நிகழ்வு-செய்தி

கடற்படையின் சமூகப் பணித் திட்டத்தின் கீழ் அனுராதபுரம் மாவட்டத்தில் நிறுவப்பட்ட 06 மீள் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் பொதுமக்களுக்காக கையளிக்கப்பட்டன

அனுராதபுரம் மாவட்டத்தின் இபலோகம பிரதேச செயலகப் பிரிவில் உள்ள சங்கட்டேவ, தம்பெலஸ்ஸாகம, கோனபதிராவ, ததுசென்புர மற்றும் புளியங்குளம் ஆகிய கிராமங்களில் கடற்படையின் தொழில்நுட்ப மற்றும் கைவினைக் கலை உதவியுடனும் ஜனாதிபதி செயலகத்தின் நிதி உதவியுடனும் நிறுவப்பட்ட மீள் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் 2025 மே 16 ஆம் திகதி பொதுமக்களுக்காக கையளிக்கப்பட்டன.

18 May 2025

ரியர் அட்மிரல் சனத் பிடிகல கடற்படை சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்

ரியர் அட்மிரல் சனத் பிடிகல இலங்கை கடற்படையில் 35 வருட கால சேவையை நிறைவு செய்து இன்று (2025 மே 17) கடற்படை சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்.

17 May 2025

உலக தலசீமியா தினத்தை முன்னிட்டு கடற்படையினால் 400 தலசீமியா உட்செலுத்துதல் அமைப்புகள் சுகாதார அமைச்சகத்திடம் கையளிக்கப்பட்டன

மே 8 ஆம் திகதி உலக தலசீமியா தினத்தை முன்னிட்டு, கடற்படையின் சமூகப் பணித் திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட 400 தலசீமியா உட்செலுத்துதல் அமைப்புகள், 2025 மே 16 கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதியின் தலைமையில், நோயாளிகளுக்கு இலவசமாக விநியோகிப்பதற்காக சுகாதார அமைச்சகத்திற்கு கையளிக்கப்பட்டன.

17 May 2025

சமய மரபுளுக்கு முன்னுரிமை கொடுத்து கடற்படையினர் வெசாக் பண்டிகையை கொண்டாடினர்

2025 மே 12 ஆம் திகதி வெசாக் பண்டிகையை முன்னிட்டு, கடற்படை பௌத்த சங்கத்தின் தலைமையில், இலங்கை கடற்படை, ஒவ்வொரு கடற்படை கட்டளையிலும் சமய நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளனர். நுவரெலியா நகரை மையமாகக் கொண்டு நடைபெறும் அரச வெசாக் விழா, கொழும்பு பௌத்தாலோக வெசாக் வலயம் மற்றும் புத்த ரஷ்மி வெசாக் வலயம் ஆகியவற்றிற்கு கடற்படையினர் பங்குபற்றினர்.

16 May 2025

அமெரிக்க எரிசக்தித் திணைக்களத்தினால் இலங்கை கடற்படைக்கு அணு மற்றும் கதிரியக்கப் பொருட்களை கண்டறியும் உபகரணங்கள் வழங்கப்பட்டன

இலங்கை கடற்படைக்குள் நிறுவப்பட்ட இரசாயணவியல், உயிரியல், கதிரியக்க மற்றும் அணுசக்தி (CBRN) பிரிவுகளால் மேற்கொள்ளப்படும் ஆய்வுகளுக்குத் தேவையான அணு மற்றும் கதிரியக்கப் பொருள் கண்டறிதல் உபகரணங்களை கடற்படைத் தளபதியிடம் ஒப்படைத்தல் இன்று (2025 மே 15) இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் திருமதி ஜூலி சாங் தலைமையில் கடற்படைத் தலைமையகத்தில் நடைபெற்றது.

16 May 2025

GALLE DIALOGUE 2025 அதிகாரப்பூர்வ வலைத்தளம் அறிமுகப்படுத்தப்பட்டது

‘Maritime outlook of the Indian ocean under changing dynamics’ என்ற கருப்பொருளின் கீழ், இலங்கை கடற்படை பாதுகாப்பு அமைச்சகத்துடன் இணைந்து ஏற்பாடு செய்த GALLE DIALOGUE 2025 சர்வதேச கடல்சார் மாநாட்டிற்கான அதிகாரப்பூர்வ வலைத்தளம், கடற்படைத் தளபதி அவர்களால் இன்று (2025 மே 15) கடற்படைத் தலைமையகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.

16 May 2025

கொழும்பில் ஆரம்பித்த கூட்டு சர்வதேச மாநாட்டில் கடற்படைத் தளபதி சிறப்புரையை நிகழ்த்தினார்

தேசிய பாதுகாப்பு ஆய்வுகள் நிறுவனம் (Institute of National Security Studies - INSS), Consortium of South Asian Think Tanks (COSATT) மற்றும் Konrad-Adenauer-Stiftung (KAS) ஆகியவற்றால் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டு சர்வதேச மாநாடு இன்று (2025 மே 15) கொழும்பில் உள்ள தாஜ் சமுத்ரா ஹோட்டலில் ஆரம்பிக்கப்பட்டதோடு, இந்த மாநாட்டின் சிறப்புரையை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொட அவர்கள் நிகழ்த்தினார்.

16 May 2025

IMDEX Asia – 2025 இல் பங்கேற்ற சமுதுர கப்பல் தீவை வந்தடைந்தது

சிங்கப்பூரின் செங்கி (Changi) கண்காட்சி மையத்தில் 2025 மே 6 முதல் 8 வரை வெற்றிகரமாக நடைபெற்ற ‘IMDEX Asia – 2025’ சர்வதேச கடல்சார் பாதுகாப்பு கண்காட்சி மற்றும் 9வது சர்வதேச கடல்சார் பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்ற இலங்கை கடற்படைக் கப்பல் சமுதுர இன்று (2025 மே 15) நாட்டை வந்தடைந்ததுடன் கொழும்பு துறைமுகத்தில் கடற்படையினரால் அந்தக் கப்பலுக்கு கடற்படை மரபுப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது.

15 May 2025

பிரான்சிய கடற்படைக் கப்பலான ‘BEAUTEMPS BEAUPRE’ உத்தியோகபூர்வ விஜயத்தின் பின் தீவை விட்டு புறப்படுகிறது

2025 மே 09 ஆம் திகதி உத்தியோகபூர்வ விஜயத்திற்காக தீவை வந்தடைந்த பிரான்சிய கடற்படைக் கப்பலான 'BEAUTEMPS BEAUPRE', இன்று (2025 மே 13) தீவிலிருந்து புறப்பட்டது, மேலும் இலங்கை கடற்படையினர் கொழும்பு துறைமுகத்தில் அந்தக் கப்பலுக்கு பாரம்பரிய முறைப்படி பிரியாவிடையை வழங்கினர்.

13 May 2025

பிரான்சிய கடற்படைக் கப்பலான ‘BEAUTEMPS BEAUPRE’ உத்தியோகபூர்வ விஜயத்திற்காக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

பிரான்சிய கடற்படைக் கப்பலான ‘BEAUTEMPS BEAUPRE’ இன்று (2025 மே 09) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது,இலங்கை கடற்படையினர் கப்பலை கடற்படை மரபுகளுக்கு அமைவாக வரவேற்றனர்.

09 May 2025