நிகழ்வு-செய்தி
கடற்படைத் தளபதி தென்கிழக்கு கடற்படை கட்டளைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டார

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொட, 2025 ஜூன் 20 முதல் 22 வரை தென்கிழக்கு கடற்படை கட்டளைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு, அங்கு கட்டளையின் செயல்பாட்டு, நிர்வாக, நலன்புரி மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளைக் கண்காணித்த்துடன் அந்த நடவடிக்கைகளை திறம்பட செயல்படுத்த தேவையான வழிமுறைகளை வழங்கினார். மேலும், கட்டளையுடன் இணைக்கப்பட்டுள்ள கடற்படை வீரர்களுக்கு கடற்படையின் பொறுப்புகள் மற்றும் செயல்பாட்டு நோக்கங்கள் குறித்து விளக்கினார்.
23 Jun 2025
இலங்கை கடற்படையின் புகழ்பெற்ற ஆலோசகரான லெப்டினன்ட் கமாண்டர் (ஆலோசகர்) சோமசிறி தேவேந்திர காலமானார்

இலங்கை கடற்படைக்கு அறிவு, திறன்கள் மற்றும் நல்ல அணுகுமுறைகள் கொண்ட தலைவர்களை உருவாக்குவதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்தவருமான லெப்டினன்ட் கமாண்டர் (ஆலோசகர்) சோமசிறி தேவேந்திர, 2025 ஜூன் 19 அன்று காலமானார்.
22 Jun 2025
கடற்படை தொழில்நுட்ப நிறுவனத்தில் பயிற்சியை முடித்த தொழில்நுட்பப் பிரிவைச் சேர்ந்த 32 மாலுமிகள் பிரியாவிடைப் பெற்றுச் சென்றனர்

வெலிசர கடற்படை தொழில்நுட்ப நிறுவனத்தின் 22 வது தொழில்நுட்ப பாடநெறியை வெற்றிகரமாக முடித்த முப்பத்திரண்டு (32) தொழில்நுட்ப மாலுமிகளின் பிரியாவிடை நிகழ்வு 2025 ஜூன் 20 ஆம் திகதி வெலிசர கடற்படை தொழில்நுட்ப நிறுவனத்தின் பிரதான பயிற்சி மைதானத்தில், நிறுவனத்தின் ஆய்வுகள் இயக்குநர் கெப்டன் ஹேமஜித் பண்டாரவின் அழைப்பின் பேரில், கடற்படை பொறியியல் இயக்குநர் ஜெனரல் ரியர் அட்மிரல் ஹசந்த தசநாயக்கவின் தலைமையில் நடைபெற்றது.
21 Jun 2025
கடற்படையின் சமூகப் பணித் திட்டத்தின் கீழ் அனுராதபுரம் மாவட்டத்தில் நிறுவப்பட்ட 02 மீள் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் பொதுமக்களுக்காக கையளிக்கப்பட்டன

கடற்படையின் சமூகப் பணித் திட்டத்தின் கீழ், அனுராதபுரம் மாவட்டத்தின் தபுத்தேகம பிரதேச செயலகப் பிரிவில் உள்ள தெல்ஹிரியாவ மற்றும் கோன் வாவி ஆகிய பகுதிகளில் கடற்படையின் தொழில்நுட்ப பங்களிப்பு மற்றும் ஜனாதிபதி செயலகத்தின் நிதி உதவியுடனும் நிறுவப்பட்ட இரண்டு (02) மீள் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் 2025 ஜூன் 20 ஆம் திகதி பொதுமக்களுக்காக கையளிக்கப்பட்டன.
21 Jun 2025
கடலில் எண்ணெய் கசிவை நிர்வகிப்பது குறித்த கூட்டுப் பயிற்சி காங்கேசன்துறையில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது

இலங்கைக்குச் சொந்தமான கடல்சார் வலயத்தில் எண்ணெய் கசிவு ஏற்பட்டால் உடனடியாக பதிலளிப்புக்கான தயார்நிலையை மேம்படுத்துதல் மற்றும் கடல் வலயத்தின் பாதுகாப்பை வலுப்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு, இலங்கை கடற்படை மற்றும் கடலோர காவல்படை ஏற்பாடு செய்த கூட்டுப் பயிற்சி, 2025 ஜூன் 16 மற்றும் 17 ஆகிய திகதிகளில் காங்கேசன்துறை துறைமுகத்தின் 'PH' இறங்குத்துறையில் வெற்றிகரமாக நடைபெற்றது.
21 Jun 2025
கடற்படையினரால் வடக்கில் உள்ள மீனவ சமூகத்தை ஆபத்தான சுகாதாரம் மற்றும் அவசர நோய் நிலைமைகளை முகாமைத்துவம் செய்வது தொடர்பான வேலைத் திட்டம்

