Search & Rescue-ta
அனர்த்த்த்திற்குள்ளான கேஷான் புதா 1 என்ற பல நாள் மீன்பிடிக் கப்பலின் மீனவர்களை மீட்கும் நடவடிக்கைக்காக சிதுரல கப்பல் தீவை விட்டு புறப்பட்டது
இலங்கைக்கு தெற்கே, ஹம்பாந்தோட்டைக்கு சுமார் 354 கடல் மைல் (655 கிமீ) தொலைவில் ஆழ்கடலில் பாதகமான வானிலை காரணமாக கவிழ்ந்த கேஷான் புதா 1 என்ற பல நாள் மீன்பிடிக் கப்பலில் இருந்து நான்கு (04) மீனவர்கள் கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் ஒருங்கிணைப்புடன் மீட்கப்பட்டதுடன், அவ் மீனவர்களை மீட்கும் நடவடிக்கைக்காக இலங்கை கடற்படையினால், இலங்கை கடற்படை கப்பலான சிதுரல அந்த கடல் பகுதிக்கு அனுப்பப்பட்டது.
30 Oct 2025
கிழக்கு கடலில் நோய்வாய்ப்பட்ட MV IYO கப்பலின் பணியாளர் ஒருவரை சிகிச்சைக்காக தரையிறக்க கடற்படையின் உதவி
கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் ஒருங்கிணைப்பின் கீழ், திருகோணமலைப் பகுதிக்கு அப்பால் கிழக்குக் கடலில் பயணித்துக் கொண்டிருந்த MV IYO என்ற சரக்குக் கப்பலின் மிகவும் நோய்வாய்ப்பட்ட பணியாளர் ஒருவர், இலங்கை கடற்படையின் உதவியுடன் அவசரமாக கரைக்குக் கொண்டுவரப்பட்டு, சிகிச்சைக்காக 2025 அக்டோபர் 26 ஆம் திகதி திருகோணமலை பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
27 Oct 2025
தெற்கு கடலில் முக்கிய இயந்திரங்கள் செயலிழந்து, ஆபத்தில் சிக்கிய MV INTEGRITY STAR வணிகக் கப்பலின் பணியாளர்களை கடற்படை வெற்றிகரமாக மீட்டது
இலங்கைக்கு தெற்கே சுமார் 100 கடல் மைல் தொலைவில் ஆழ்கடலில் அதன் முக்கிய இயந்திரங்கள் செயலிழந்ததால், பேரிடரிலும் உயிருக்கு ஆபத்திலும் இருந்த வணிகக் கப்பலான MV INTEGRITY STAR இன் பணியாளர்கள், கடற்படையினரால் வெற்றிகரமான தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கையில் பாதுகாப்பாக மீட்கப்பட்டு இன்று (2025 அக்டோபர் 26,) காலை ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டனர்.
26 Oct 2025
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக யாழ்ப்பாணம் அனலைதீவு நோக்கி மிதந்து வந்த இந்திய மீன்பிடிக் கப்பலில் இருந்து 03 மீனவர்களை கடற்படை பாதுகாப்பாக மீட்டது
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக செயலிழந்து யாழ்ப்பாணம் அனலைதீவு நோக்கி மிதந்து வந்த இந்திய மீன்பிடிக் கப்பலில் இருந்து மூன்று (03) மீனவர்கள், இலங்கை கடற்படையால் நடத்தப்பட்ட வெற்றிகரமான தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கையின் மூலம் 2025 அக்டோபர் 16 ஆம் திகதி பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
22 Oct 2025
இலங்கையின் தெற்கு கடற்கரையில் ஆழ்கடலில் காலில் காயம் ஏற்பட்டு ஆபத்தான நிலையில் இருந்த மீனவரை கரைக்கு கொண்டு வர கடற்படை உதவி
காலிக்கு தெற்கே 183 கடல் மைல் (சுமார் 338 கி.மீ) தொலைவில் உள்ள ஆழ்கடலில் காலில் காயம் ஏற்பட்டு ஆபத்தான நிலையில் இருந்த உள்ளூர் பல நாள் மீன்பிடி படகில் இருந்த ஒரு மீனவரை கடற்படை இன்று (2025 செப்டம்பர் 18,) அதிகாலையில் கரைக்கு கொண்டு வந்து சிகிச்சைக்காக காலியில் உள்ள கராப்பிட்டிய போதனா மருத்துவமனைக்கு கடற்டையினர் அனுப்பி வைத்தனர்.
