நிகழ்வு-செய்தி

விரைவு நடவடிக்கை படகுகள் படைப்பிரிவின் இருபத்தி ஏழாவது (27) தகுதிப் பாடநெறியை நிறைவு செய்த அதிகாரிகள் மற்றும் மாலுமிகளுக்கான சின்னங்கள் வழங்கும் நிகழ்வு கடற்படைத் தளபதியின் தலைமையில் இடம்பெற்றது

கடற்படை விரைவு நடவடிக்கை படகுகள் படைப்பிரிவின் இருபத்தி ஏழாவது (27) தகுதிப் பாடநெறியை நிறைவு செய்த இரண்டு (02) அதிகாரிகள் மற்றும் முப்பத்து நான்கு (34) மாலுமிகளுக்கு சின்னங்கள் வழங்கும் நிகழ்வு புத்தளம், கங்கேவாடிய விரைவு நடவடிக்கை படகுகள் படைத் தலைமையகத்தின் பிரதான பயிற்சி மைதானத்தில் இன்று (15 நவம்பர் 2023) வடமேற்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் நிஷாந்த பீரிஸ் அவர்களின் அழைப்பின் பேரில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் தலைமையில் பெருமையுடன் நடைபெற்றது.

15 Nov 2023

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் நடைபெற்ற இந்தோ-பசிபிக் சர்வதேச கடல்சார் கண்காட்சி மற்றும் மாநாடு-2023 இல் இலங்கை கடற்படைத் தளபதி பங்கேற்பு

கடல்சார் ஒத்துழைப்பு மற்றும் மூலோபாய ஈடுபாட்டின் குறிப்பிடத்தக்க காட்சியாக, ராயல் ஆஸ்திரேலிய கடற்படையால் நடத்தப்பட்ட இந்தோ பசிபிக் சர்வதேச கடல்சார் கண்காட்சி (Indo Pacific International Maritime Exposition -2023) மற்றும் இந்தோ பசிபிக் கடல் சக்தி மாநாடு 2023 (Indo-Pacific Sea Power Conference - 2023) 2023 நவம்பர் 06 முதல் 09 வரை ஆஸ்திரேலியாவின் சிட்னியில் வெற்றிகரமாக நடைபெற்றன. உலகெங்கிலும் உள்ள கடற்படைத் தலைவர்கள், பாதுகாப்பு வல்லுநர்கள் மற்றும் கடல்சார் தொழில் வல்லுநர்களின் ஒன்றுகூடலுக்கு மத்தியில், இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவும் இந்த ஆண்டு கடற்படை பாதுகாப்பு கண்காட்சி மற்றும் மாநாட்டில் கலந்துகொண்டார்.

14 Nov 2023

இலங்கை மற்றும் இந்திய கடற்படைகளுக்கு இடையில் நடைபெற்ற 33 வது சர்வதேச கடல் எல்லை நிர்ணய கூட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்தது

இலங்கை மற்றும் இந்திய கடற்படைகளுக்கு இடையே நடைபெற்ற 33வது சர்வதேச கடல் எல்லை நிர்ணய கூட்டம் 2023 நவம்பர் 03 அன்று இந்திய கடற்படையின் INS Sumitra கப்பலில் காங்கசந்துராவிற்கு வடக்கே இந்திய-இலங்கை கடற்பரப்பில் வெற்றிகரமாக நடைபெற்றது.

13 Nov 2023

2023 கட்டளைகளுக்கு இடையிலான துரப்பணம் போட்டியில் முதலிடத்தை ஏவுகணை கட்டளை பெற்றுள்ளது

இந்த ஆண்டு (2023) கடற்படை கட்டளை களுக்கு இடையிலான துரப்பணம் போட்டித்தொடர் 2023 நவம்பர் 08 மற்றும் 09 ஆம் திகதிகளில் இலங்கை கடற்படை கப்பல் 'நிபுன' நிறுவனத்தின் பிரதான பயிற்சி மைதானத்தில் தெற்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் சிந்தக குமாரசிங்கவின் தலைமையில் நடைபெற்றதுடன் இதன் முதலிடத்தை ஏவுகணை கட்டளை பெற்றுள்ளது.

