'முழு நாடும் ஒன்றாக' என்ற தேசிய பணியில் முக்கிய பங்குதாரராக, கடற்படை தனது நோக்கங்களை அடைவதற்காக தீவைச் சுற்றியுள்ள கடல் பகுதியை உள்ளடக்கிய சிறப்பு கடற்படை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதன் கீழ், இலங்கையின் தெற்கே ஆழ்கடலில் கடற்படையினரால் மேற்கொண்ட வெற்றிகரமான நடவடிக்கையின் போது, போதைப்பொருள் மற்றும் ஆயுதங்களை கொண்டு சென்றதாக சந்தேகிக்கப்படும் உள்ளூர் பல நாள் மீன்பிடிக் படக்கொன்றுடன் (01) ஐந்து (05) சந்தேக நபர்கள் மற்றும், மேற்படி கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் பல நாள் மீன்பிடிக் படக்கொன்றுடன் (01) ஐந்து (05) சந்தேக நபர்களும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.