நிகழ்வு-செய்தி

இலங்கைக்கான பங்களாதேஷ் உயர்ஸ்தானிகராலயத்தின் புதிய பாதுகாப்பு ஆலோசகர் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு

இலங்கையிலுள்ள பங்களாதேஷ் உயர்ஸ்தானிகராலயத்தில் புதிய பாதுகாப்பு ஆலோசகராகப் பொறுப்பேற்ற Commodore M Moniruzzaman, அவர்கள் இன்று (19 டிசம்பர் 2023) கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவைச் சந்தித்தார்.

19 Dec 2023

73 வது கடற்படை தினத்தை முன்னிட்டு கடற்படைக்கு ஆசீர்வதிக்கும் வகையில் ஸ்ரீ தலதா மாலிகையில் புத்த பூஜை மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்வுகள் இடம்பெற்றது

இலங்கை கடற்படையின் பெருமைமிக்க 73வது ஆண்டு நிறைவை முன்னிட்டு கடற்படையினருக்கு ஆசி வழங்கும் வகையில் பல சர்வமத நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், அந்த சமய நிகழ்ச்சிகளில் ஒரு பகுதியாக வரலாற்று சிறப்புமிக்க கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு கிலன்பச புத்த பூஜை வழங்கும் நிகழ்வு 2023 டிசம்பர் 08 ஆம் திகதியும் அன்னதானம் வழங்கும் சமயச் சடங்குகள் இன்றும் (2023 டிசம்பர் 08) இடம்பெற்றது. குறித்த நிகழ்வுகள் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் தலைமையில் கடற்படை சேவா வனிதா பிரிவின் கௌரவத் தலைவர் திருமதி மாலா லமாஹேவா அவர்களின் பங்களிப்புடன் இடம்பெற்றது.

09 Dec 2023

இலங்கை கடற்படை தனது 73வது ஆண்டு நிறைவை பெருமையுடன் கொண்டாடுகிறது

பெருமைமிக்க வரலாற்றில் மரபுரிமை பெற்ற இலங்கை கடற்படையின் 73வது ஆண்டு நிறைவு விழா இன்று (09 டிசம்பர் 2023) பெருமையுடன் கொண்டாடப்படுவதுடன் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் வழிகாட்டுதலின் கீழ் 73வது ஆண்டு நிறைவு விழா கடற்படை மரபுகள் மற்றும் மத நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு ஒவ்வொரு கடற்படை கட்டளையிலும் நடைபெறுகிறது.

09 Dec 2023

பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியின் பதினேழாவது (17) பாடநெறிக்கான விருந்தினர் விரிவுரையை கடற்படைத் தளபதி நடத்தினார்

சபுகஸ்கந்த பாதுகாப்பு சேவை கட்டளை மற்றும் பணியாளர்கள் கல்லூரியின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரிகுவின் அழைப்பின் பேரில் கல்லூரியின் பதினேழாவது (17) பாடநெறிக்கான விருந்தினர் விரிவுரையை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவினால் 2023 டிசம்பர் 04 ஆம் திகதி குறித்த கல்லூரியின் கேட்போர் கூடத்தில் நடத்தப்பட்டது.

05 Dec 2023

கடற்படை சொற்பொழிவுப் போட்டியில் மற்றும் அட்மிரல் கிளான்சி பெர்னாண்டோ நினைவுக் கட்டுரைப் போட்டியில் வெற்றியாளர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன

இலங்கை கடற்படை ஆராய்ச்சி பிரிவு மூலம் ஏற்பாடு செய்யப்படுகின்ற கடற்படை சொற்பொழிவுப் போட்டி - 2023 (Public Speaking Competition - 2023) மற்றும் அட்மிரல் கிளான்சி பெர்னாண்டோ நினைவுக் கட்டுரைப் போட்டியில் வெற்றியாளர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கும் நிகழ்வு 2023 டிசம்பர் 01 ஆம் திகதி கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா மற்றும் அட்மிரல் கிளான்சி பெர்னாண்டோவின் (மறைந்த) மனைவி திருமதி மோனிகா பெர்னாண்டோ அவர்களின் தலைமையில் கடற்படைத் தலைமையகத்தில் உள்ள அட்மிரல் சோமதிலக திசாநாயக்க கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