11 Nov 2023

கடற்படை தலைமையகம் மற்றும் அனைத்து கடற்படை கட்டளைகளிலும் மறைந்த ஆயுதப்படையினர் நினைவு தினம் பெருமையுடன் கொண்டாடப்பட்டது

முதலாம் மற்றும் இரண்டாம் உலகப் போர்களின் போதும் இலங்கைக்கு சுதந்திரம் பெற்ற பின்னர் இதுவரை சேவையில் இருந்த போதும் உயிர் தியாகம் செய்த போர் வீரர்களை நினைவு கூரும் நிகழ்வு இன்றய தினம் (நவம்பர் 11) ஈடுபட்டுள்ளதுடன் பிரதிப் தலைமை அதிகாரி மற்றும் பணிப்பாளர் நாயகம் செயற்பாடுகள், ரியர் அட்மிரல் பிரதீப் ரத்நாயக்கவின் தலைமையில் கடற்படை தலைமையகத்திலும் கட்டளைத் தளபதிகளின் தலைமையில் அனைத்து கடற்படை கட்டளைகளிலும் பெருமையுடன் கொண்டாடப்பட்டது.

11 Nov 2023

கடற்படை மரியாதைக்கு மத்தியில் ரியர் அட்மிரல் ஜகத் லியனகமகே கடற்படை சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்

33 வருடங்களுக்கும் மேலாக தனது சிறப்பான சேவை மற்றும் இலங்கை கடற்படைக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கிய ரியர் அட்மிரல் ஜகத் லியனகமகே தனது புகழ்பெற்ற கடற்படை சேவையிலிருந்து இன்று (2023 நவம்பர் 08) ஓய்வு பெற்றார்.

08 Nov 2023

வீரமரணம் அடைந்த போர்வீரர்களின் நினைவேந்தலின் அடையாளமாக கடற்படைச் சங்கத்தின் உறுப்பினர்கள் கடற்படைத் தளபதிக்கு பொப்பி மலரொன்று அணிவித்தனர்

போர் வீரர்களை நினைவுகூரும் வகையில் ஆரம்பிக்கப்பட்ட பொப்பி மலர் பிரச்சாரத்தையொட்டி, இலங்கை கடற்படை சங்கத்தின் தலைவர் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன (ஓய்வு) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவுக்கு இன்று (2023 அக்டோபர் 24) கடற்படைத் தலைமையகத்தில் பொப்பி மலரொன்று அணிவித்தார்.

24 Oct 2023

252 ஆம் ஆட்சேர்ப்பின் அடிப்படை பயிற்சியை பூர்த்தி செய்த 523 கடற்படையினரின் வெளியேறல் அணிவகுப்பு

இலங்கை நிரந்தர மற்றும் தன்னார்வ கடற்படையின் 252 ஆம் ஆட்சேர்ப்புக்கு சொந்தமான நிரந்தர கடற்படையின் நானூற்று இருபத்தி மூன்று (423) கடற்படை வீரர்கள் மற்றும் தன்னார்வ கடற்படையின் நூறு (100) கடற்படை வீரர்கள் அவர்களின் அடிப்படை பயிற்சியை பூர்த்தி செய்து 2023 அக்டோபர் 20 ஆம் திகதி பூஸ்ஸ இலங்கை கடற்படை கப்பல் நிபுன நிருவனத்தில் நடந்த அணிவகுப்பு வைபவத்தின் போது வெளியேறிச் சென்றனர்.

21 Oct 2023

ரியர் அட்மிரல் அசங்க ரணசூரிய கடற்படை சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்

35 வருடங்களுக்கும் மேலாக தனது சிறப்பான சேவை மற்றும் இலங்கை கடற்படைக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கிய ரியர் அட்மிரல் அசங்க ரணசூரிய தனது புகழ்பெற்ற கடற்படை சேவையிலிருந்து இன்று (2023 ஒக்டோபர் 20) ஓய்வு பெற்றார்.

20 Oct 2023

இந்திய கடற்படைக்கு சொந்தமான ‘INS Airavat’ கப்பல் தனது உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு இலங்கை விட்டு புறப்பட்டது

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு 2023 அக்டோபர் 18 ஆம் திகதி இலங்கை வந்தடைந்த இந்திய கடற்படைக்கு சொந்தமான ‘INS Airavat’ கப்பல் வெற்றிகரமாக தனது உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்து, இன்று (2023 அக்டோபர் 19) இலங்கை விட்டு புறப்பட்டுள்ளது. இந்நிலையில், இலங்கை கடற்படையினர் கொழும்பு துறைமுகத்தில் கடற்படையினரின் பாரம்பரிய முறைப்படி கப்பலுக்கு பிரியாவிடை அளித்தனர்.

19 Oct 2023