இலங்கையை பாதித்துள்ள மோசமான வானிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதுக்காக தென் மாகாணத்தின் மாத்தறை, அக்குரஸ்ஸ, திஹகொட மற்றும் கம்புறுப்பிட்டிய ஆகிய பகுதிகளுக்கு கடற்படையின் நிவாரணக் குழுக்கள் 2023 ஒக்டோபர் மாதம் 04 ஆம் திகதி முதல் அனுப்பப்பட்டதுடன், கடற்படையின் அனர்த்த நிவாரண நடவடிக்கைகளை பார்வையிட கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா இன்று (அக்டோபர் 08, 2023) மாத்தறை மாவட்டத்திற்கு விஜயம் செய்தார்.