நாட்டிலிருந்து போதைப்பொருள் கடத்தலை ஒழிப்பதற்காக இலங்கை கடற்படை தேசிய பணிக்குழுவில் பங்களித்து தொடர்ச்சியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் படி 2020 ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 3 வரை கடற்படை நடத்திய தேடுதல் நடவடிக்கைகளின் போது, இரண்டு சந்தேக நபர்கள் சட்டவிரோத போதைப்பொருள் மற்றும் பொருட்களுடன் கைது செய்யப்பட்டனர்.