீரர்களுக்கு கடற்படைத் தளபதியினால் பதக்கங்கள் அணிவிக்கப்பட்டன

இலங்கை சிறப்பு படகுகள் படைப்பிரிவின் 32வது ஆட்சேர்ப்புப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த இரண்டு அதிகாரிகள் (02) மற்றும் முப்பத்தி நான்கு (34) மாலுமிகளுக்கு பதக்கங்கள் அணிவித்தல், அந்த படைப்பிரிவின் கட்டளைத் தளபதி, கமாண்டர் லக்மால் வீரக்கொடியின் அழைப்பின் பேரில், கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொடவின் தலைமையில் மற்றும் கடற்படை சேவா வனிதா பிரிவின் கௌரவ தலைவி திருமதி அனுஷா பனாகொட அவர்களின் பங்கேற்புடன், 2025 மார்ச் 22 அன்று திருகோணமலை, கடற்படைத் தளத்தில் உள்ள சிறப்புக் படகுகள் படைத் தலைமையகத்தில் நடைபெற்றது.

23 Mar 2025

ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படைக்கு சொந்தமான ‘MURASAME’ என்ற கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்றிற்காக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது

ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படைக்கு சொந்தமான ‘MURASAME’ என்ற கப்பல் வழங்கல் மற்றும் சேவை தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இன்று (2025 மார்ச் 22) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததுடன், இலங்கை கடற்படையினர் கப்பலை கடற்படை மரபுகளுக்கு அமைவாக வரவேற்றனர்.

22 Mar 2025

அமெரிக்க இந்தோ-பசிபிக் கட்டளைப்பீடத்தின் கட்டளைத் தளபதி உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக கடற்படை தளபதியை சந்தித்தார்

அமெரிக்க இந்தோ-பசிபிக் கட்டளைப்பீடத்தின் (INDOPACOM) கட்டளைத்தளபதி அட்மிரல் சாமுவேல் ஜே.பப்பாரோ உள்ளிட்ட தூதுவர்கள் உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக இன்று (2025 மார்ச் 21) கடற்படைத் தலைமையகத்தில் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொடவை சந்தித்தனர்.

21 Mar 2025

பாடசாலை வளாகத்தை "மகிழ்ச்சியான பாடசாலையாக" மாற்றுவதற்கு கடற்படையின் குடிமக்களை வலுவூட்டல் மற்றும் சமூக பணி பங்களிப்பு

"மகிழ்ச்சி நிறைந்த பாடசாலை" என்ற என்ற கருப்பொருளின் அடிப்படையில் தேசிய விழுமியங்கள் மற்றும் சமூக விழுமியங்களை வளர்க்கும் சூழல் நட்பு கல்விச் சூழலை வளர்ப்பதற்கான தேசிய திட்டத்தின் கீழ், கடவத்தை பௌத்த ஆரம்பப் பள்ளி, கடவத்தை ஸ்ரீ பிரேமானந்த மகா வித்யாலயம், இம்புல்கொட பரகந்தெனிய மாயாதுன்ன ஆரம்பப் பள்ளி மற்றும் வெலிவேரிய எம்பரலுவ மிஹிது கனிஷ்ட வித்யாலயம் ஆகிய கவர்ச்சிகரமான வளாகங்களுக்கு கடற்படை சமூக பணியின் பங்களிப்பு 2025 மார்ச் 18 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டது.

21 Mar 2025

முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் மேற்கு கனிஷ்ட உயர்தர வித்தியாலத்தை "மகிழ்ச்சி நிறைந்த பாடசாலையாக" மாற்றுவதற்கு கடற்படையின் குடிமக்களை வலுவூட்டல் மற்றும் சமூக பணி பங்களிப்பு

"மகிழ்ச்சி நிறைந்த பாடசாலை" என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்ட, சமூக மதிப்புகள் உட்பட சுற்றுச்சூழலுக்கு ஏற்ற கல்விச் சூழலை வளர்ப்பதற்கான தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், கடற்படையின் சமூக பராமரிப்பு பங்களிப்புடன் முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் மேற்கு கனிஷ்ட உயர்தர வித்தியால வளாகத்தை சுத்தம் செய்தல் மற்றும் புனரமைக்கும் பணிகள் 2025 மார்ச் 15 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டது.

21 Mar 2025

சபுகஸ்கந்த பாதுகாப்பு சேவை கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியின் 19வது பாடநெறியின் மாணவச் சிப்பாய் அதிகாரிகள் மேற்கு கடற்படை கட்டளைக்கு ஆய்வு விஜயத்தை மேற்கொண்டனர்

சபுகஸ்கந்த பாதுகாப்பு சேவை கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஷாந்த ஹெவகே தலைமையில் 19 ஆவது பணியாளர் பாடநெறியைச் சேர்ந்த 190 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மாணவச் சிப்பாய் அதிகாரிகளைக் கொண்ட குழுவொன்று மேற்கு கடற்படை கட்டளையின் ஆய்வு விஜயத்தில் 2025 மார்ச் 17 அன்று ஈடப்பட்டதுடன், மேலும் இந்த குழுவினரை மேற்கு கடற்படை கட்டளை தலைமையகத்திற்கு அந்த கட்டளையின் செயல்பாட்டு பணிக்குழுவினரால் வரவேற்கப்பட்டனர்.

21 Mar 2025