Other Contraband-ta

சட்டவிரோதமாக நாட்டிற்குள் ஏலக்காய் கடத்த முயன்ற இரண்டு சந்தேக நபர்கள் கல்பிட்டியவில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டனர்

2026 மார்ச் 31 அன்று கல்பிட்டி கீரிமுந்தலம் கடற்பகுதியில் இலங்கை கடற்படையால் நடத்தப்பட்ட ஒரு சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்குள் இறக்குமதி செய்ய முயன்ற தொண்ணூற்றெட்டு (98) கிலோகிராம் ஏலக்காயை ஏற்றிச் சென்ற (01) ஒரு டிங்கி படகுடன் இரண்டு (02) சந்தேக நபர்களையும் கடற்படையினர் கைப்பற்றினர்.

02 Apr 2026

கல்பிட்டியவில் சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட பொருட்களை கடற்படையினர் கைப்பற்றினர்

இலங்கை கடற்படையானது, 2026 மார்ச் 31 அன்று கல்பிட்டியவின் குடாவ கடலோரப் பகுதியில் நடத்திய ஒரு சிறப்புத் தேடுதல் நடவடிக்கையின் மூலம், சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்பட்டு, அப்பகுதியில் கைவிடப்பட்டிருந்த பொருட்களை கடற்படையினர் கைப்பற்றினர்.

01 Apr 2026

சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வர முயன்ற பீடி இலைகள் மற்றும் சில ஏலக்காய்களுடன் இரண்டு சந்தேக நபர்களை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டனர்

இலங்கை கடற்படையினர் 2026 மார்ச் 15 ஆம் திகதி நடத்திய ஒரு சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட சுமார் ஆயிரத்து இரண்டு (1002) கிலோகிராமுக்கும் அதிகமான பீடி இலைகள் (ஈரமான எடை) மற்றும் நூற்றுப் பதினாறு (116) கிலோகிராம் ஏலக்காய் ஏற்றிச் சென்ற ஒரு டிங்கி படகுடன் (01) இரண்டு (02) சந்தேக நபர்களையும் கடற்படையினர் கைப்பற்றினர்.

19 Mar 2026

சிலாபம் கடற்பகுதியில் சட்டவிரோதமாகக் கடலுக்குள் கடத்தப்பட்ட 1273 கிலோகிராமுக்கும் அதிகமான பீடி இலைகள் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினரால் சிலாபம் கடற்பகுதியில் 2026 மார்ச் 15 ஆம் திகதி நடத்தப்பட்ட ஒரு சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக கடத்தப்பட்டு வந்த சுமார் ஆயிரத்து இருநூற்று எழுபத்து மூன்று (1273) கிலோகிராம் பீடி இலைகளை ஏற்றிச் சென்ற டிங்கி படகொன்றுடன் (01) இரண்டு (02) சந்தேக நபர்கள் கடற்படையினர் கைது செய்யப்பட்டனர்.

19 Mar 2026

சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட உலர்ந்த முந்திரி கொட்டைகளுடன் இரண்டு சந்தேக நபர்கள் புத்தளத்தில் கைது செய்யப்பட்டனர்

கல்பிட்டியின் ஆலங்குடா மற்றும் பங்களாவத்த கடலோரப் பகுதிகளில் இலங்கை கடற்படை 2026 மார்ச் 10 ஆம் திகதி நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சுமார் ஆயிரத்து எண்ணூற்று நாற்பது (1840) கிலோகிராம் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட உலர்ந்த முந்திரி கொட்டைகளுடன், இரண்டு (02) சந்தேக நபர்கள் மற்றும் இரண்டு (02) லொரிகளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.

13 Mar 2026

மாரவில கடலுக்குள் சட்டவிரோதமாக கடத்தப்பட்ட 953 கிலோகிராம் பீடி இலைகளை கடற்படையினர் கைப்பற்றினர்

2026 மார்ச் 03 ஆம் திகதி மாரவில கடல் பகுதியில் இலங்கை கடற்படையினர் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, நாட்டிற்கு கடத்தப்பட்ட சுமார் தொள்ளாயிரத்து ஐம்பத்து மூன்று (953) கிலோகிராம் பீடி இலைகள் கடற்படையினர் கைப்பற்றினர்.

08 Mar 2026

சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட 360 கிலோகிராம் பீடி இலைகள் நீர்கொழும்பு பிடிபன கடல் பகுதியில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன

2026 பிப்ரவரி 26 ஆம் திகதி நீர்கொழும்பு பிடிபன கடல் பகுதியில் இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக கடத்தப்பட்ட சுமார் முந்நூற்று அறுபது (360) கிலோகிராம் பீடி இலைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.

03 Mar 2026

கல்பிட்டியில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 882 கிலோகிராம் பீடி இலைகளை கடற்படையினர் கைப்பற்றினர்

இலங்கை கடற்படை, 2026 பிப்ரவரி 25 ஆம் திகதி கல்பிட்டியின் ஆனவாசல் மற்றும் முகத்துவாரம் பகுதிகளில் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கைகளின் மூலம், சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்டு போக்குவரத்துக்காக தயார் செய்யப்பட்டு, ஒரு புதரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் எண்ணூற்று எண்பத்தி இரண்டு (882) கிலோகிராம் பீடி இலைகளுடன் கெப் வண்டி ஒன்றையும் (01) கடற்படையினர் கைப்பற்றினர்.

27 Feb 2026

சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட பீடி இலைகள், வெளிநாட்டு சிகரெட்டுகள் மற்றும் பூச்சிக்கொல்லிகளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்

இலங்கை கடற்படை, கடலோர காவல்படை திணைக்களத்துடன் இணைந்து, 2026 பிப்ரவரி 21 ஆம் திகதி சிலாபம் மற்றும் தொடுவாவ கடல் பகுதிகளில் ஒரு சிறப்பு கூட்டு தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டது. இதன் போது சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்டு கொண்டிருந்த மற்றும் நாட்டிற்கு சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட தொள்ளாயிரத்து தொன்னூற்று இரண்டு (992) கிலோகிராமை விட அதிகமான பீடி இலைகள், ஒரு லட்சத்து நாற்பதாயிரம் (140,000) வெளிநாட்டு சிகரெட்டுகள், ஒரு தொகை பூச்சிக்கொல்லிகள், இரண்டு (02) சந்தேக நபர்கள் மற்றும் ஒரு (01) டிங்கி படகு ஆகியவை கைப்பற்றப்பட்டன.

24 Feb 2026

சிலாபத்தில் சட்டவிரோதமாக நாட்டிற்கு கடத்தப்பட்ட 1400 கிலோகிராம் பீடி இலைகளை கடற்படையினர் கைப்பற்றினர்

இலங்கை கடற்படையினர், கடலோர காவல்படையுடன் இணைந்து, சிலாபம், முத்துபந்திய மற்றும் ஆரச்சிகடட்டுவவில் உள்ள வைரம்கட்டுவ பகுதியில் 2026 பிப்ரவரி 17, அன்று நடத்திய சிறப்பு கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது, போக்குவரத்துக்கு தயாராகி நாட்டிற்கு கொண்டு வர முயற்சித்த சுமார் ஆயிரத்து நானூற்று ஏழு (1407) கிலோகிராம் பீடி இலைகளுடன் இரண்டு (02) சந்தேக நபர்களும் ஒரு (01) லொரியையும் கடற்படையினர் கைப்பற்றினர்.

18 Feb 2026