18 Sep 2025
திருகோணமலை வெருகலாறு ஆற்றில் மூழ்கிக் கொண்டிருந்த குழந்தையை கடற்படை மீட்டது
திருகோணமலை, வெருகலாறு பகுதியில் உள்ள முருகன் இந்து கோவிலில் நடைபெறும் வருடாந்திர திருவிழாவில் கலந்து கொள்ளும் பக்தர்களைப் பாதுகாப்பதற்காக வெருகலாறு ஆற்றில் உயிர்காக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்த கடற்படை உயிர்காக்கும் படையினரால், 2025 செப்டம்பர் 05 ஆம் திகதி ஆற்றில் மூழ்கிக் கொண்டிருந்த ஒரு (01) குழந்தையை மீட்டனர்.
06 Sep 2025
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தெற்கு கடலில் சிக்கித் தவித்த இலங்கை மீன்பிடிக் கப்பலில் இருந்து 03 மீனவர்களை கடற்படை பாதுகாப்பாக மீட்டது
ஹம்பாந்தோட்டையிலிருந்து சுமார் 38 கடல் மைல் (70 கிலோமீட்டர்) தொலைவில் தெற்கு கடலில் தொழில்நுட்பக் கோளாறால் பாதிக்கப்பட்ட இலங்கை மீன்பிடிக் கப்பலில் இருந்து மூன்று (03) மீனவர்கள் கடற்படையால் நடத்தப்பட்ட சிறப்புத் தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கையின் மூலம் மீட்கப்பட்டு, (2025 ஆகஸ்ட் 30,) அன்று பாதுகாப்பாக கரைக்கு கொண்டு வரப்பட்டது.
01 Sep 2025
காலி மீன்பிடி துறைமுக வளாகத்தில் ஏற்பட்ட திடீர் தீ கடற்படையின் உதவியுடன் வெற்றிகரமாக அணைக்கப்பட்டது
காலி மீன்பிடி துறைமுக வளாகத்தில் பயன்படுத்தப்படாத மீன்பிடி கப்பல்கள் வைக்கப்பட்டுள்ள முற்றத்தில் இருந்த (01) மீன்பிடிக் கப்பலில் ஏற்பட்ட திடீர் தீயை அணைக்கவும், தீ பரவாமல் தடுக்கவும் இன்று (2025 ஆகஸ்ட் 10) தெற்கு கடற்படைக் கட்டளையைச் சேர்ந்த கடற்படை தீயணைப்புக் குழுவினரால் உதவிகள் வழங்கப்பட்டன.
10 Aug 2025
மேற்கு கடலில் கவிழ்ந்த மீன்பிடி படகிலிருந்து 03 மீனவர்களை கடற்படையினர் மீட்டனர்
வத்தளை, பள்ளியவத்தையிலிருந்து சுமார் 02 கடல் மைல் (04 கிலோமீட்டர்) தொலைவில் மேற்கு கடலில் ஏற்பட்ட சீரரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்ட மீன்பிடி படகில் இருந்த மூன்று (03) மீனவர்கள், 2025 ஜூலை 19 ஆம் திகதி இலங்கை கடற்படையினரால் சிறப்பு தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கை மூலம் பாதுகாப்பாக மீட்கப்பட்டதுடன், அதனை டிக்கோவிட்ட துறைமுகத்திற்கு கொண்டு வந்து மேலும் பதப்படுத்துவதற்காக மீன்வள மற்றும் நீர்வளத் துறையிடம் ஒப்படைக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டனர்.
20 Jul 2025
யாழ்ப்பாணம் நெடுந் தீவுக்கு அருகில் கடலில் கவிழ்ந்த “PERL LINK” கப்பலில் இருந்த பயணிகளை கடற்படையின் விரைவான நடவடிக்கையால் பாதுகாப்பாக தரையிறக்க கடற்படை உதவியது
யாழ்ப்பாணத்தின் நெடுந் தீவிலிருந்து குறிகட்டுவான் ஜெட்டிக்கு உள்ளூர் சுற்றுலாப் பயணிகள் குழுவை ஏற்றிக்கொண்டு சென்ற "PERL LINK" என்ற பயணிகள் படகு 2025 ஜூலை 12 ஆம் திகதி கவிழ்ந்ததுடன், பன்னிரண்டு (12) சுற்றுலாப் பயணிகளையும் இரண்டு (02) பணியாளர்களையும் பாதுகாப்பாக தரையிறக்க கடற்படை தேவையான உதவிகளை வழங்கியது.
14 Jul 2025


