நடவடிக்கை செய்தி

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 29 பேர் கடற்படையினரின் கட்டுப்பாட்டில் உள்ளனர்

இலங்கை கடற்படை; 2024 மே மாதம் 15ம் திகதி அன்று கிளிநொச்சி, சுண்டிக்குளம் மற்றும் கூடாரப்பு கடற்பகுதிகளிலும், மன்னார் தால்பாடு கடற்பரப்பிலும் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளில் சட்டவிரோதமான வலைகளை பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள், மின்சார விளக்குகளை பயன்படுத்தி மீன்பிடித்தல், வணிக வெடிமருந்துகளைப் பயன்படுத்தி இரவு சுழயோடல் மற்றும் மீன்பிடியில் ஈடுபட்ட இருபத்தொன்பது (29) நபர்களுடன், பதினொரு (11) டிங்கிகள், இருநூற்று பத்து (210) கடலட்டைகளும் , சட்டவிரோத மீன்பிடி சாதனங்கள் மற்றும் சுழயோடல் உபகரணங்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

16 May 2024

சிலாவத்துறையில் கடற்படையினரால் சட்டவிரோதமான முறையில் பிடிபட்ட கடலட்டைகளுடன் 02 பேர்

இலங்கை கடற்படையினரால் 2024 மே 14 ஆம் திகதி மாலை சிலாவத்துறை, பண்டரவெளி கடற்கரைப்பகுதியில் ஒரு தேடல் நடவடிக்கை மூலம், போக்குவரத்துக்கு தயார்படுத்தப்பட்டுள்ள சட்டவிரோதமாக பிடிபட்ட கடலட்டைகள் சுமார் மூவாயிரத்து ஐநூறு அளவுடன் (3500) இரண்டு (02) நபர்கள், மற்றும் கெப்வண்டி ஒன்றும் (01) கடற்படையினரால் கைது செய்யப்பட்டது.

16 May 2024