இலங்கையின் தெற்கு கடற்கரையில் ஆழ்கடலில் காலில் காயம் ஏற்பட்டு ஆபத்தான நிலையில் இருந்த மீனவரை கரைக்கு கொண்டு வர கடற்படை உதவி

காலிக்கு தெற்கே 183 கடல் மைல் (சுமார் 338 கி.மீ) தொலைவில் உள்ள ஆழ்கடலில் காலில் காயம் ஏற்பட்டு ஆபத்தான நிலையில் இருந்த உள்ளூர் பல நாள் மீன்பிடி படகில் இருந்த ஒரு மீனவரை கடற்படை இன்று (2025 செப்டம்பர் 18,) அதிகாலையில் கரைக்கு கொண்டு வந்து சிகிச்சைக்காக காலியில் உள்ள கராப்பிட்டிய போதனா மருத்துவமனைக்கு கடற்டையினர் அனுப்பி வைத்தனர்.

2025 செப்டம்பர் 04 ஆம் திகதி காலி மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து ஆறு (06) மீனவர்களுடன் மீன்பிடி நடவடிக்கைகளுக்காக புறப்பட்ட மீன்பிடிக்கப்பலான காலிக்கு தெற்கே 183 கடல் மைல் (சுமார் 338 கி.மீ) தொலைவில் இலங்கையின் தெற்கே ஆழ்கடலில் மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்த போது, மீனவர் ஒருவர் சுகவீனமடைந்து ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், மீனவரை சிகிச்சைக்காக கரைக்கு கொண்டு வருவதற்கு கடற்படையினரை உதவுமாறு, கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் கடற்படைத் தலைமையகத்தில் உள்ள கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு நிலையத்திற்கு தகவல் வழங்கினர்.

இந்த அறிவித்தலுக்கு உடனடியாக பதிலளித்த கடற்படையினர், ஆபத்தான நிலையில் இருந்த மீனவரை சிகிச்சைக்காக கரைக்கு கொண்டு வருவதற்காக தெற்கு கடற்படை கட்டளைக்கு இணைக்கப்பட்ட படகொன்று கடற்பகுதிக்கு அனுப்பப்பட்டது. இதன்படி, 2025 செப்டம்பர் 17 ஆம் திகதி இரவு ஆபத்தான நிலையில் இருந்த மீனவரை வேகத் தாக்குதல் படகில் ஏற்றிச் சென்ற கடற்படையினர், மீனவருக்கு அடிப்படை முதலுதவி அளித்து காலி துறைமுகத்திற்கு அழைத்து வந்து மேலதிக சிகிச்சைக்காக இன்று (2025 செப்டம்பர் 18) காலை காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்தனர்.

மேலும், கடற்படைத் தலைமையகத்தில் நிறுவப்பட்ட கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் ஒருங்கிணைப்புடன், இலங்கைக்கு சொந்தமான கடல்சார் தேடல் மற்றும் மீட்பு வலயத்திற்குள் ஆபத்தில் உள்ள கடல்சார் மற்றும் மீனவ சமூகத்திற்கு நிவாரணம் வழங்க கடற்படை ஆயத்தமாக உள்ளது.