நடவடிக்கை செய்தி

சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட 1236 கிலோகிராம் பீடி இலைகளுடன் 02 சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது

புத்தளம் தளுவ கடற்கரைக்கு அருகில் 2023 செப்டெம்பர் 26 ஆம் திகதி இரவு இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சட்டவிரோதமான முரையில் கொண்டு வரப்பட்டு போக்குவரத்திற்காக தயார் செய்யப்பட்ட பீடி இலைகளுடன் இரண்டு சந்தேக நபர்கள் (1236) கெப் வண்டியொன்று (01) மற்றும் லொறி வண்டியொன்று (01) கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

27 Sep 2023