நடவடிக்கை செய்தி

சட்டவிரோதமான முறையில் கடல் அட்டைகள் பிடித்த 09 பேர் கடற்படையினரால் கைது

மன்னார், அரிப்பு கடற்பரப்பில் 2023 நவம்பர் மாதம் 20 ஆம் திகதி காலை இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் கடல் அட்டைகளை பிடித்துக் கொண்டிருந்த ஒன்பது பேர் (09), மீன்பிடி உபகரணங்கள், ஆயிரத்து முன்னூற்று நான்கு கடல் அட்டைகள் (1384) மற்றும் மூன்று (03) டிங்கி படகுகள் கைப்பற்றப்பட்டன.

21 Nov 2023

40 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான கேரள கஞ்சாவை யாழ்ப்பாணம் காரைநகர் கடற்கரையில் வைத்து கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது

யாழ்ப்பாணம், காரைநகர் சாம்பலோடை கடற்கரைப் பகுதியில் 2023 நவம்பர் 20 ஆம் திகதி அதிகாலை இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, குறித்த கடலோரப் பகுதியில் ஒரு முட்புதரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நூற்று ஒறு கிலோ கிராமுக்கு அதிகமான (101) எடையுள்ள (ஈரமான எடை) கேரள கஞ்சாவை கைப்பற்றினர்.

21 Nov 2023