Other Contraband-ta
இரண்டு வார காலப்பகுதியில் கடற்படை நடத்திய சிறப்பு கூட்டு தேடுதல் நடவடிக்கைகள் மூலம் போதைப்பொருட்களுடன் 10 சந்தேக நபர்கள் கைப்பற்றப்பட்டன
இலங்கை கடற்படையினர், பொலிஸ், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகம் மற்றும் பொலிஸ் சிறப்புப் படை ஆகியவை 2025 ஜூலை 05முதல் 19 வரை கடுகண்ணாவ, அலதெனிய, தவுலகல, கம்பஹா, கட்டுநாயக்க, நிலாவெளி, திருகோணமலை மற்றும் மன்னார், நடுகுடா ஆகிய பகுதிகளில் மேற்கொண்ட சிறப்பு கூட்டுத் தேடுதல் நடவடிக்கைகளின் போது, பத்து (10) கிராம் நாற்பது (40) மில்லிகிராம் ஐஸ், பதினோராயிரத்து எண்ணூற்று அறுபது (11860) வெளிநாட்டு சிகரெட்டுகள், இருநூற்று அறுபத்து நான்கு (264) மாத்திரைகள் மற்றும் முப்பத்து மூன்று (33) மாத்திரை போத்தல்கள், ஐந்து (05) கிலோகிராம் அறுநூறு (600) கிராம் குஷ் போதைப்பொருள்கள், நூற்று நான்கு (104) கிராம் கேரள கஞ்சாவுடன் பத்து (10) சந்தேக நபர்களை கடற்படையினர் கைது செய்தனர்.
21 Jul 2025
சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட பூச்சிக்கொல்லிகள் மற்றும் மசாலாப் பொருட்களுடன் கல்பிட்டியில் 02 சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்
இலங்கை கடற்படையினர், 2025 ஜூலை 17 ஆம் திகதி கல்பிட்டி, இப்பன்தீவு கடல் பகுதியில் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட பூச்சிக்கொல்லிகள் மற்றும் மசாலாப் பொருட்களுடன் இரண்டு (02) சந்தேக நபர்களையும் மீன்பிடி படகொன்றையும் (01) கைது செய்தனர்.
21 Jul 2025
சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 750 கிலோகிராம் பீடி இலைகளை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது
இலங்கை கடற்படையினர், 2025 ஜூலை 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் புத்தளம், சேரக்குளிய, கல்பிட்டி மற்றும் கங்கேவாடிய கடலோரப் பகுதிகளில் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கைகளின் போது, நாட்டிற்கு சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட சுமார் எழுநூற்று ஐம்பது (750) கிலோகிராம் பீடி இலைகளுடன் ஒரு (01) டிங்கி படகு கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.
20 Jul 2025
சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 2828 கிலோகிராம் உலர்ந்த இஞ்சியுடன் சந்தேக நபரொருவர் நுரைச்சோலையில் கைது செய்யப்பட்டார்
இலங்கை கடற்படை மற்றும் பொலிஸாருடன் இணைந்து 2025 ஜூலை 19 ஆம் திகதி நுரைச்சோலை சஞ்சீதவத்தை பகுதியில் நடத்திய சிறப்பு கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் இரண்டாயிரத்து எண்ணூற்று இருபத்தெட்டு (2828) கிலோகிராம் உலர்ந்த இஞ்சியுடன் சந்தேக நபரொருவர் (01) கைது செய்யப்பட்டார்.
20 Jul 2025
இந்நாட்டு கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 02 நபர்கள் கடற்படையினரால் கைது
திருகோணமலை நிலாவெளியில் உள்ள ரெட்ரோக் கடற்கரைப் பகுதியில் 2025 ஜூலை 12 ஆம் திகதி நடத்தப்பட்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, வணிக வெடிபொருட்களுடன் இரண்டு (02) சந்தேக நபர்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் (01) மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கடற்படைக்கு அனுப்பியுள்ளனர்.
17 Jul 2025
சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 1307 கிலோகிராம் பீடி இலைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது
இலங்கை கடற்படையினர், 2025 ஜூன் 30 முதல் ஜூலை 10 வரை புத்தளம் மற்றும் கல்பிட்டி கடற்கரை மற்றும் கடல் பகுதிகளில் கலால் துறையுடன் இணைந்து மேற்கொண்ட சிறப்பு கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட சுமார் 1307 கிலோகிராம் பீடி இலைகளுடன் இரண்டு (02) சந்தேக நபர்களும் இரண்டு (02) டிங்கிகளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.
14 Jul 2025
சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 1330 கிலோகிராம் பீடி இலைகளை கடற்படையினர் கைப்பற்றினர்
இலங்கை கடற்படையினர், 2025 ஜூலை 12 ஆம் திகதி புத்தளம், அக்கரயணத்தீவு பகுதியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையில், சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்டதாக சந்தேகப்படும் சுமார் ஆயிரத்து முந்நூற்று முப்பது (1330) கிலோகிராம் மற்றும் முந்நூறு (300) கிராம் பீடி இலைகள், அப்பகுதியில் உள்ள ஒரு புதரில் மறைத்து வைக்கப்பட்டிருந்தபோது கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.
14 Jul 2025
சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட மசாலாப் பொருட்கள், அழகுசாதனப் பொருட்கள் மற்றும் மருந்துகளுடன் டெவில்ஸ் பொயிண்ட் கடற்கரையில் 04 சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்
கிளிநொச்சியின் டெவில்ஸ் பொயிண்ட் கடலோரப் பகுதியில் இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, நான்கு (04) சந்தேக நபர்களும் இரண்டு (02) வாகனங்களும் சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்டு போக்குவரத்துக்குத் தயாராக இருந்த மசாலாப் பொருட்கள், அழகுசாதனப் பொருட்கள் மற்றும் மருந்துகளின் ஒரு தொகுதியுடன் 2025 ஜூலை 11ஆம் திகதி கைப்பற்றப்பட்டன.
12 Jul 2025
சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவர முற்பட்ட சுமார் 485 கிலோகிராம் பீடி இலைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது
இலங்கை கடற்படையினர், 2025 ஜூன் 29 ஆம் திகதி தலைமன்னார் பழைய பியர் கடற்கரைப் பகுதிக்கு அருகில் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட நானூற்று எண்பத்தைந்து (485) கிலோகிராம் பீடி இலைகளுடன் ஒரு (01) டிங்கி படகு கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.
07 Jul 2025
புத்தளம் மற்றும் கல்பிட்டியில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட பூச்சிக்கொல்லி மற்றும் விதைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன
இலங்கை கடற்படையினர், கடந்த பதினைந்து நாட்களில் (2025 ஜூன் 20 முதல் 30 வரை) நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட பூச்சிக்கொல்லிகள் மற்றும் விதைகளுடன் ஒரு (01) லொரியையும், சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வர முயன்ற பூச்சிக்கொல்லிகளை ஏற்றிச் சென்ற இரண்டு (02) டிங்கி படகுகளையும் கைப்பற்றினர்.
07 Jul 2025


