Other Contraband-ta

சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட பீடி இலைகளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கல்பிட்டியில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டனர்

இலங்கை கடற்படையினர், 2025 அக்டோபர் 07 ஆம் திகதி கல்பிட்டி நகர எல்லைக்குள், A7 பாதையில் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்டு அவற்றை கொண்டு செல்ல முயன்ற சுமார் அறுநூற்று நாற்பத்து மூன்று (643) கிலோகிராம் பீடி இலைகளை ஏற்றிச் சென்ற இரண்டு (02) சந்தேக நபர்களையும், ஒரு (01) கெப் வண்டியையும் கடற்படையினர் கைப்பற்றினர்.

08 Oct 2025

மன்னாரில் சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 56,870 மருந்து மாத்திரைகளுடன் ஒரு சந்தேக நபர் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டார்

மன்னார் கீரி கடற்கரைப் பகுதியில் 2025 அக்டோபர் 06 ஆம் திகதி அதிகாலை இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட ஐம்பத்தாறாயிரத்து எண்ணூற்று எழுபது (56,870) மருந்து மாத்திரைகள்,அழகுசாதனப் பொருட்கள் மற்றும் மசாலாப் பொருட்களை ஏற்றிச் சென்ற ஒரு (01) டிங்கி படகுடன் ஒரு (01) சந்தேக நபர் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டு மேலதிக சட்ட நடவடிக்கைக்காக முன்னிலைபடுத்தப்பட்டன.

06 Oct 2025

சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட பீடி இலைகளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கல்பிட்டியில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன

இலங்கை கடற்படையினர், 2025 அக்டோபர் 03 ஆம் திகதி கல்பிட்டி துடாவ கடல் பகுதியில் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வர முயன்ற சுமார் நானூற்று ஐந்து (405) கிலோகிராம் பீடி இலைகள், ஒரு (01) டிங்கி படகு மற்றும் இரண்டு (02) சந்தேக நபர்களையும் கடற்படையினர் கைப்பற்றினர்.

04 Oct 2025

கற்பிட்டி களப்பில், சட்டவிரோதமாக கடல் வழியாக கொண்டு செல்ல முயற்சித்த சுமார் 4 கிலோ 454 கிராம் தங்கத்தை ஏற்றிச் சென்ற டிங்கி படகுடன் 02 சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டனர்

கற்பிட்டி களப்பின் அரிச்சல் கடல் பகுதியில் 2025 அக்டோபர் 01 காலை இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சுமார் நான்கு (04) கிலோகிராம் நானூற்று ஐம்பத்து நான்கு (454) கிராம் தங்கத்தை கடத்த முயன்ற இரண்டு (02) சந்தேக நபர்களையும் ஒரு டிங்கி (01) படகையும் கைப்பற்றப்பட்டனர்.

01 Oct 2025

கொழும்பு வேல்ல வீதியில் 1618 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சந்தேக நபரொருவர் கைப்பற்றப்பட்டார்

கொழும்பு வேல்ல வீதிப் பகுதியில் இலங்கை கடற்படை, பொலிஸாருடன் இணைந்து 2025 செப்டம்பர் 30 ஆம் திகதி நடத்திய கூட்டுத் தேடுதல் நடவடிக்கையின் போது, அப்பகுதியில் உள்ள ஒரு கடையில் விற்பனைக்கு தயார்நிலையில் வைத்திருந்த ஆயிரத்து அறுநூற்று பதினெட்டு (1618) வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒரு (01) சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

01 Oct 2025

யாழ்ப்பாணத்தில் 857 சட்டவிரோத மீன்பிடி வலைகளுடன் 2 சந்தேக நபர்கள் கைப்பற்றப்பட்டனர்

யாழ்ப்பாணப் பகுதியில் இலங்கை கடற்படை, பொலிஸ் விசேட அதிரடிப் படையுடன் இணைந்து 2025 செப்டம்பர் 29 ஆம் திகதி நடத்திய சிறப்புத் தேடுதல் நடவடிக்கையின் போது, விற்பனைக்கு தயாராக இருந்த எண்ணூற்று ஐம்பத்தேழு (857) தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளுடன் இரண்டு (02) சந்தேக நபர்கள் கைப்பற்றப்பட்டனர்.

30 Sep 2025

சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வர முயன்ற பீடி இலைகள் மற்றும் பூச்சிக்கொல்லிகளுடன் சந்தேக நபர் ஒருவர் நீர்கொழும்பில் கைது செய்யப்பட்டார்

இலங்கை கடற்படையினர் பொலிஸாருடன் இணைந்து 2025 செப்டம்பர் 24 ஆம் திகதி நீர்கொழும்பு மொரவல கடற்கரையில் நடத்திய சிறப்பு கூட்டு தேடுதல் நடவடிக்கையின் விளைவாக, நாட்டிற்கு சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட சுமார் எண்ணூற்று முப்பத்தைந்து (835) கிலோகிராம் பீடி இலைகள் மற்றும் அறுநூற்று முப்பத்தைந்து (635) கிலோகிராம் பூச்சிக்கொல்லிகளை ஏற்றிச் சென்ற மூன்று (03) டிங்கிகளுடன் சந்தேக நபரொருவர் (01) கைது செய்யப்பட்டனர்.

26 Sep 2025

சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 1197 கிலோகிராம் பீடி இலைகள் உள்ளிட்ட பொருட்களுடன் சிலாவத்துறையில் ஒரு சந்தேக நபர் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டார்

இலங்கை கடற்படை, 2025 செப்டம்பர் 18, அன்று சிலாவத்துறை, பண்டரவேலி கடற்கரைப் பகுதியில் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வர முயன்ற சுமார் ஆயிரத்து நூற்று தொண்ணூற்று ஏழு (1197) கிலோகிராம் பீடி இலைகள், ஆயிரத்து எழுநூற்று அறுபத்தைந்து (1765) சவர்க்கார கட்டிகள் மற்றும் ஒரு (01) டிங்கி படகு ஆகியவற்றுடன் ஒரு (01) சந்தேக நபரும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டார்.

21 Sep 2025

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 1680 கிலோ பீடி இலைகளுடன் 02 சந்தேக நபர்களை நீர்க்கொழும்பு கடல் பகுதியில் கடற்படையினர் கைப்பற்றினர்

இலங்கை கடற்படையினர், 2025 செப்டம்பர் 12 ஆம் திகதி நீர்க்கொழும்பு கடல் பகுதியில் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட சுமார் ஆயிரத்து அறுநூற்று எண்பது (1680) கிலோகிராம் (ஈரமான எடை) பீடி இலைகளை ஏற்றிச் சென்ற ஒரு டிங்கி (01) படகுடன் இரண்டு (02) சந்தேக நபர்களையும் கடற்படையினர் கைப்பற்றினர்.

16 Sep 2025

முகத்துவாரத்தில் 180 வெளிநாட்டு மதுபான போத்தல்களுடன் சந்தேக நபர் ஒருவர் சிக்கினார்

இலங்கை கடற்படை, ஸ்ரீ ஜெயவர்தனபுர பொலிஸ் சிறப்பு அதிரடிப் படையுடன் இணைந்து, 2025 செப்டம்பர் 13 ஆம் திகதி முகத்துவாரம் பகுதியில் மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையின் போது, சட்டவிரோத விற்பனைக்காக தயார்நிலையில் இருந்த நூற்று எண்பது (180) வெளிநாட்டு மதுபான போத்தல்களுடன் ஒரு (01) சந்தேக நபரைக் கைது செய்தனர்.

14 Sep 2025