Drug Bust News-ta

கல்பிட்டி கடற்கரையில் கடற்படை நடத்திய சிறப்பு நடவடிக்கையில் மேலும் ஒரு போதைப்பொருளினை கடற்படையினர் கைப்பற்றினர்

இலங்கை கடற்படையினர், கல்பிட்டியின் இப்பந்திவு கடலோரப் பகுதியில் மேற்கொண்ட சிறப்பு கடற்படை நடவடிக்கையின் போது, மூன்று (03) பைகளில் சந்தேகத்திற்கிடமான போதைப்பொருட்களை ஏற்றிச் சென்ற டிங்கி படகானது 2025 டிசம்பர் 05 ஆம் திகதி இரவு கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது. கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட டிங்கி படகிற்கு உதவுவதற்காக வந்த மற்றுமொரு டிங்கி படகில் இருந்த நான்கு (04) சந்தேக நபர்களுடன், இன்று (2025 டிசம்பர் 06) காலை பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகத்தால் நடத்தப்பட்ட நிபுணர் பரிசோதனையின் மூலம், அந்தப் பைகளில் 63 கிலோகிராமை விட அதிகமான ஐஸ் மற்றும் 14 கிலோகிராமை விட அதிகமான ஹெராயின் இருப்பது உறுதி செய்யப்பட்டதுடன், இந்த நடவடிக்கை தொடர்பாக பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொட மற்றும் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய ஆகியோர் கலந்து கொண்டனர்.

06 Dec 2025