அரச கோட்ப்பாடுகளுக்கு அமைவாக சமூக வலுவூட்டலுக்கு பங்களிக்கும் வகையில், இலங்கை கடற்படையினர், கடலோர காவல்படைத் திணைக்களம் மற்றும் மீன்வள, நீர்வளத் திணைக்களத்துடன் இணைந்து, கடலில் சுகாதாரம் மற்றும் அவசரகால மேலாண்மை குறித்து மீனவ சமூகத்திற்கு அறிவூட்டவும் அதிகாரம் அளிப்பதற்கும் ஒரு செயற்திட்டத்தை 2025 ஜூன் 11 முதல் 18 வரை யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் உள்ள இலங்கை கடற்படைக் கப்பல் கஞ்சதேவ மற்றும் இலங்கை கடற்படைக் கப்பல் கோதைம்பரவில் இந்தப் பயிற்சி வெற்றிகரமாக நடைபெற்றது.
21 Jun 2025
வடமேற்கு கடற்படை கட்டளையில் கடற்படையினரிற்க்கும் பொதுமக்களிற்கும் விசேட நடமாடும் பல் மருத்துவ சிகிச்சைகள்

இலங்கை கடற்படையின் மற்றொரு சமூகப் பணியாக ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு நடமாடும் பல் மருத்துவ சிகிச்சைகள் 2025 ஜூன் 03 முதல் 07 வரை வடமேற்கு கடற்படை கட்டளையின் கீழ் உள்ள மஹாவ, கும்புக்கெட்டே, முந்தலம், கொட்டுகச்சிய மற்றும் கங்கே வாடய ஆகிய பகுதிகளை உள்ளடக்கியவாறு நடைப்பெற்றது.
21 Jun 2025
இலங்கை மருத்துவமனை சேவைகள் கவுன்சிலின் தலைமையில் வெலிசர கடற்படை பொது மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணங்கள் நன்கொடையாக வழங்கி வைக்கப்பட்டது

இலங்கை மருத்துவமனை சேவைகள் கவுன்சிலின் இயக்குநர் வணக்கத்திற்குரிய சாஸ்திரபதி பண்டித ராஜவெல்லே சுபூதி தேரரின் தலைமையிலான சமூக சேவை திட்டத்தின் கீழ், மருத்துவமனை உபகரணங்கள் வெலிசரவில் உள்ள இலங்கை கடற்படையின் பொது மருத்துவமனைக்கு 2025 ஜூன் 17 ஆம் திகதி மருத்துவமனை வளாகத்தில் வைத்து நன்கொடையாக வழங்கப்பட்டன.
20 Jun 2025
திருகோணமலை அஷ்ரஃப் இறங்குத்துறையில் இரசாயன, உயிரியல், கதிரியக்க மற்றும் அணுசக்தி அபாயங்கள் குறித்த பயிற்சியை கடற்படை வெற்றிகரமாக நடத்தியது

இரசாயன, உயிரியல், கதிரியக்க மற்றும் அணுசக்தி ஆபத்து ஏற்பட்டால் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த பயிற்சியை இலங்கை கடற்படை 2025 ஜூன் 17 அன்று திருகோணமலை அஷ்ரஃப் இறங்குத்துறையில் வெற்றிகரமாக நடத்தியது.
20 Jun 2025
இலங்கை கடற்படைத் தளபதி இந்தோ-பசிபிக் கடல்சார் பாதுகாப்பு குறித்து 12வது பலதரப்பு கடல்சார் தலைமைத்துவ மாநாட்டில் பங்கேற்று உரையாற்றினார்

அமெரிக்க கடற்படையின் பசிபிக் பிராந்தியத்தின் கட்டளைத் தளபதி அட்மிரல் ST Koehler நடத்திய 12வது பலதரப்பு கடல்சார் தலைமைத்துவ மாநாடு (12th Multilateral Maritime Virtual Key Leadership Engagement) 2025 ஜூன் 18 அன்று ஹவாயிலிருந்து நிகழ்நிலையில் வெற்றிகரமாக நடைபெற்றது. இந்த மாநாட்டில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொட கொழும்பில் உள்ள கடற்படைத் தலைமையகத்திலிருந்து இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பு தொடர்பான மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் குறித்த கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள மாநாட்டில் பங்கேற்றார்.
19 Jun 2025