யாழ்ப்பாணம் நெடுந்தீவில் ரூ.14 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள வெளிநாட்டு கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது

யாழ்ப்பாணம் நெடுந்தீவின் வெள்ளை கடற்கரைப் பகுதியில் 2025 டிசம்பர் 07 ஆம் திகதி இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, அந்தக் கடற்கரைப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 62 கிலோகிராம் மற்றும் 200 கிராம் வெளிநாட்டு கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

அதன்படி, வடக்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் வசப நிறுவனம் நடத்திய இந்த சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, வெள்ளை கடற்கரை பகுதியில் மணலுக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு (02) சந்தேகத்திற்கிடமான பைகள் பரிசோதிக்கப்பட்டன. அந்தப் பைகளில் இருந்து சுமார் அறுபத்திரண்டு (62) கிலோகிராம் மற்றும் இருநூறு (200) கிராம் வெளிநாட்டு கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

இந்த நடவடிக்கையின் மூலம் கடற்படையால் கைப்பற்றப்பட்ட கஞ்சா இருப்பின் மொத்த தெரு மதிப்பு பதினான்கு (14) மில்லியன் ரூபாய்க்கு மேல் இருக்கும் என்று நம்பப்படுகிறது, மேலும் அந்த கஞ்சா இருப்பு மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நெடுந்தீவு பொலிஸ் நிலையத்திடம் ஒப்படைக்கப்பட்டது.