இலங்கை கடற்படையினர் 2024 ஏப்ரல் 05 ஆம் திகதி புல்முடை, ஜின்னாபுரம் கடற்கரைப் பகுதியில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது, குறித்த கடற்கரை பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பொதியொன்றில் இருந்து வாட்டர் ஜெல் எனப்படும் வர்த்தக வெடிமருந்துகளின் ஆறு (06) குச்சிகள், 01 பாதுகாப்பு உருகி மற்றும் 20 மின்சாரமற்ற டெட்டனேட்டர்கள் மீட்கப்பட்டன.