நடவடிக்கை செய்தி

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இரண்டு இந்திய மீன்பிடி படகுகள் கடற்படையினரால் கைது

நெடுந்தீவுக்கு அப்பால் இலங்கை கடற்பரப்பில் 2024 மார்ச் மாதம் 16 ஆம் திகதி இரவு இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இருபத்தொரு (21) இந்திய மீனவர்களுடன் இரண்டு (02) இந்திய மீன்பிடிப் படகுகள் கைது செய்யப்பட்டுள்ளது.

17 Mar 2024

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீன்பிடி படகொன்று கடற்படையினரால் கைது

காரைநகர், கோவிலன் கலங்கரை விளக்கத்திற்கு அப்பால் இலங்கை கடற்பரப்பில் இன்று (2024 மார்ச் 15) காலை இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட பதினைந்து (15) இந்திய மீனவர்களுடன் இந்திய மீன்பிடிப் படகொன்று கைது செய்யப்பட்டுள்ளது.

15 Mar 2024

கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கிளிநொச்சியில் கைது

கிளிநொச்சி, உடுத்துறை பகுதியில் 2024 மார்ச் மாதம் 11 ஆம் திகதி பிற்பகல் இலங்கை கடற்படையினரும் பொலிஸாரும் இணைந்து நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது, ஒரு கிலோவிற்கும் அதிகமான கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் (01) ஒருவர் கைது செய்யப்பட்டார்.

12 Mar 2024

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 03 இந்திய மின்பிடி படகுகள் கடற்படையினரால் கைது

கரைநகர் கோவிலன் கலங்கரை விளக்கத்திற்கு அப்பால் இலங்கை கடற்பரப்பிலும், பருத்தித்துறைக்கு அண்மித்த இலங்கை கடற்பரப்பிலும் 2024 மார்ச் 09 ஆம் திகதி இரவிலும், இன்று (2024 மார்ச் 10) காலையிலும் இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கைகளின் போது இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இருபத்தி இரண்டு (22) இந்திய மீனவர்களுடன் மூன்று (03) இந்திய மீன்பிடிப் படகுகள் கைது செய்யப்பட்டது.

10 Mar 2024

சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக பீடி இலைகளை ஏற்றிச் சென்ற டிங்கி படகொன்றுடன் 02 சந்தேகநபர்கள் கல்பிட்டி கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் கைது

கல்பிட்டி, பத்தலங்குண்டுவவிற்கு முன்னால் உள்ள கடற்பரப்பில் 2024 பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி மாலை இலங்கை கடற்படையினர் நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட சுமார் ஆயிரத்து நானூற்று எழுபத்தொரு கிலோகிராம் (1471) பீடி இலைகளுடன் (ஈரமான எடையுடன்) டிங்கி படகொன்று மற்றும் இரண்டு (02) சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

20 Feb 2024

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவர முயற்சித்த 1177 கிலோ கிராமுக்கும் அதிகமான பீடி இலைகள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளுடன் 04 சந்தேகநபர்கள் புத்தளம் சின்னபாடு கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் கைது

புத்தளம், சின்னபாடு கடற்பரப்பில் இலங்கை கடற்படையினர் இன்று (13 பெப்ரவரி 2024) மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவர முயற்சித்த ஆயிரத்து நூற்று எழுபத்தேழு (1177) கிலோகிராமுக்கும் அதிகமான பீடி இலைகள் (ஈரமான எடை) மற்றும் நூற்றி ஐம்பது (150) பூச்சிக்கொல்லி மருந்து போத்தல்களுடன் நான்கு (04) சந்தேக நபர்களும் இரண்டு (02) டிங்கி படகுகளும் கைது செய்யப்பட்டுள்ளது.

13 Feb 2024

தலைமன்னார் பகுதியில் தனியார் காணியொன்றில் ஏற்பட்ட திடீர் தீயை கட்டுப்படுத்த கடற்படையின் உதவி

தலைமன்னார், பீயர்கம பிரதேசத்தில் உள்ள தனியார் காணியொன்றில் 2024 பெப்ரவரி மாதம் 12 ஆம் திகதி ஏற்பட்ட திடீர் தீயை கட்டுப்படுத்தி சுற்றியுள்ள பகுதிகளுக்கு பரவாமல் தடுக்க கடற்படையின் தீயணைப்பு குழுவினர் உதவி வழங்கினர்.

13 Feb 2024

வடக்கு கடலில் சட்டவிரோதமான முறையில் கடல் அட்டைகளை பிடித்த 06 பேர் கடற்படையினரால் கைது

யாழ்ப்பாணம், கல்முனை துடுவ கடல் பகுதியில் இன்று (2024 பிப்ரவரி 12) அதிகாலை இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது செல்லுபடியாகும் அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமான முறையில் கடல் அட்டைகளைப் பிடித்த ஆறு (06) பேர், சுமார் 774 கடல் அட்டைகள், சுழியோடி உபகரணங்கள் மற்றும் ஒரு டிங்கி படகு (01) கைது செய்யப்பட்டன.

12 Feb 2024

1200 போதை மாத்திரைகளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது

இலங்கை கடற்படையினர் மற்றும் மன்னார் பிரிவு பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இனைந்து 2024 பெப்ரவரி 07 ஆம் திகதி சிலாவத்துறை, நானட்டான் பகுதியில் நடத்திய கூட்டுத் தேடுதல் நடவடிக்கையின் போது ஆயிரத்து இருநூறு (1200) போதை மாத்திரைகளுடன் (Pregabalin Capsules) இரண்டு சந்தேகநபர்கள் (02) கைது செய்யப்பட்டனர்.

08 Feb 2024

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 02 இந்திய மின்பிடி படகுகள் கடற்படையினரால் கைது

யாழ்ப்பாணம், நெடுந்தீவுக்கு அப்பால் கடலில் 2024 பெப்ரவரி 07 ஆம் திகதி இரவு இலங்கை கடற்படையினர் கடலோர பாதுகாப்பு திணைக்களத்துடன் இணைந்து மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 19 இந்திய மீனவர்களுடன் இரண்டு (02) இந்திய மீன்பிடிப் படகுகள் கைது செய்யப்பட்டது.

08 Feb 2024