கல்பிட்டி, பத்தலங்குண்டுவ மற்றும் உச்சமுனே கடற்பரப்பில் 2023 டிசம்பர் 19 ஆம் திகதி இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது இரவு வேளையில் சட்டவிரோதமான முறையில் சுழியோடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட எட்டு (08) பேருடன் மூன்று (03) டிங்கி படகுகள், 1995 கடல் அட்டைகள் மற்றும் சுழியோடி உபகரணங்கள் கைப்பற்றப்பட்டன.