நடவடிக்கை செய்தி

நிலவி வரும் சீரற்ற காலநிலை எதிர்கொண்டு மக்களுக்கு நிவாரணம் வழங்க கடற்படையின் நிவாரண குழுக்கள் தயார் நிலையில்

நிலவி வரும் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி மற்றும் ஆதரவை வழங்குவதற்காக, இலங்கை கடற்படையினர் இன்று (2023 செப்டெம்பர் 28,) தென் மாகாணத்தில் சில பகுதிகளுக்கு நிவாரணக் குழுக்களை அனுப்பியுள்ளனர்.

28 Sep 2023

சுமார் 33 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா யாழ்ப்பாணம் கரைநகர் தீவில் வைத்து கடற்படையினரால் கைது

யாழ்ப்பாணம் கரைநகர் தீவின் பூமட்டை கடற்கரைப் பகுதியில் 2023 செப்டெம்பர் 27 ஆம் திகதி இரவு இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது 100 கிலோ கிராமுக்கும் அதிகமான (ஈரமான எடை) கேரள கஞ்சா ஏற்றப்பட்ட டிங்கி படகு ஒன்று கைப்பற்றப்பட்டது.

28 Sep 2023

15 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் தெஹிவளையில் கைது

இலங்கை கடற்படையினர் மற்றும் கொழும்பு பொலிஸ் குற்றப்பிரிவின் அதிகாரிகள் இனைந்து 2023 செப்டெம்பர் மாதம் 27 ஆம் திகதி தெஹிவளை பிரதேசத்தில் நடத்திய விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சுமார் 10 கிராம் ஐஸ் போதைப்பொருள் (Crystal Methamphetamine) அடங்கிய பார்சலுடன் சந்தேக நபர் (01) ஒருவர் கைது செய்யப்பட்டார்.

28 Sep 2023

வடக்கு கடற்பரப்பில் சட்டவிரோதமாக கடல் அட்டைகள் பிடித்த 03 பேர் கடற்படையினரால் கைது

யாழ்ப்பாணம் நகர்கோவில் கடற்பரப்பில் 2023 செப்டெம்பர் 27 ஆம் திகதி இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது சட்டவிரோதமான முறையில் கடல் அட்டைகளை பிடித்த மூன்று (03) நபர்கள், சுழியோடி உபகரணங்கள், சுமார் இருநூற்று ஐம்பது (250) கடல் அட்டைகள் மற்றும் ஒரு டிங்கி படகு (01) கைப்பற்றப்பட்டது.

28 Sep 2023