நிகழ்வு-செய்தி

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டைக் குறிக்கும் வகையில் மேற்கு கடற்படை கட்டளை வண்ணமயமான புத்தாண்டு கொண்டாட்டத்தை நடத்தியது

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டைக் குறிக்கும் வகையில் மேற்கு கடற்படை கட்டளையின் தளபதியின் அறிவுறுத்தலின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட 'வசந்த உதாணய - 2025' என்ற தலைப்பில் 2025 ஏப்ரல் 27 ஆம் தேதி இலங்கை கடற்படை கப்பல் கெமுனு நிறுவனத்தில் கடற்படையின் தலைமை அதிகாரியின் தலைமையில் நடைபெற்றது.

30 Apr 2025

“சிறி தலதா வந்தனத்தைத்” தொடர்ந்து க்லீன் ஶ்ரீ லங்கா செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட கண்டி ஏரி சுத்திகரிப்பு திட்டத்திற்கு கடற்படையின் ஆதரவு

2025 ஏப்ரல் 28 ஆம் திகதி தலதா வந்தனத்தின் பிறகு புனித வந்தனத்திற்காக வந்த பக்தர்களால் கண்டி ஏரி வளாகத்தில் கொட்டப்பட்ட பிளாஸ்டிக் திண்மக்கழிவுகள் மற்றும் குப்பைகளை அகற்றி உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு கவர்ச்சிகரமான சூழலை உருவாக்கும் நோக்கில்,கண்டி ஏரியை சுத்தம் செய்யும் திட்டத்திற்கு கடற்படை உதவியது.

30 Apr 2025

‘IMDEX Asia - 2025’ சர்வதேச கடல்சார் பாதுகாப்பு கண்காட்சி மற்றும் 09 வது சர்வதேச கடல்சார் பாதுகாப்பு குறித்த மாநாட்டில் (9th IMSC) பங்கேற்க இலங்கை கடற்படை கப்பல் சமுதுர கப்பலானது தீவிலிருந்து புறப்பட்டது

சிங்கப்பூர் கடற்படையினால் ஏற்பாடு செய்த சர்வதேச கடல்சார் பாதுகாப்பு கண்காட்சி மற்றும் 9வது சர்வதேச கடல்சார் பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்க, இலங்கை கடற்படையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கை கடற்படைக் கப்பல் சமுதுர கப்பலானது, கடற்படை மரபுப்படி சிங்கப்பூரின் செங்காய் (Changi) துறைமுகத்திற்கு 2025 ஏப்ரல் 27 அன்று காலை கொழும்பு துறைமுகத்திலிருந்து புறப்பட்டது.

28 Apr 2025

ஆஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்து தேசிய நினைவு தின கொண்டாட்டங்களில் கடற்படைத் தலைவர் பங்கேற்றார்

கொழும்பு 05, ஜாவத்த கல்லறையில் 2025 ஏப்ரல் 25 அன்று நடைபெற்ற வருடாந்திர ஆஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்து தேசிய நினைவு தின கொண்டாட்டங்களில் கடற்படைத் தளபதி பங்கேற்றார்.

26 Apr 2025

கொரியக் குடியரசுக் கடற்படைக்கு சொந்தமான ‘KANG GAM CHAN’ என்ற கப்பல் தீவைவிட்டு புறப்பட்டது

2025 ஏப்ரல் 22 ஆம் திகதி உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கைக்கு வந்த கொரியக் குடியரசின் கடற்படைப் போர்க்கப்பல் ‘KANG GAM CHAN’ இன்று 2025 ஏப்ரல் 24ஆம் திகதி தீவை விட்டு புறப்பட்டதுடன், கொழும்பு துறைமுகத்தில் கப்பலுக்கு இலங்கை கடற்படை பாரம்பரிய முறையில் கடற்படையினர் பிரியாவிடையளித்தனர்.

26 Apr 2025

"சிறி தலதா வந்தனாவிற்கு" வரும் பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் நலனுக்காக கடற்படையின் உதவி

2025 ஏப்ரல் 23 அன்று கண்டியில் நடைபெற்ற "சிறி தலதா வந்தனா" நிகழ்வில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கான பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் நலனை ஆய்வு செய்வதற்காக கடற்படைத் தளபதி ஒரு ஆய்வு சுற்றுப்பயணத்தில் பங்கேற்றார்.

24 Apr 2025

கொரிய குடியரசுக் கடற் படைக்கு சொந்தமான ‘KANG GAM CHAN’ என்ற கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்றிற்காக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது

கொரிய குடியரசுக் கடற் படைக்கு சொந்தமான ‘KANG GAM CHAN’ என்ற கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்றிற்காக இன்று (2025 ஏப்ரல் 22) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததுடன், இலங்கை கடற்படையினர் கப்பலை கடற்படை மரபுகளுக்கு அமைவாக வரவேற்றனர்.

22 Apr 2025

இலங்கைக்கான பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசின் உயர்ஸ்தானிகர் கிழக்கு கடற்படை கட்டளையின் பிரதித் தளபதியை உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக சந்தித்தார்

இலங்கைக்கான பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசின் உயர்ஸ்தானிகர் கௌரவ மேஜர் ஜெனரல் Faheem-Ul-Aziz (ஓய்வு) 2025 ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி கிழக்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில் உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக அவ் கட்டளையின் பிரதித் கட்டளைத் தளபதியைச் சந்தித்தார்.

22 Apr 2025

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டைக் குறிக்கும் வகையில் வட மத்திய கடற்படை கட்டளை வண்ணமயமான புத்தாண்டு கொண்டாட்டத்தை நடத்தியது

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டைக் குறிக்கும் வகையில் வட மத்திய கடற்படை கட்டளையால் ஏற்பாடு செய்யப்பட்ட புத்தாண்டு விழாவானது 2025 ஏப்ரல் 20 ஆம் திகதி தலைமன்னார், பியர்கம ரோமன் கத்தோலிக்க கல்லூரி மைதானத்தில் வட மத்திய கடற்படை கட்டளைத் தளபதியின் தலைமையில் நடைபெற்றது.

22 Apr 2025

கடற்படை தளபதி இலங்கை கடற்படை கப்பல் நிபுன நிறுவனத்திற்கு உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டார்

2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி இலங்கை கடற்படை கப்பல் நிபுன நிறுவனத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட கடற்படைத் தளபதி, அவ் நிறுவனத்தில் பயிற்சிப் பெறும் பயிற்சி மாலுமிகள், பயிற்சி ஆலோசனைப் பணிக்குழுவின் அதிகாரிகள் மற்றும் சிரேஷ்ட,கனிஷ்ட மாலுமிகளுக்கு உரையாற்றினார். அப்போது, கடற்படைத் தளபதி, பயிற்சி பெறும் மாலுமிகள் மற்றும் பயிற்சி ஆலோசகர்களின் பொறுப்பை வலியுறுத்தியதுடன், பயிற்சி நடவடிக்கைகளை வினைத்திறனாகவும் திறம்படவும் மேற்கொள்வதற்கு தேவையான அறிவுறுத்தல்களை கடற்படை தளபதி வழங்கினார்.

22 Apr 2025