நடவடிக்கை செய்தி

10600 போதை மாத்திரைகளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது

இலங்கை கடற்படையினர் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இனைந்து 2024 ஜனவரி 12 மற்றும் 13 ஆம் திகதிகளில் மிஹிந்தலை மற்றும் தலைமன்னார், கட்டுக்காரயன்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் நடத்திய கூட்டுத் தேடுதல் நடவடிக்கைகளின் போது பத்தாயிரத்து அறுநூறு (10600) போதை மாத்திரைகளுடன் (Pregabalin Capsules), இரண்டு சந்தேகநபர்கள் (02) மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் (01) கைது செய்யப்பட்டது.

14 Jan 2024

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 03 இந்திய மின்பிடி படகுகள் கடற்படையினரால் கைது

யாழ்ப்பாணம், காரைநகர் கோவிலன் கலங்கரை விளக்கத்திற்கு அப்பால் வடக்கடலில் 2024 ஜனவரி 13 ஆம் திகதி மாலை இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 12 இந்திய மீனவர்களுடன் மூன்று (03) இந்திய மீன்பிடிப் படகுகள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டது.

14 Jan 2024