IUU Fishing-ta

உள்ளூர் கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 01 இந்திய மீன்பிடி படகு வடகடலில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது

இலங்கை கடற்படை, கடலோர காவல்படையுடன் இணைந்து, யாழ்ப்பாணம் நெடுந்தீவுக்கு அருகில் உள்ள இலங்கை கடற்பரப்பில் 2026 ஜனவரி 12 ஆம் திகதி இரவு ஒரு சிறப்பு தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டதுடன், இதன் போது, உள்ளூர் கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த பத்து (10) இந்திய மீனவர்களையும், ஒரு (01) இந்திய மீன்பிடிக் படகையும் கடற்படையினர் கைப்பற்றினர்.

13 Jan 2026

சட்டவிரோத மீன்பிடியை தடுப்பதற்காக கடற்படையினர் மேற்கொண்ட நடவடிக்கைகளில் 13 நபர்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டனர்

இலங்கை கடற்படை 2026 ஜனவரி 06 முதல் 11 வரை உள்ளூர் கடல் பகுதியை உள்ளடக்கிய நடவடிக்கைகளின் மூலம், தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள், வெடிபொருட்கள், உரிமங்கள் இல்லாமல் சுழியோடுதல் மற்றும் சட்டவிரோத மீன்பிடி முறைகளைப் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட நான்கு (04) டிங்கி படகுகளுடன் பதின்மூன்று (13) நபர்களையும் கடற்படையினர் கைப்பற்றினர்.

13 Jan 2026

உள்ளூர் கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட (02) இந்திய மீன்பிடி படகுகள் வடகடலில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது

இலங்கை கடற்படை, 2025 ஜனவரி 02 அன்று இரவு யாழ்ப்பாணம் காரைநகர் கோவிலான் பகுதிக்கு அருகில் உள்ள இலங்கை கடற்பரப்பில் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, உள்ளூர் கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த இரண்டு (02) இந்திய மீன்பிடி படகுகளுடன் ஒன்பது (09) இந்திய மீனவர்களை கடற்படையினர் கைப்பற்றினர்.

05 Jan 2026

உள்ளூர் கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீன்பிடி படகுகொன்று வடகடலில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது

இலங்கை கடற்படை, 2025 ஜனவரி 01 அன்று இரவு யாழ்ப்பாணம் காரைநகர் கோவிலான் பகுதிக்கு அருகில் உள்ள இலங்கை கடற்பரப்பில் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, உள்ளூர் கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த ஒரு (01) இந்திய மீன்பிடி படகுடன் பதினொரு (11) இந்திய மீனவர்களை கடற்படையினர் கைப்பற்றினர்.

02 Jan 2026

உள்ளூர் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீன்பிடி படகொன்று வடகடலில் கைப்பற்றப்பட்டது

இலங்கை கடற்படை, யாழ்ப்பாணம் நெடுந்தீவுக்கு அருகில் உள்ள இலங்கை கடற்பரப்பில் 2025 டிசம்பர் 27 ஆம் திகதி இரவு ஒரு சிறப்பு தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டது, மேலும் உள்ளூர் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்ததற்காக ஒரு (01) இந்திய மீன்பிடி படகு மற்றும் மூன்று (03) இந்திய மீனவர்களை கடற்படையினர் கைப்பற்றினர்.

29 Dec 2025

உள்ளூர் கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீன்பிடி படகுகள் தலைமன்னார் வடகடலில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது

இலங்கை கடற்படையினர் இன்று (2025 டிசம்பர் 23) அதிகாலை தலைமன்னார் வடக்கு கடல் பகுதியில் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, உள்ளூர் கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஒரு (01) இந்திய மீன்பிடி படகு மற்றும் பன்னிரண்டு (12) இந்திய மீனவர்களை கைப்பற்றினர்.

24 Dec 2025

சட்டவிரோத மீன்பிடியை தடுப்பதற்காக கடற்படையினர் மேற்கொண்ட நடவடிக்கைகளில் 26 பேர் கைப்பற்றப்பட்டனர்

இலங்கை கடற்படை, 2025 டிசம்பர் 06 முதல் 15 வரை உள்ளூர் கடல் பகுதியை உள்ளடக்கி மேற்கொண்ட நடவடிக்கைகளின் போது, தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள், வெடிபொருட்கள் மற்றும் சட்டவிரோத முறைகளைப் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொண்ட இருபத்தைந்து (25) நபர்களையும் பதின்மூன்று (13) டிங்கி படகுகளையும் கைப்பற்றியதுடன். மேலும், யாழ்ப்பாண சிறப்பு அதிரடிப் படையுடன் இணைந்து, விற்பனைக்கு தயார் செய்யப்பட்ட முப்பத்தாறு (36) தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளுடன் ஒரு (01) சந்தேக நபரும் கைது செய்யப்பட்டார்.

18 Dec 2025

சட்டவிரோத மீன்பிடியை தடுப்பதற்காக கடற்படையினர் மேற்கொண்ட நடவடிக்கைகளில் 50 பேர் கைப்பற்றப்பட்டனர்

இலங்கை கடற்படை, 2025 அக்டோபர் 27 முதல் நவம்பர் 10 வரை உள்ளூர் கடல் பகுதியில் மேற்கொண்ட நடவடிக்கைகளின் போது, தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள், வெடிபொருட்கள் மற்றும் சட்டவிரோதமான முறைகளைப் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஐம்பது (50) நபர்களுடன் பதினைந்து (13) டிங்கி படகுகள், ஒரு (01) மோட்டார் சைக்கிள் ஆகியவற்றைக் கடற்படையினர் கைப்பற்றினர்.

13 Nov 2025

உள்ளூர் கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட மீன்பிடி படகு வடகடலில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது

இலங்கை கடற்படை, கடலோர காவல்படையுடன் இணைந்து, 2025 நவம்பர் 09 ஆம் திகதி இரவு அனலைதீவுக்கு அருகே இலங்கை கடல் பகுதியில் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, உள்ளூர் கடல் பகுதியில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொண்ட ஒரு (01) இந்திய மீன்பிடி படகு மற்றும் பதினான்கு (14) இந்திய மீனவர்களையும் கடற்படையினர் கைப்பற்றினர்.

10 Nov 2025

உள்ளூர் கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 04 இந்திய மீன்பிடி படகுகள் வடகடலில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது

இலங்கை கடற்படை, கடலோர காவல்படையுடன் இணைந்து, வெற்றிலைக்கேணி மற்றும் அனலைதீவு தீவுக்கு அப்பால் உள்ள இலங்கைக் கடல் பகுதியில் 2025 நவம்பர் 02 ஆம் திகதி மற்றும் இன்று (2025 நவம்பர் 03) அதிகாலையில் சிறப்புத் தேடுதல் நடவடிக்கையின் போது, உள்ளூர் கடல் பகுதியில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த நான்கு (04) இந்திய மீன்பிடி படகுகளையும் முப்பத்தைந்து (35) இந்திய மீனவர்களையும் கடற்படையினர் கைப்பற்றினர்.

03 Nov 2025