நடவடிக்கை செய்தி
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குதல், பாலங்களை சுத்தம் செய்தல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்கு கடற்படையினரால் தொடர்ச்சியாக உதவி வழங்கப்படுகின்றன
சீரற்ற காலநிலை காரணமாக வெள்ளத்தால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்காக கடற்படையால் நியமிக்கப்பட்ட மீட்புக் குழுக்களால் 2024 ஜூன் 06 ஆம் திகதி நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதுடன், மேலும் முப்பத்தாறு (36) குழுக்கள் நிவாரணப்பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளன. அம்பத்தளை நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் கடும் மழையினால் அடித்துச் செல்லப்பட்ட எரிபொருள் தடையை சீர்செய்தல், கடுவெல ஹெட்டிகே கால்வாயில் தடையாக இருந்த பாரிய மரமொன்றை அகற்றி அதில் தேங்கியிருந்த கழிவுகளை அகற்றும் பணிகள் மற்றும் காலி வக்வெல்ல பாலத்தின் அடிப்பகுதியில் இருந்த குப்பைகளை அகற்றும் பணிகளை இன்று (2024 ஜுன் 06) மேற்கொண்டுள்ளனர்.
06 Jun 2024
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 52 பேர் கடற்படையினரால் கைது
இலங்கை கடற்படையினர் திருகோணமலை, கோபால்புரம் பகுதிக்கு அப்பாற்பட்ட கடற்பகுதியில், பவுல்பொயின்ட கடற்பகுதியில், புல்முடே யான் ஓய முகத்துவாரத்தை அண்மித்துள்ள கடற்பகுதியில், லங்காபடுன கடற்பகுதியில் மற்றும் முல்லைதீவு அலம்பில் கடற்பரப்பில் 2024 ஜூன் 04 ஆம் திகதி முதல் இன்று (2024 ஜூன் 06) வரை மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது சட்டவிரோத வலைகளை பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொண்ட ஐம்பத்திரண்டு (52) நபர்களுடன், பத்து (10) டிங்கி படகுகள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
06 Jun 2024