03 Dec 2023

கடற்படையின் 73வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இரத்த தானம் வழங்கும் நிகழ்ச்சியொன்று திருகோணமலை கடற்படை வைத்தியசாலையில் இடம்பெற்றது

கடற்படையின் பெருமைமிக்க 73வது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட இரத்ததான நிகழ்ச்சியொன்று 2023 டிசம்பர் 01 ஆம் திகதி திருகோணமலை கடற்படை வைத்தியசாலையில் வெற்றிகரமாக நடைபெற்றது.

03 Dec 2023

73 வது கடற்படை தினத்தை முன்னிட்டு கடற்படையினருக்கு ஆசி வழங்கும் இஸ்லாமிய மத நிகழ்ச்சி கொழும்பு செத்தம் வீதி ஜும்மா பள்ளிவாசலில் இடம்பெற்றது

2023 டிசம்பர் 09 ஆம் திகதிக்கு ஈடுபட்டுள்ள இலங்கை கடற்படையின் பெருமைமிக்க 73 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, கடற்படையினருக்கு ஆசீர்வாதம் வழங்கும் தொடர் சமய நிகழ்ச்சிகளில் இஸ்லாமிய சமய நிகழ்ச்சி இன்று (2023 டிசம்பர் 02) கொழும்பு செத்தம் வீதி ஜும்மா பள்ளிவாசலில் நடைபெற்றது.

02 Dec 2023

73 வது கடற்படை தினத்தை முன்னிட்டு கடற்படையினருக்கு ஆசி வழங்கும் இந்து மத நிகழ்ச்சி கொழும்பு ஸ்ரீ பொன்னம்பலவானேஸ்வரர் ஆலயத்தில் இடம்பெற்றது

2023 டிசம்பர் 09 ஆம் திகதிக்கு ஈடுபட்டுள்ள இலங்கை கடற்படையின் பெருமைமிக்க 73 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கடற்படையினருக்கு ஆசி வழங்கும் மத நிகழ்ச்சிகளின் இந்து மத நிகழ்ச்சி இன்று (2023 டிசம்பர் 01) கொழும்பு ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் இந்து ஆலயத்தில் இடம்பெற்றது.

02 Dec 2023

நச்சு மருந்துகள் மற்றும் ஆபத்தான போதைப்பொருள் பாவனையை தடுக்கும் செயலணி மற்றும் ஊடக நிறுவனங்கள் இடையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது

இலங்கையில் நச்சு மற்றும் ஆபத்தான போதைப்பொருள் பாவனையை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதில் ஊடகங்களை எவ்வாறு பயன்படுத்துவது என்பது தொடர்பில் நச்சு மருந்துகள் மற்றும் ஆபத்தான போதைப்பொருள் பாவனையை தடுக்கும் செயலணியின் தளபதி மற்றும் கடற்படையின் தளபதியான வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா தலைமையில் 2023 நவம்பர் 29 ஆம் திகதி ஊடக அமைச்சின் கேட்போர் கூடத்தில் கலந்துரையாடலொன்று நடைபெற்றது.

01 Dec 2023

இலங்கை கடற்படை சங்கத்தின் வருடாந்த ஒன்றுகூடல் - 2023 பிரமாண்டமான முறையில் நடைபெற்றது

2023 டிசம்பர் 8 ஆம் திகதி ஈடுபடுகின்ற இலங்கை கடற்படை சங்கத்தின் 44 ஆவது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு வருடாந்த ஒன்றுகூடல் கடற்படை சங்கத்தின் கௌரவத் தலைவரும் முன்னாள் கடற்படைத் தளபதியுமான அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன (ஓய்வு) தலைமையில் பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் சங்கத்தின் உறுப்பினர்களின் பங்கேற்புடன் 2023 நவம்பர் 25 அன்று வெலிசரவில் (Wave n’ Lake Navy Hall) பிரமாண்டமாக நடைபெற்றது.

01 Dec 2023