நடவடிக்கை செய்தி
பழுதடைந்த பேராறு நீர்த்தேக்கத்தின் நீர் வெளியேற்றும் கதவுகளை சரிசெய்வதற்கு கடற்படையின் உதவி
பேராறு நீர்த்தேக்கத்தின் பழுதடைந்த வான்கதவுகளை சரிசெய்வதற்காக இலங்கை கடற்படை சுழியோடி பிரிவின் நபர்கள் 2023 டிசம்பர் 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் அர்ப்பணிப்பு பணியை மேற்கொண்டனர். வவுனியா மாவட்டத்தின் பேராறு குளம் பகுதியில் அமைந்துள்ள பேராறு நீர்த்தேக்கத்தில் அண்மையில் பெய்த கடும் மழையினால் தேங்கியுள்ள அதிகப்படியான மழைநீரை வெளியேற்றுவதற்கு வசதியாக இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
18 Dec 2023
இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மின்பிடி படகொன்று கடற்படையினரால் கைது
இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீன்பிடிப் படகுகளை விரட்டுவதற்காக இலங்கை கடற்படையினர் 2023 டிசம்பர் 17 ஆம் திகதி காரைநகர் கோவிலன் கலங்கரை விளக்கத்திற்கு அப்பால் இலங்கை கடற்பரப்பில் மேற்கொண்ட விசேட நடவடிக்கைகளின் போது இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீன்பிடி படகொன்றுடன் பதினான்கு (14) இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
18 Dec 2023


