நிகழ்வு-செய்தி

கடற்படையின் சமூகப் பணித் திட்டத்தின் மூலம் மொனராகலை மாவட்டத்தில் நிறுவப்பட்டுள்ள நீர் சுத்திகரிப்பு நிலையம் மக்களிடம் கையளிக்கப்பட்டது

மொனராகலை மாவட்டத்தின் ம மடுல்லவில் உள்ள அல்பிட்டிய கல்லூரி வளாகத்தில் கடற்படையின் தொழில்நுட்ப உதவியுடன் மற்றும் சன்ஷைன் ஃபவுண்டேஷன் ஃபார் குட் (Sunshine Foundation for Good) நிறுவனத்தின் நிதி உதவியுடன் நிறுவப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையம் 2025 ஏப்ரல் 10 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது.

11 Apr 2025

திருகோணமலை கடற்படை தளத்தில் நீருக்கடியில் புத்தாண்டு கொண்டாட்டம் இடம்பெற்றது

இலங்கை கடற்படையின் மாலிமா சேவையைச் சேர்ந்த, மலிமா சுழியோடி சமுதாயம் (Malima Diving Club) மற்றும் கடற்படை சுழியோடி பிரிவுடன் இணைந்து, கடற்படை வரலாற்றில் முதல் முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட நீருக்கடியில் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம் திருகோணமலை பகுதியில் வெற்றிகரமாக நடைபெற்றது.

10 Apr 2025

பொத்துவில் அல்-கலாம் மகா வித்தியாலயம் "மகிழ்ச்சி நிறைந்த பாடசாலையாக" மாற்றுவதற்கான கடற்படையின் குடிமக்களை வலுவூட்டல் மற்றும் சமூக பணி பங்களிப்பு

"மகிழ்ச்சி நிறைந்த பாடசாலை" என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்ட, சமூக மதிப்புகள் உட்பட சுற்றுச்சூழலுக்கு ஏற்ற கல்விச் சூழலை வளர்ப்பதற்கான தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், கடற்படையின் சமூக பராமரிப்பு பங்களிப்புடன் பொத்துவில் அல்-கலாம் மகா வித்தியாலய வளாகத்தை சுத்தம் செய்தல் மற்றும் புனரமைக்கும் பணிகள் 2025 ஏப்ரல் 07 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டது.

09 Apr 2025

வட மத்திய கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் இந்திக டி சில்வா கடமைகளைப் பொறுப்பேற்றார்

வட மத்திய கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக நியமிக்கப்பட்ட ரியர் அட்மிரல் இந்திக டி சில்வா, இன்று (2025 ஏப்ரல் 09) கட்டளை தலைமையகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றார்.

09 Apr 2025

‘Speech Craft’ சங்கத்தின் முதல் ஆங்கிலப் பேச்சுப் பட்டறை வெற்றிகரமாக நிறைவடைந்தது

இலங்கை கடற்படை அதிகாரிகளின் பொதுப் பேச்சு (Public Speaking) மற்றும் பகுப்பாய்வு திறன்களை(Analytical skills) மேம்படுத்தும் நோக்கத்துடன், கடற்படை ஆராய்ச்சிப் பிரிவால் ஏற்பாடு செய்யப்பட்ட முதல் ஆங்கிலப் பேச்சுப் பட்டறை, களனி டோஸ்ட்மாஸ்டர்ஸ் கழகத்தின் தலைமையில், வெலிசரவில் உள்ள ‘Wave n’ Lake’ கடற்படை நிகழ்வு மண்டபத்தில் 2025 மார்ச் 28 அன்று வெற்றிகரமாக நடைபெற்றது.

09 Apr 2025

கடற்படை மூலம் அனர்த்த நிவாரணம் குறித்த சமூக வலுவூட்டல் நிகழ்ச்சித் திட்டம்

“கிளீன் ஶ்ரீ லங்கா” தேசிய திட்டத்தின் கீழ் சமூக வலுவூட்டலுக்கு பங்களிக்கும் வகையில், இலங்கை கடற்படை 2025 ஏப்ரல் 05 முதல் 07 வரை தென்கிழக்கு கடற்படை கட்டளையில் அனர்த்த நிவாரணம் குறித்த சமூக வலுவூட்டல் பயிற்சி திட்டத்தை வெற்றிகரமாக நடத்தியது.

09 Apr 2025

படைப்பு எழுத்துத் திறனைக் கடற்படைத் தளபதி பாராட்டினார்

லெப்டினன்ட் கமாண்டர் (C) ஆர்.ஏ.டி.டி ராஜபக்ஷவினால் சிறுகதைகளின் தொகுப்பை கடற்படைத் தளபதிக்கு வழங்கும் நிகழ்வு 2025 ஏப்ரல் 07 ஆம் திகதி கடற்படை தலைமையகத்தில் நடைபெற்றது.

09 Apr 2025

இந்திய கடற்படைக்கு சொந்தமான ‘INS SAHYADRI’ என்ற கப்பல் தீவைவிட்டு புறப்பட்டது

2025 ஏப்ரல் 04 ஆம் திகதி அதிகாரப்பூர்வ விஜயமாக இலங்கைக்கு வந்த இந்திய கடற்படை போர்க்கப்பல் 'INS SAHYADRI' இன்று (2025 ஏப்ரல் 07) தீவை விட்டு புறப்பட்டதுடன், கொழும்பு துறைமுகத்தில் கப்பலுக்கு இலங்கை கடற்படை பாரம்பரிய முறையில் கடற்படையினர் பிரியாவிடையளித்தனர்.

07 Apr 2025

கடற்படையின் சமூகப் பணித் திட்டத்தின் மூலம் அனுராதபுரம் மாவட்டத்தில் நிறுவப்பட்டுள்ள 02 நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மக்களிடம் கையளிக்கப்பட்டது

அனுராதபுரம் மாவட்டத்தின் கெக்கிராவ பிரதேச செயலகப் பிரிவில் உள்ள ஹீனுக்கிரிய மற்றும் நாவக்குளம ஸ்ரீ போத்திருக்கராம விகாரஸ்தான வளாகத்தில் கடற்படையின் தொழில்நுட்ப உதவியுடன் மற்றும் ஜனாதிபதி செயலகத்தின் நிதி உதவியுடன் நிறுவப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் 2025 ஏப்ரல் 04 ஆம் திகதி மக்களிடம் கையளிக்கப்பட்டது.

07 Apr 2025

கடற்படையின் சமூகப் பணித் திட்டத்தின் மூலம் பொலன்னறுவை மாவட்டத்தில் நிறுவப்பட்டுள்ள நீர் சுத்திகரிப்பு நிலையம் மக்களிடம் கையளிக்கப்பட்டது

பொலன்னறுவை மாவட்டத்தின் மஹிந்தகம கிராம அலுவலர் பிரிவில் உள்ள ஸ்ரீ மகாசேன விஹாரய வளாகத்தில் கடற்படையின் தொழில்நுட்ப உதவியுடன் மற்றும் இலங்கை இராணுவத்தின் மருத்துவப் பிரிவின் நிதி உதவியுடன் நிறுவப்பட்ட 1088வது நீர் சுத்திகரிப்பு நிலையம் 2025 ஏப்ரல் 03 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது.

07 Apr 2025